தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மகனின் 8 ஆயிரம் கோடி ஊழல்! (CAYMAN ISLANDS FDI SCAM)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bjp-scams.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
பிரதமர் மோடிக்கு நெருக்கமான பாஜகவின் கையாள் என்று சொல்லுமளவுக்கு நெருக்கமான அஜித் தோவலின் மகன் விவேக் ஒரு நிதி நிறுவனத்தை தொடங்கினார். அதாவது பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்ட 13 நாட்களுக்குப் பிறகு 2016 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கினார். இந்த நிறுவனத்துக்கு 2017-18 ஆம் ஆண்டு மட்டும் கேய்மேன் தீவுகளில் இருந்து அன்னிய நேரடி மூலதனமாக 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவுக்கு நிதி குவிந்தது. இந்தத் தொகை மலைக்க வைக்கும் அளவுக்கு பெரியது. அதாவது 2000மாவது ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்த மொத்த நேரடி அன்னிய மூலதனத்துக்கு நிகரானது ஆகும். இந்த நிறுவனத்தின் முக்கியமான இயக்குனரில் ஒருவர் டான் டபுள்யு இபேங்க்ஸ். இவர் பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட ஊழல்வாதிகளின் பட்டியலில் இடம்பெற்றவர்.
சீட்டுக்கம்பெனி ஊழல் (சத்தீஷ்கர்) - CHIT-FUND SCAM (Chhattisgarh)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bjp-scams-2.jpg)
2015 முதல் 2017 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சத்தீஷ்கர் மாநிலம் முழுவதும் 111 சீட்டுக்கம்பெனிகள் 1 லட்சத்து 33 ஆயிரத்து 697 முதலீட்டாளர்களை ஏமாற்றி, 484 கோடியே 39 லட்சத்து, 18 ஆயிரத்து 122 ரூபாயை சுருட்டின. விவசாயிகளும், ஏழை ஜனங்களும் ஏமாற்றப்பட்ட இந்த ஊழலில் ஒருவருக்கும் பணம் திரும்பக் கிடைக்கவில்லை. ஏமாற்றப்பட்ட ஏழை மக்களின் பணம் எப்போது திரும்பக் கிடைக்கும் என்று தங்களால் சொல்ல முடியாது என்று பாஜக தலைவர் கூறிவிட்டார்கள்.
அரசுப் பள்ளிகளை மூடியதில் ஊழல் (ராஜஸ்தான்) -CLOSURE OF GOVT SCHOOLS (RAJASTHAN)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bjp-scams-1.jpg)
ராஜஸ்தான் அரசு 17 அரசுப் பள்ளிகளை மூடியது. இதையடுத்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளிகளை விட்டு வெளியேற நேர்ந்தது. குறைவான மாணவர்கள் வருகையே பள்ளிகள் மூடப்பட்டதற்கு காரணம் என்று அரசு கூறியது. ஆனால், உண்மை அதுவல்ல. தனியார் பள்ளிகளின் லாப நோக்கத்திற்காகவே அந்தப் பள்ளிகளை அரசு மூட உத்தரவிட்டது. பள்ளிகளை விட்டு நின்ற பிள்ளைகளுக்கு தனியார் பள்ளிகளில் சேருவது ஒன்றே வழியாக இருந்தது. இல்லையென்றால் படிப்பைத் தொடராமல் வேறு வேலைகளுக்கு செல்ல வேண்டியதாயிற்று. இது கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது.
ஹெலிகாப்டர் ஊழல் (சத்தீஷ்கர்) -CHOPPER SCAM (CHHATTISGARH)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bjp-scams4.jpg)
2007 ஆம் ஆண்டு சத்தீஷ்கர் அரசுக்காக அகஸ்டா 109 பவர் இ ஹெலிகாப்டர் வாங்கப்பட்டது. ஆனால் ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் குறிப்பிட்ட மாடல் ஹெலிகாப்டரை வாங்குவதற்கு சாதகமாக அதே ஆண்டு முறையற்ற டெண்டர் அறிவிக்கப்பட்டது. அரசு விரும்பிய அம்சங்கள் உள்ள ஹெலிகாப்டர்களை வேறு சில கம்பெனிகளும் தயாரித்த நிலையில் 30 சதவீதம் கமிஷன் கொடுத்து அதாவது சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து இந்த ஹெலிகாப்டர் வாங்கப்பட்டது.
நிலக்கரி ஊழல் (ஜார்கண்ட்) -COAL SCAM (JHARKHAND)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bjp-scams-5.jpg)
ஜார்கண்ட் மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்க உரிமையை குறிப்பிட்ட தனியார் கம்பெனிக்கு வழங்குவதற்காக மோடி அரசின் நிலக்கரி சுரங்கத்துறை அமைச்சர் திலிப் ராய் அரசு விதிகளை தளர்த்தினார். இதையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரிதிஹ் மாவட்டத்தின் பிரமதிஹா நிலக்கரி சுரங்கப் பகுதியில் அந்தக் கம்பெனிக்கு உரிமை வழங்கப்பட்டது. காஸ்ட்ரான் டெக்னாலஜீஸ் என்ற அந்த நிறுவனம் இந்த உரிமையைப் பெற தேவையான வழிகாட்டு முறைகளை பூர்த்தி செய்யாவிட்டாலும் இந்த உரிமை விதிகளை மீறி வழங்கப்பட்டது.
சிதுர்ஜியா ஊழல் (உத்தரகாண்ட்) -CITURGIA SCAM (UTTARAKHAND)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bjp-scams-6.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
உத்தரகாண்ட் மாநில பாஜக முதல்வர் ரமேஷ் பொகாரியால் நிஷாங்க் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார். சிதுர்ஜியா பயோகெமிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை வீடுகட்டும் கம்பெனி ஒன்றுக்கு சாதகமாக வழங்க முதல்வர் ஏற்பாடு செய்தார். அந்த கம்பெனியின் ரிஷிகேஷ் வீடுகட்டும் திட்டத்திற்காக 30 ஏக்கர் நிலத்தை மாற்றிக்கொடுத்து முதல்வர் கோடிக்கணக்கில் லாபம்பெற்றார்.
கடலைமிட்டாய் ஊழல் (மகாராஸ்டிரா) -CHIKKI SCAM (MAHARASHTRA)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bjp-scams-7.jpg)
பாஜக தலைமையிலான மகாராஸ்டிரா அரசின் 206 கோடி ரூபாய் ஊழல் அம்பலமாகியது. பாஜக அமைச்சரான பங்கஜா முண்டே பள்ளிக் குழந்தைகளுக்கு கடலை மிட்டாய் வழங்குவதற்கான டெண்டர் விதிகளை தளர்த்தி, அதாவது, டெண்டரே விடாமல் குறிப்பிட்ட கம்பெனிக்கு ஒப்பந்தம் கொடுத்தார். இதற்காக ஒரே நாளில் 24 தீர்மானங்களை அவர் நிறைவேற்றியிருக்கிறார். 3 லட்சத்திற்கு மேல் யாருக்கேனும் ஒப்பந்தம் கொடுக்க வேண்டுமென்றால் ஆன்லைனில் டெண்டர் கோர வேண்டும் என்பது விதியாகும்.
முந்தைய பகுதி:
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)