Skip to main content

இலங்கையில் களமிறங்கும் ஜூனியர் சச்சின்!!

Published on 08/06/2018 | Edited on 08/06/2018

 

sachin with arjun

 

 

 

இந்திய கிரிக்கெட் வீரர்களில் சிறந்த வீரர் என்றும். உலகளவில் பிராட்மேனுக்கு நிகராக பேசப்பட்டவர் சச்சின் டெண்டுல்கர். தற்போது அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 19 வாயத்துக்குடிப்பட்டோர் தேசிய இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

   

 

 

அர்ஜுன் மண்டல அளவிலான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 18 வயதாகும் இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளரும், பேட்ஸ்மேனுமாக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். 19 வயத்துக்குட்பட்டோர் மண்டல முகாமில் கலந்துகொண்டு, தன் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து இலங்கையில் நடக்க இருக்கும் u19 போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி, 2 நான்கு நாள் போட்டியிலும், 5 ஒருநாள் போட்டியிலும் விளையாட உள்ளது. இதில், 4 நாள் போட்டிக்கான அணியில் அர்ஜூன் இடம் பெற்று விளையாடுகிறார்.