Skip to main content

“ரோஹித் சர்மா ஓய்வு எடுக்க வேண்டும்” - சுனில் கவாஸ்கர் 

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

“Rohit Sharma should take a break” - Sunil Gavaskar

 

16 ஆவது ஐபிஎல் சீசனின் 35ஆவது லீக் போட்டி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 207 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக கில் 56 ரன்களையும் மில்லர் 46 ரன்களையும் அபினவ் மனோகர் 42 ரன்களையும் எடுத்தனர். மும்பை அணியில் சாவ்லா 3 விக்கெட்களையும் அர்ஜுன் டெண்டுல்கர், பெஹ்ரெண்ட்ராஃப், மெரிட்ரித் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இன்றைய போட்டியில் 207 ரன்களை குவித்ததன் மூலம் குஜராத் அணி தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன்பு கொல்கத்தா அணிக்கெதிராக 204 ரன்களை குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த போட்டியில் குஜராத் அணி கடைசி 5 ஓவர்களில் மட்டும் 77 ரன்களை குவித்திருந்தது.

 

208 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மும்பை அணி 90 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து திணறியது. இறுதியில் வதேரா கொஞ்சம் ரன்களை அடிக்க மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

 

இந்த போட்டியில் மும்பை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது குறைந்தபட்ச பவர்ப்ளே ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இது அந்த அணிக்கு இரண்டாவது முறை. முன்னதாக பெங்களூர் அணிக்கு எதிராக 29 ரன்களை எடுத்திருந்தது. முதல் இடத்தில் குஜராத்திற்கு எதிராக ராஜஸ்தான் அணி 26 ரன்களை எடுத்திருந்ததே குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது. 

 

“Rohit Sharma should take a break” - Sunil Gavaskar

 

நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 3ல் மற்றுமே வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 7 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள ரோஹித் சர்மா 182 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 65 ரன்களை எடுத்துள்ளார். 

 

இதுகுறித்து கூறியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், “மும்பை இந்தியன்ஸ் அணியில் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். உண்மையாகவே, ரோகித் சர்மா இந்த சீசனில் இருந்து கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஓய்வின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முழு உடற்தகுதியுடன் இருக்க முடியும். ரோஹித் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் வேண்டுமானால் மீண்டும் விளையாட வரலாம். ஆனால், இப்போதைக்கு அவர் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

அவர் தற்போது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து யோசித்துக் கொண்டிருக்கக் கூடும். எனக்குத் தெரியவில்லை. எனக்கு தெரிந்து அவருக்கு இச்சமயத்தில் சிறிது ஓய்வு வேண்டும் என நம்புகிறேன். அவர் இறுதி மூன்று அல்லது 4 போட்டிகளில் மீண்டும் விளையாட வேண்டும் அப்போது அவருக்கு உலகக் கோப்பைக்கான ஒரு நிலைத்தன்மை கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.

 

மும்பை அணி அடுத்து ராஜஸ்தான் அணியை தனது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுடனான இரு தோல்விக்குப் பின் ராஜஸ்தான் அணியுடன் வரும் ஏப்ரல் 30ல் மோதுவதால் அப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி உள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்; இந்திய அணி அபாரம்

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Match against Afghanistan; Indian team is great

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.

 

அந்த வகையில், டெல்லி மைதானத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் மோதின. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 272 ரன்களை எடுத்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹஸ்மத்துல்லா 80 ரன்களையும், அஸ்மத்துல்லா 62 ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணிக்கு 273 ரன்களை இலக்காக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்தது. இந்திய அணியில் பும்ரா 4 விக்கெட்களையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்களையும், ஷர்துல், குல்தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களையும் எடுத்திருந்தனர்.

 

இதனைத் தொடர்ந்து 273 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 84 பந்துகளில் 131 ரன்களை விளாசினார். 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை இந்திய அணி குவித்தது. இதன் மூலம் உலகக் கோப்பை லீக் தொடரில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 

Match against Afghanistan; Indian team is great

 

அதுமட்டுமின்றி உலகக் கோப்பை தொடரில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். இந்த போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் சர்வதேச அளவில் 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மேலும் உலகக் கோப்பை தொடரில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோஹித் ஷர்மா. இதன் மூலம் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் பட்டியலில் இருந்த சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்து தற்போது ரோகித் சர்மா முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“ரோஹித் சர்மா பயோபிக்கில் விஜய் சேதுபதி” - தமன்னா விருப்பம்

 

tammanna choice of cricketers biopic

 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 நடைபெற்று வரும் நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை இலங்கை கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

 

இதனிடையே நேற்று நடந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கான போட்டியின் இடைவெளியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமன்னாவிடம் வீரர்கள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களின் பயோபிக்கில் யாரெல்லாம் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

 

அதற்குப் பதிலளித்த தமன்னா, ரோஹித் சர்மாவின் பயோபிக்கில் விஜய் சேதுபதியும், ஹர்திக் பாண்டியா பயோபிக்கில் தனுஷும், ஜடேஜாவின் பயோபிக்கில் அல்லு அர்ஜுனும், விராத் கோலி பயோபிக்கில் ராம் சரணும் நடித்தால் நன்றாக இருக்கும்" என அவரது விருப்பத்தைப் பதிலாக அளித்தார். 

 

முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் ராம் சரண், விராத் கோலி பயோபிக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அதுபோன்ற ஐடியா இப்போதைக்கு இல்லை என அவர் கூறியதாக அண்மையில் தகவல் வெளியானது.