Skip to main content

மனைவியின் தகாத உறவு; தனிமையில் தவித்த கணவன் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 03

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

Detective Malathi's Investigation : 03

 

தன்னுடைய உளவுப் பணியில் தான் சந்தித்த பல்வேறு விசித்திரமான வழக்குகள் குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

 

தன்னுடைய மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என்று கணவர் எங்களிடம் புகார் கொடுத்தார். ஒரு அரசுப் பள்ளியில் தான் அவர்களைக் கண்டுபிடிக்க முடியும் என்றார். அங்குதான் தன் மனைவி பணியாற்றி வந்ததாகச் சொன்னார். கிராமத்தில் உள்ள அந்தப் பள்ளிக்கு நாங்கள் சென்றோம். வண்டியில் வந்த அந்தப் பெண் திடீரென்று காணாமல் போனார். அவருக்காக நீண்ட நேரம் நாங்கள் அங்கு காத்திருந்தோம். ஒருகட்டத்தில் நீண்ட நேரம் அங்கு நிற்க முடியாது என்பதால் கிளம்பினோம். 

 

அடுத்தடுத்த நாட்களிலும் அந்தப் பெண் எங்களுக்கு கண்ணாமூச்சி காட்டிக்கொண்டே இருந்தார். அவரைப் பிடிப்பது கடினமாக இருந்தது. அங்கிருக்கும் மக்களைப் பயன்படுத்தி ஒருவழியாக அந்தப் பெண்ணின் வீட்டைக் கண்டுபிடித்தோம். வீட்டில் குழந்தை இருந்தது. 27 வயது பையன் ஒருவன் அந்தக் குழந்தையைப் பராமரித்து வந்தான். இந்தப் பெண் தொடர்ந்து பள்ளிக்கு வேலைக்கு சென்று வந்தாள். அவளுடைய கணவருக்குத் தெரியாமல் இது நடந்தது.

 

கணவருக்கு அவருடைய மனைவி மேல் ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால், அது சின்ன பையனாக இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவரால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால், மீண்டும் அந்தப் பெண்ணோடு சேர்ந்து வாழவே அவர் விரும்பினார். போலீஸ் மூலம் அந்தப் பெண் மீண்டும் வீட்டுக்குத் திரும்பினாள். ஆனால், திரும்பவும் அந்தப் பையனுடன் சென்றாள். இதனால் குழந்தையை கஸ்டடியில் எடுக்க வேண்டும் என்று அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டு அந்தப் பையனுடன் சென்றுவிட்டாள் அந்தப் பெண்.

 

எங்களுடைய பணி மிகவும் கடினமான ஒன்றுதான். பல நேரங்களில் பாதுகாப்பு குறைபாடு இருக்கும். சில நேரங்களில் கெட்டப் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஹேக்கிங் என்பது சட்டத்திற்குப் புறம்பானது என்பதால் அதை நாம் செய்வதில்லை. எங்களுடைய பணியின்போது சம்பந்தப்பட்டவர்களின் பெயரை நாங்கள் வெளியிட மாட்டோம். முடிந்தவரை பிரச்சனைகளை வீட்டிலேயே பேசித் தீர்த்துக்கொள்வது சிறந்தது.

 

 

Next Story

பெண்களை ஆசையாக பேச வைப்பது; சபலம் உள்ள ஆண்களிடம் ஆட்டையைப் போடுவது  - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 42

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 detective-malathis-investigation-42

பெண்களுக்கு ஆசை காட்டி பணம் பறிக்கும் கும்பல் பற்றிய வழக்கு குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.

எங்களிடம் வந்திருந்த நபர் சுமார் 90 லட்சம் பணத்தை எங்கேயோ ஏமாந்து கொடுத்திருக்கிறார். அதாவது, ஒரு கிளப் தங்களிடம் மெம்பராக இருந்தால் நிறைய விதமான சலுகைகள் உள்ளன. எனவே மெம்பராக இணையுங்கள் என்றும், உங்களைப் போல நிறைய பெரிய இடத்து நபர்களும் இதில் மெம்பர்களாக இருப்பதாகச் சொல்லி, கிளப்பிற்கு சென்றதும் பெண்களை பேச வைத்து, பழக வைத்து காசை வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாகச் சொன்னார். மிகப் பெரிய நபர் எனவே போலீசிடம் செல்லாமல் என்னிடம் வந்தார். இவர் தான் மட்டும் இல்லாமல் நிறைய நண்பர்களை வேறு சேர்த்து விட்டிருந்தார். இந்த கிளப்பில் நிறைய பெண்களுடன் பேசியும் இருக்கிறார். தன்னை இப்படி ஏமாற்றியவர்களை பற்றி தெரிய வேண்டும் என வந்தவரிடம், நமக்கு தேவையான  தகவல்களை வாங்கினோம்.

