Skip to main content

"எங்களுக்கு தனிமை தேவைப்படுகிறது" - குழந்தை மரணத்தால் வேதனையில் ரொனால்டோ 

Published on 19/04/2022 | Edited on 19/04/2022

 

Ronaldo in agony over his new born child demise

 

போர்ச்சுகலைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான ரொனால்டோ, தனக்கு சமீபத்தில் பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார். 

 

ரொனால்டோ - ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தம்பதிக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில், தனக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க இருப்பதாக கடந்த அக்டோபரில் ரொனால்டோ தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ரொனால்டோ நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், சமீபத்தில் தனக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.  

 

புதிதாக பிறந்த மற்றொரு பெண் குழந்தை நலமாக இருப்பதாக தெரிவித்துள்ள ரொனால்டோ, இது அனைத்து பெற்றோர்களும் உணரக்கூடிய கடினமான வலி என்றும் புதிதாக பிறந்த பெண் குழந்தைதான் இந்தத் தருணத்தை நம்பிக்கையுடனும் மகிழ்வுடனும் வாழ்வதற்கான வலிமையைத் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும் அந்த அறிக்கையில், இந்த இழப்பால் கடுமையாக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில், எங்களுக்கு தனிமை தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.