Skip to main content

காணாமல் போன ஸ்பெசல் சைல்டு; குடும்பத்தோடு தேடுதல் வேட்டை - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 25

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

 detective-malathis-investigation-25

 

காணாமல் போன ஸ்பெசல் சைல்டு குறித்த வழக்கு பற்றியும், அதில் தாங்கள் புலனாய்வு செய்த விதம் பற்றியும் முதல் பெண் துப்பறிவாளர் மாலதி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்

 

பெற்றோர் தங்களுடைய மகனைக் காணவில்லை என்று நம்மிடம் வழக்கு கொடுத்தனர். மகன் சற்று மனநிலை சரியில்லாதவர். சிறப்பியல்பு குழந்தையாக வளர்க்கப்பட்டவர். அவர் எங்கெங்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறித்து விசாரித்தோம். அவர் மிகவும் குறைவாகவே பேசுவார். தன்னுடைய வீட்டு விலாசம் கூட அவருக்குத் தெரியாது. சாத்தியக்கூறு குறைவாக இருந்தாலும் இந்த வழக்கை நாங்கள் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு விசாரிக்கத் தொடங்கினோம். உணவெல்லாம் எடுத்துக்கொண்டு, குடும்பத்துடன் நாங்கள் தேடுதல் வேட்டையில் இறங்கினோம். 

 

எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் கூட எங்களுடன் வந்தார். அந்தப் பையன் அதற்கு முன்பு நிறைய கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்தோம். அவருக்கு ரயிலில் செல்வது மிகவும் பிடிக்கும். சாப்பாடு மிகவும் பிடிக்கும். கோவில் அன்னதானத்தில் அவர் தென்படுகிறாரா என்பதை அறிய நாங்கள் ஞாயிற்றுக்கிழமை கோவிலில் தேடினோம். அதன் பிறகு மகாபலிபுரத்தில் தேடினோம். எங்கும் அவர் கிடைக்கவில்லை. அவருடைய புகைப்படத்தைக் காட்டி விசாரித்தோம். அவர் உணவை விரும்புபவர் என்பதால் உணவு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தேடினோம். 

 

அவருக்கு ரயில் மிகவும் பிடிக்கும் என்பதால் ரயிலில் தேடினோம். ரயிலில் வியாபாரம் செய்பவர்களிடம் அவருடைய புகைப்படத்தைக் காட்டினோம். அதில் ஒருவருக்கு அவரை அடையாளம் தெரிந்தது. "இப்படி ஒரு பையன் இருக்கிறான். யார் சாப்பாடு கொடுத்தாலும் சாப்பிடுவான்" என்றார் அவர். அந்தப் பகுதியில் எங்களுடைய தேடுதலை நாங்கள் தீவிரப்படுத்தினோம். இறுதியில் தாம்பரம் ஸ்டேஷனில் அந்தப் பையன் கண்டுபிடிக்கப்பட்டான். அவனுடைய பெற்றோரை அழைத்து அவர்களிடம் அவனை நாங்கள் ஒப்படைத்தோம்.

 

கண்டுபிடிக்க வாய்ப்பில்லாத பல வழக்குகளை நான் நிராகரித்திருக்கிறேன். மைனர் குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் போலீஸ் துணையை நாங்கள் நாடுவோம். சட்டப்படிதான் எங்களுடைய தேடுதல் பணி இருக்கும். எங்களிடம் வேலை செய்பவர்களிடம் கூட வழக்கின் முழு விவரங்களை நாங்கள் சொல்ல மாட்டோம். இதுவரை நான்கு முறை மட்டுமே எங்களுடைய ஆட்கள் மாட்டிக்கொண்டுள்ளனர். முன்னதாகவே அவர்களுக்கு நாங்கள் அவ்வளவு பயிற்சியும் கொடுத்துவிடுவோம்.

 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்” - கார்த்தி சிதம்பரம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Karthi Chidambaram says Enforcement should be pulled and closed

 

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று (01-12-23) திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் 15 மணி நேர விசாரணையும், அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேர சோதனையும் நிறைவடைந்து இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இந்த நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று (02-12-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்த விவகாரம் எந்த வகையிலும் எனக்கு வியப்பு அளிக்கவில்லை. என்னை பொறுத்தவரை ஊழல் அதிகாரிகளால் இருக்கும் இயக்கம் தான் இந்த அமலாக்கத்துறை. பல பேர் பெரும் பணம் கொடுத்து தான் இந்த துறையிலே சேர்வார்கள். அவர்கள் லஞ்சம் கொடுத்து தான் இந்த துறையிலே சேருகிறார்கள். அதனால், லஞ்சம் பெற்று தான் அவர்களுடைய முதலீட்டை திருப்புவதற்காக இந்த செயலில் ஈடுபடுகிறார்கள்.

 

அமலாக்கத்துறையினர், சம்பந்தமே இல்லாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியோ அல்லது சம்மன் அனுப்பியோ அவர்களை எல்லாம் மன உளைச்சலை உண்டாக்குகிறார்கள். அதனால்,  பல தொழிலதிபர்கள் வேறு வழியின்றி லஞ்சத்தை கொடுக்கிறார்கள். எனவே, இது அவர்களுடைய வாடிக்கையான நடவடிக்கை தான். அங்கித் திவாரி போல் அங்கு நூற்றுக்கணக்கான அதிகாரிகள் இருக்கிறார்கள். அதனால், இந்த அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்” என்று கூறினார்.  

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

காதல் முறிவை தாங்காத காதலன்; மாணவியை கொன்று ஏரியில் வீசிய வெறிச்செயல்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

the boyfriend who lost his ex-girlfriend and dumped her on the lake shore in italy

 

இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் ஹுலியா சியோஷெத்தின் (22). இவர் வினிடோ மாகாணத்தில் உள்ள பட்ஹா பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், பிலிப்போ டுரிடோ (22) என்ற இளைஞருக்கும் நட்பு ஏற்பட்டது. இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறி காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹூலியாவும், பிலிப்போவும் பிரிந்தனர். 

 

இந்த நிலையில், ஹூலியா படித்து வந்த பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவிருந்தது. இந்த விழாவில் பங்கேற்க புதிய உடை வாங்க ஹூலியா, கடந்த 16ஆம் தேதி வணிக வளாகத்திற்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறி, வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய ஹூலியா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதில், பதட்டமடைந்த அவரது பெற்றோர் இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், இத்தாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

அந்த விசாரணையில், ஹூலியா வீட்டின் வெளியே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஹூலியா வீட்டின் அருகே அவரது முன்னாள் காதலர் பிலிப்போவின் கார் வந்துள்ளது. அதன் பின், பிலிப்போ ஹூலியாவை கொடூரமாக தாக்கி அவரது காரில் வைத்து கடத்திச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, பிலிப்போவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நீண்ட தேடலுக்கு பின்பு பிலிப்போவை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். 

 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், தன்னுடனான காதலை ஹூலியா முறித்ததால், ஆத்திரமடைந்த பிலிப்போ ஹூலியாவை ஆள் நடமாட்டமில்லாத ஏரிக்கரைக்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு ஹூலியாவை கொடூரமாக தாக்கி, கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். அதன் பின்னர், ஹூலியாவின் உடலை அந்த ஏரிக்கரையில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, போலீசார் அந்த ஏரிக்கரைக்கு விரைந்து சென்று அங்கு பிணமாக கிடந்த ஹுலியாவின் உடலை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட பிலிப்போவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்