Skip to main content

டோக்கியோ ஒலிம்பிக்ஸின் ஏழாவது நாள்: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்!

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

pv sindhu and satish kumar

 

2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

 

இந்தநிலையில், டோக்கியோ ஒலிம்பிக்ஸின் ஏழாவது நாளான இன்று (29.07.2021), இந்திய ஆடவர் ஹாக்கி அணி, நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. பேட்மிண்டனில் இந்தியாவின் பி.வி. சிந்து, டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

 

அதேபோல், குத்துச்சண்டை ஹெவி - வெயிட் பிரிவில் (+91 கிலோ) இந்திய வீரர் சதீஷ்குமார், ஜமைக்காவின் ரிக்கார்டோ பிரவுனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். வில்வித்தையில் இந்திய வீரர் அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

 

Next Story

காமன்வெல்த் போட்டி: பேட்மிண்டனில் ஒரேநாளில் மூன்று தங்கம் வென்று இந்திய வீரர்கள் அசத்தல்! 

Published on 08/08/2022 | Edited on 08/08/2022

 

Commonwealth Games: Indian players won three golds in one day in Badminton!

 

காமன்வெல்த் விளையாட்டின் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் கனடா வீராங்கனை மிஷெல் லீயை 21- 15, 21- 13 ஆகிய நேர் செட்களில் வென்றார். காமன்வெல்த் போட்டியின் தனிப்பிரிவில் முதல்முறையாக தங்கப் பதக்கம் வென்று பி.வி.சிந்து அசத்தியுள்ளார். 

 

அதேபோல், காமன்வெல்த் பேட்மிண்டன் ஆடவர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் மலேசியாவின் சீ யாங்கை 19- 21, 21- 9, 21- 16என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

 

இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் சிராக் ஷெட்டி, சாய்ராஜ் சாத்விக் இந்திய இணை, இங்கிலாந்தின் பென், ஷான் இணையை வீழ்த்தி தங்கம் வென்றது. காமன்வெல்த் பேட்மிண்டனில் ஒரே நாளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். 

Commonwealth Games: Indian players won three golds in one day in Badminton!

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சரத் கமல், இங்கிலாந்தின் லியாம் பிட்ச்ஃபோர்டை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். 

 

22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என 61 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

 

Next Story

காமன்வெல்த் போட்டிகள்: தங்கம் வென்றார் பி.வி.சிந்து 

Published on 08/08/2022 | Edited on 08/08/2022

 

PV Sindhu

 

காமன்வெல்த் பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்றார்.

 

22ஆவது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 72 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் இந்தியா இதுவரை 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்கள் வென்றுள்ளது. 

 

இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பி.வி. சிந்து தங்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் கனடா வீராங்கனையை 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் இந்தத் தொடரில் இந்தியா வென்ற தங்கப் பதக்கத்தின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.