இவர் சுதாரித்ததும் அந்த கிளப் நம்பரை மாற்றியுள்ளது பற்றி தெரிய வந்தது. சரி அவரிடம் பேசிய பெண்களின் நம்பர்களை வாங்கி, இவர் பேசினால் அவர்கள் சொன்ன இடத்திற்கு வருவார்கள் என்பதை உறுதி செய்து, தொடர்பு கொண்ட பெண் அங்கே வந்ததும் அங்கிருந்து அவரை பின் தொடர்ந்தோம். அவர் ஒரு கால் சென்டரில் பணிபுரிகிறார் என்பது புரிந்தது. இதுபோல பெண்களை வைத்து அந்த நிறுவனம் ஏமாற்றவே இப்படி பெண்களை நியமித்து இருக்கின்றனர் என்பதை கண்டறிந்தோம். நாம் பின் தொடர்ந்த அந்த பெண்ணும் வெறும் சம்பளத்திற்காக மட்டுமே இந்த வேலையே செய்திருக்கார் என்று தெரியவந்தது.

இவரிடம் விஷயத்தைச் சொல்லி அவர் அவ்வளவு தொகையை எந்த வங்கிக்கு அனுப்பினாரோ அந்த  வங்கி  கிளைக்குச் சென்று அக்கவுண்டின் சில தகவலை வாங்கச் சொன்னோம். அவர் போய் பார்த்ததில் அந்த கணக்கு பணம் வந்த அடுத்த இருபது நிமிடத்தில் தொகையை பல கணக்கிற்கு மாற்றிவிட்டு அக்கௌண்ட் 'நில்' என  வந்திருக்கிறது. இவர் கூட சேர்ந்து பன்னிரண்டு பேரின் தொகை கிட்டத்தட்ட பத்து கோடிக்கு மேல் ஏமாற்றி கணக்கும் மூடிவிட்டனர். ஒரு டீம் செட் செய்து முதலில் பெரிய தொகையாக ஒரேடியாக வாங்காமல், சிறு சிறு தொகையாக வாங்கி அதை சிறிது காலம் கழித்தே பெரிய தொகையாக அதிகரித்துள்ளனர்.

இவர் கிளப் முகவரி பற்றி தெரிந்து ஆரம்பத்திலே சுதாரிக்க ஆரம்பிக்கவும் அவர்கள் எல்லா தொடர்பையும் துண்டித்து விட்டனர். அதனால் தான் அவர்களை ட்ரேஸ் செய்ய முடியவில்லை. தொடர்பு கொண்ட அந்த கால் சென்டர் பெண்ணை மட்டும் கண்டு பிடிக்க முடிந்தது. இவர் குடும்பத்திடமிருந்து மறைத்து கெட்ட வகையில் ஆசைப்பட்டதால் அது அவர்களுக்கே பெரிய மோசடியாக விளைந்துவிட்டது. பெரிய இடத்து நபர்கள் என்பதால் போலீஸ் என்று சென்றால், பத்திரிகை வரை சென்று பெயர் கெட்டுப் போய்விடும் என்று விட்டனர். இதுபோல ஆன்லைனில் தள்ளுபடி, சுலபமாக கோடிக்கணக்கில் லோன் வாங்கித் தருகிறோம் என்றும் விளம்பரம் செய்து தொடர்பு கொள்ளும் நபர்களை நம்புவது மிகப்பெரிய நஷ்டத்தில் போய் முடியும். மக்களின் விழிப்புணர்வினால் மட்டுமே இதுபோல ஏமாற்றுபவர்களை உருவாக்காமல் தடுக்க முடியும்.

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது