Skip to main content

ராஜஸ்தான் அணிக்கு வழிகாட்டியாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் நியமனம்!!!

Published on 15/09/2020 | Edited on 15/09/2020

 

IPL

 

 

கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் தொடர் வரும் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. தொடக்க போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. அனைத்து அணி நிர்வாகங்களும், தங்கள் அணியை பலப்படுத்தும் வேலையில் தீவிரமாக உள்ளன. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தங்கள் அணிக்கான வழிகாட்டியாக ஆஸ்திரேலிய மூத்த வீரர் ஷேன் வார்னேவை நியமித்துள்ளது. இவர் ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் விளம்பரத் தூதராகவும் செயல்பட்டு வருகிறார்.

 

இதுகுறித்து வார்னே கூறும் போது, "ராஜஸ்தான் அணிக்கு இரண்டு விதமான பங்களிப்பை அளிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உலக அளவில் ராஜஸ்தான் அணியை கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. வரும் ஐபிஎல் தொடர் எங்களுக்கு சிறப்பானதாக அமையும் என்று நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தன்னுடைய முதல் போட்டியில் சென்னை அணியுடன் வரும் 22-ம் தேதி மோத இருக்கிறது.