Skip to main content

மாமனார் மீது அருவருப்பான பழி சுமத்திய மருமகள்  - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 31

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

 advocate-santhakumaris-valakku-en-31

 

மாமனார் மீது பழி சுமத்திய மருமகள் குறித்த வழக்கு பற்றி குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்.

 

ஆனந்த் என்பவருடைய வழக்கு இது. அவர் ஒரு அப்பாவி. பயந்த சுபாவம் கொண்டவர். அப்பா அம்மாவுக்கு ஒரே பையனான அவருக்கு குடும்பத்தால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பெண்ணின் நடவடிக்கைகள் சற்று வித்தியாசமாக இருந்தன. ஆனால் அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனந்த் ஒல்லியான மனிதர். அதனால் அவருக்கு பெண் கிடைப்பதில் சிரமம் இருந்தது. எனவே இந்த சம்பந்தம் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. திருமணத்துக்கு சில நாட்கள் முன்பு இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று அந்தப் பெண் கூறினாள்.

 

அந்தப் பெண்ணை கன்வின்ஸ் செய்து திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு அந்தப் பெண்ணிடம் எந்த ஒத்துழைப்பும் இல்லை. அந்தப் பெண்ணை தங்களுடைய மகள் போல் கவனித்துக் கொண்டனர் ஆனந்தின் பெற்றோர். சமையலறையே தனக்கு ஆகாது என்றாள் அந்தப் பெண். மாமியாரையும் அவளுக்குப் பிடிக்கவில்லை. அனைத்து வகையிலும் அவளை அவர்கள் அட்ஜஸ்ட் செய்துகொண்டனர். ஆனால் தன்னுடைய அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அவள் நினைத்தாள். நினைத்தபடி சென்றாள். அவனை நிரந்தரமாக தன் அம்மா வீட்டுக்கு அழைத்துச் செல்ல நினைத்தாள். ஆனால் அது நடக்கவில்லை.

 

கணவனின் வீட்டுக்கு அவள் மீண்டும் அழைத்து வரப்பட்டாள். அதன் பிறகு அவளுடைய தாயும் சேர்ந்து மாப்பிள்ளையின் குடும்பத்தை மிரட்ட ஆரம்பித்தார்கள். சின்னச் சின்ன விஷயங்களுக்காக கோபித்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு அவள் செல்லத் தொடங்கினாள். எப்போதும் வீட்டில் சண்டை என்கிற நிலை இருந்தது. ஒருநாள் ஆனந்தை அவள் அடித்து அதில் அவனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. பயத்தில் அவள் மீண்டும் தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றாள். பெண்ணுடைய தாயின் மிரட்டலான பேச்சு அதன் பிறகும் தொடர்ந்தது. ஆனந்த் போலீஸ் ஸ்டேஷன் சென்றான். 

 

போலீஸ் விசாரணைக்கு வந்த அந்தப் பெண், மாமனார் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார் என்கிற பொய்யைச் சொன்னாள். அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. அப்படியான விஷயங்கள் எதுவும் நடக்கவே இல்லை. அதன் பிறகு விவாகரத்து கேட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவளுடைய தவறான போக்கு நீதிமன்றம் உட்பட அனைவருக்கும் புரிந்தது. இறுதியில் ஆனந்துக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. இந்த திருமண வாழ்க்கை ஆனந்துக்கு மன உளைச்சலை மட்டுமே தந்தது. ஆண்களும் பெண்களும் திருமணத்துக்கு ஒப்புக்கொள்வதற்கு முன்பு நிறைய யோசிக்க வேண்டும். பிடித்தால் சேர்ந்து வாழ வேண்டும், இல்லையென்றால் விலக வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தொட்டதுக்கெல்லாம் மிரட்டிய மனைவி; இறுதியில் ஏற்பட்ட முடிவு” - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 42

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

advocate-santhakumaris-valakku-en-42

 

எதற்கெடுத்தாலும் சண்டை போடுகிற பெண்ணிடமிருந்து டைவர்ஸ் பெற்ற ஒருவரது வழக்கு குறித்து குடும்பநல வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மிடையே விவரிக்கிறார்.

 

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த குகநாதன் என்பவருடைய வழக்கு இது. நண்பர்களின் பரிந்துரையின் பேரில் ஒரு பெண்ணின் புரொபைல் வந்து, நிச்சயித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்கு முன்பே பெண் டயாப்பட்டீஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். இதை மாப்பிள்ளைக்கு தெரிவித்தும், எல்லாருக்கும் இயல்பாக வருவது தானே என்றிருந்திருக்கிறார்.

