Skip to main content

இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக முதல் மனைவியை... - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு : 01

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

Detective Malathi's Investigation : 01

 

முதல் பெண் துப்பறிவாளரான மாலதி அவர்கள் தன்னுடைய துப்பறியும் பணியில் நேர்ந்த அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் பலவற்றை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

துப்பறியும் பணி எனக்கு மகிழ்ச்சியான ஒன்று தான். அடிப்படையில் நான் ஒரு இன்ஜினியர். போர் அடிக்கும் வேலைகளைத் திரும்பத் திரும்ப செய்வதை விட ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களைத் தரும் துப்பறியும் பணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. திருமணம் தொடர்பான பல வழக்குகளை நாங்கள் கையாளுகிறோம். 

 

1993 ஆம் ஆண்டு முதல் நான் இந்தப் பணியில் இருக்கிறேன். அப்போதெல்லாம் திருமணத்திற்கு முன்பு ஒருவரைப் பின்தொடரும் வழக்குகள் தான் அதிகம் வரும். இப்போது திருமணத்திற்குப் பிறகு பின்தொடரும் வழக்குகள் அதிகம் வருகின்றன.

 

ஒருமுறை ஒரு பெண் அவருடைய கணவரை உளவு பார்க்குமாறு கூறினார். ஆன்லைன் விளையாட்டில் பணம் செலுத்தி யாரிடமோ தான் மாட்டிக்கொண்டதாகவும் அதனால் விவாகரத்து வேண்டும் என்றும் கணவர் கூறுவதாகக் கூறினாள் அந்தப் பெண். கடனிலிருந்து தப்பிப்பதற்காக விவாகரத்து செய்துவிட்டு அவர் வெளிநாடு தப்பிச் செல்வதாகத் திட்டம் என்று கூறினார். அவரை நாங்கள் பின்தொடர்ந்த போது தான் தெரிந்தது அவர் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும், அவளோடு வெளிநாடு செல்லத் திட்டமிட்டு இந்த நாடகத்தை நடத்துகிறார் என்றும். அதன் பிறகு பலவாறு முயன்று அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தனர்.

 

டெக்னாலஜியின் வளர்ச்சியால் நன்மையும் தீமையும் சம அளவில் இருக்கின்றன. நம்முடைய முகம் இப்போது எளிதாக வெளியே தெரிகிறது. முடிந்த அளவுக்கு யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் தான் நாங்கள் நடமாடுவோம். டெக்னாலஜி மற்றும் மனித அறிவு இணைந்து பயணிப்பதே சிறந்தது. 60 வயது தந்தையின் ஃபோனில் ஜிபிஎஸ்ஸை ஆன் செய்துவிட்டு அவரை உளவு பார்க்க மகன் கோரினான். ஆனால், அவர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றவுடன் போனையே மாற்றினார். அவருக்கு இன்னொரு குடும்பம் இருப்பது அப்போது தான் தெரிந்தது.

 

வழக்கில் உளவு பார்ப்பதற்கு எந்த வயதினர் தேவையோ அந்த வயதினரை நாங்கள் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும். சிறு வயதில் என்னுடைய பையன் கூட இதில் பணியாற்றியிருக்கிறான். மிகவும் சவால் நிறைந்த பணி என்றாலும் ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்கள் கிடைக்கிறது.

 

 

 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.