 

திருமணத்திற்கு பிறகு தான் தெரிய வருகிறது. ஒரு நாளைக்கு நான்குமுறை இன்சுலின் ஊசி செலுத்த வேண்டிய நிலையில் பெண் இருந்திருக்கிறாள். இதன் தீவிரத்தன்மை தெரிய வந்ததும் குகநாதன், தன் அக்காவிடம் சொல்லி மருத்துவரை பார்க்க தன் மனைவியை அழைத்திருக்கிறார். அந்த பெண்ணோ “ஏன், இதையெல்லாம் உங்க அக்காவிடம் சொன்ன”? என்று சண்டையிட்டு இருக்கிறாள்.

 

சென்னையில் தங்கி திருவள்ளூரில் வேலை செய்து வருகிற குகநாதனுக்கு, மாலை வந்ததும் அசதியில் படுத்துவிடுவார். ஆனால் வெளியே எங்கேயாவது கூட்டிப்போகுமாறு சண்டையிடுவாள், வார இறுதி நாளில் கூட்டிப்போகிறேன் என்று சொன்னால் அதற்கும் சமாதானம் ஆகாமல் தினமும் சண்டையிடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறாள். சில சமயம் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டு சாப்பிடாமல் இருப்பது, இன்சுலின் போட்டுக்கொள்ளாமல் இருந்து மயக்கநிலைக்கு செல்வதெல்லாம் இருந்திருக்கிறது.

 

அந்த பெண் ஒரு நாள், குகநாதனின் போனை எடுத்துப் பார்த்த போது தன்னுடைய அலுவலகத்தில் ஒரு பெண்ணோடு வெகுநாட்களுக்கு முந்தைய வாட்ஸ் அப் சேட் எடுத்துப் பார்த்து, அந்த பெண்ணோடு தொடர்பாக இருக்குறியா என்று சந்தேகப்பட்டு சண்டையிட்டு இருக்கிறாள். அது பழைய தொடர்பு, இப்போது தொடர்பில்லை என்று சமாதானப்படுத்தியும் சமாதானம் ஆகாமல் சண்டையிட்டு இருக்கிறாள்.

 

இப்படி அடிக்கடி சண்டையிடுவதையே வழக்கமாக வைத்திருப்பதால், மனம் நொந்து போன குகநாதன், தனது அக்கா மகனோடு ஊட்டிக்கு ஒரு சுற்றுலா சென்றிருந்திருக்கிறார். அதை தெரிந்து கொண்டு இப்போ உடனடியாக சென்னைக்கு வராவிட்டால், நான் அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டு சாப்பிடாமல், இன்சுலின் போட்டுக்கொள்ளாமல் இருந்து விடுவேன். எனக்கு எதாவது ஒன்று ஆனால் அதற்கு நீ தான் பொறுப்பு என்பதையும் எழுதி வைத்துவிட்டேன் என்று மிரட்டி இருக்கிறார். அவரும் ஊட்டியிலிருந்து அவசரம் அவசரமாக சென்னைக்கு திரும்பி வந்து அவளை காப்பாற்றியிருக்கிறார்.

 

கொஞ்ச நாளைக்கு உங்க அம்மா வீட்டுக்கு போ என்று அனுப்பி வைத்து விட்டு வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது சாப்பிட கடைக்கு போய் உணவு பார்சல் வாங்கி வந்திருக்கிறார். இதை ஒரு தகவலாக அந்த வீட்டின் வாட்ச் மேன் அந்த பெண்ணுக்கு போனில் சொல்லி இருக்கிறார். உடனே வீட்டிற்கு வந்து நீ வீட்டிற்குள் வேறு பெண்ணோடு இருக்கிறாய் என்று சண்டையிட்டு கதவை திறக்கச்சொல்லி சண்டையிட்டு இருக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியான மன உளைச்சலுக்கும் நெருக்கடிக்கும் உள்ளானதால் டைவர்ஸ் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

 

பெண் வீட்டின் தரப்பிலிருந்து இவர் மீது கொலை மிரட்டல் செய்தார், திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்கள். முன் ஜாமீன் வாங்கி, நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக வழக்காடி குகநாதனுக்கு அந்த பெண்ணிடமிருந்து டைவர்ஸ் வாங்கி கொடுத்தோம். நடுத்தர வர்க்கத்து குடும்பத்தைச் சேர்ந்த, சாதாரண பணியில், சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்த குகநாதனுக்கு பெரிய தொகையினை ஜீவனாம்சமாக தர வேண்டும் என்று பெண் தரப்பில் சொல்லப்பட்டது. நிம்மதியாக வாழ்ந்தால் போதும் என்று கடன் வாங்கி அந்த தொகையை தந்து இப்போது நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறார்.

 

 

 

Next Story

சில நேரங்களில் திருமண வாழ்க்கை ஆண்களுக்கும் நரகம்தான் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 41

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

 advocate-santhakumaris-valakku-en-41

 

தான் சந்தித்த வித்தியாசமான குடும்ப நல சிக்கல்கள் குறித்தும் அதைக் கையாண்ட விதம் குறித்தும் ‘வழக்கு எண்’ தொடர் வழியாக நமக்கு சொல்லப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு வழக்கு குறித்த விவரங்களை வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

பாஸ்கர் என்பவருடைய வழக்கு இது. நல்ல வேலை, சமூகத்தில் பொறுப்பான இளைஞராகவும், குடும்பத்திற்கு சிறந்த பிள்ளையாகவும் இருந்து வருபவர். நிட்சய திருமணம்தான் நடக்கிறது. கல்யாணமானதிலிருந்தே கணவன் மீதான அதிகப்படியான அன்பினை எல்லோரின் முன்னிலும் தெரிய வைக்கிற பெண்ணாக இருக்கிறாள். அதாவது எல்லோரின் முன்னிலும் கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது அவளது வழக்கமாக இருந்திருக்கிறது.

 

ஆனால் பாஸ்கருக்கோ படுக்கையறை தவிர மற்ற இடங்களிலோ, பெற்றோரின் முன்னிலையிலோ கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பதெல்லாம் அவருக்கு பிடிக்கவில்லை. இதை அவளிடம் எடுத்துச் சொன்னால் “என்னை பிடிக்கவில்லையா? என் மீது காதல் இல்லையா?” என்றெல்லாம் அழுது அடம்பிடிப்பவளாகவும், அறைக்கதவை சாத்திக்கொண்டு நீண்ட நேரமாகியும் கதவை திறக்காமலும் இருப்பவளாக இருந்திருக்கிறாள்.

 

இந்த நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக பாஸ்கரின் அம்மா பெண்ணின் அக்காவிடம், உங்க வீட்டு பிள்ளை இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று ஒரு புகாரை சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த அக்காவும் தங்கையை அழைத்து கண்டித்திருக்கிறாள். இதற்கு பழிவாங்கும் விதமாக மாமியாரை பூரிக் கட்டையைக் கொண்டு அந்த பெண் ஒரு நாள் பலமாகத் தாக்கியிருக்கிறாள்.

 

அலுவலகம் சென்ற பாஸ்கர் பதறிப்போய் வீட்டிற்கு வந்து அம்மாவை மருத்துவமனை அழைத்து சென்றிருக்கிறார். மனைவியும் கொஞ்ச நாளைக்கு அவளது அம்மா வீட்டிலேயே இருக்கட்டும் என்று விட்டு வந்திருக்கிறார். அந்த பெண்ணின் தம்பி ஒருவர் அக்காவிற்காக பரிந்து பேசி பாஸ்கர் வீட்டில் விட்டுச் சென்றிருக்கிறார்.

 

அம்மாவை அடித்ததால் சில நாட்களாக வீட்டில் இருந்த மனைவியிடம் பேசாமல் இருந்திருக்கிறார் பாஸ்கர். ஆனால் அவரை கட்டாயப்படுத்தி உடலுறவுக்கு அழைத்திருக்கிறாள். ஆனால் அதற்கு விருப்பம் தெரிவிக்காத பாஸ்கரை மிரட்டும் விதமாக மொட்டை மாடிக்குச் சென்று கீழே குதித்து விடுவதாக கொலை மிரட்டலும் விட்டிருக்கிறாள்.

 

அக்காவை அழைத்து வந்த தம்பியிடம் சொல்லி சிறிது நாளைக்கு பிரிந்து இருக்கலாம் என்று முடிவெடுத்த பாஸ்கருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த பெண், தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்திருக்கிறாள். தன்னுடைய அம்மாவை பூரிக்கட்டையால் தாக்கினாள் என்று பாஸ்கர் தன் பங்கிற்கு சொல்ல, அவளோ பாஸ்கரின் அம்மா தானே தாக்கிக்கொண்டு பழியை தன் மீது போடுவதாக காவல்நிலையத்தில் சொல்லி இருக்கிறாள்.

 

இனிமேல் இவளோடு வாழ முடியாது என்று முடிவெடுத்த பாஸ்கர். டைவர்ஸ்க்கு அப்ளை செய்தார். ஆனால் இவள் செய்த எந்த குற்றத்தையும் அவள் ஒப்புக்கொள்ளவில்லை, நல்வாய்ப்பாக இவள் தற்கொலை முயற்சி செய்ததை பாஸ்கரின் அம்மா வீடியோ எடுத்து வைத்திருந்திருக்கிறார்கள். அதை ஆதாரமாகக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவதும் ஒரு வகை குற்றச்செயல் தான் என்று பாஸ்கருக்கு அந்த பெண்ணிடமிருந்து டைவர்ஸ் வாங்கி கொடுக்கப்பட்டது.

 

திருமண வாழ்க்கை பல சமயம் ஆண்களால் பெண்களுக்கு கொடுமை நிகழ்த்தப்பட்டு நரக வாழ்க்கை ஆகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறோம், பார்த்திருப்போம். ஆனால் இப்பொழுதெல்லாம் பெண்களால்தான் சில ஆண்களின் வாழ்க்கை நரகமாக்கப்படுகிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.