Skip to main content

"அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்" - சுரேஷ் ரெய்னா

Published on 06/09/2022 | Edited on 06/09/2022

 

"Retiring from all forms of competition" - Suresh Raina

 

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார். 

 

மிஸ்டர் ஐபிஎல் என ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா தனது ஓய்வு அறிவிப்பை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் . இது குறித்து பதிவிட்ட அவர் பிசிசிஐ, சென்னை சூப்பர் கிங்ஸ், உத்தரப்பிரதேச கிரிக்கெட் அணிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த  2020ம் ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்த சுரேஷ் ரெய்னா தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடினார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் எந்த ஐபிஎல் அணி நிர்வாகமும் இவரை  ஏலம் எடுக்காத நிலையில் ஐபிஎல் தொடரின் வர்ணனையாளராக பணியாற்றினார்.

 

ஓரிரு தினங்கள் முன்பு மீண்டும் பயிற்சிக்கு திரும்பியதாக தனது சமுக வலைதளங்களில் பதிவிட்ட வீடியோ நாடெங்கும் வைரல் ஆனது. ஆனால் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார். 

 

 

Next Story

சுரேஷ் ரெய்னா குறித்து சூர்யா

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
suriya about suresh raina

ஐபிஎல் தொடர், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றதை அடுத்து, தற்போது அதே பாணியில் இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் என்ற புதிய கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களைப் போன்று விளையாட வேண்டும் என்ற கனவோடு உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்காக இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஸ்ரீ நகர் என 6 அணிகள் பங்கேற்கவுள்ளன. சென்னை அணியை சூர்யாவும், மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்‌ஷய் குமாரும், ஐதராபாத் அணியை ராம்சரணும் வாங்கியுள்ளனர். 

இந்த போட்டி நேற்று (06.03.2024) மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. அப்போது சச்சின், சூர்யா, அக்‌ஷய் குமார், ராம் சரண், ரவிசாஸ்திரி ஆகியோர் ஆர்.ஆர்.ஆர் பட பாடல் ‘நாட்டு நாட்டு...’ பாடலுக்கு நடனமாடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. பின்பு இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் கலந்து கொண்ட நிலையில், அவரை சூர்யா தனது குழந்தைகளுடன் சந்தித்தார். 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சுரேஷ் ரெய்னா, தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, சூர்யா குடும்பத்தை சந்தித்தது மகிழ்ச்சி என்றும் விரைவில் சென்னையில் சந்திப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் சுரேஷ் ரெய்னாவின் பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சூர்யா, “வாழ்நாள் முழுவதும் உள்ள மெமரிஸ் பிரதர். உங்கள் அன்பிற்கு நன்றி. விரைவில் சென்னையில் சந்திப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ரெய்னாவின் சாதனையை நெருங்கும் கோலி; சுருண்ட ராஜஸ்தான்; பெங்களூர் அபாரம்

Published on 14/05/2023 | Edited on 14/05/2023

 

kohli closes in on Raina's record; Curly Rajasthan; Bangalore is awesome

 

16 ஆவது ஐபிஎல் தொடரின் 60 ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் - ராஜஸ்தான் அணிகள் மோதின. ஜெய்ப்பூர் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக டுப்ளசிஸ் 55 ரன்களையும் மேக்ஸ்வெல் 54 ரன்களையும் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் ஆசிஃப், ஜாம்பா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். சந்தீப் சர்மா 1 விக்கெட்டை கைப்பற்றினார். 172 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 10.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 59 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. சிறப்பாக பந்து வீசிய பெங்களூர் அணியில் பேர்னல் 3 விக்கெட்களையும் கரண் சர்மா, ப்ரேஸ்வெல் தலா 2 விக்கெட்களையும் மேக்ஸ்வெல், சிராஜ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் ஜாம்பா பந்துவீச்சில் வெளியேறினார். ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை ரோஹித் சர்மாவுடன் தினேஷ் கார்த்திக் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் இதுவரை 16 முறை டக் அவுட் ஆகியுள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் அல்லாது அதிக கேட்ச்கள் பிடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 104 கேட்சுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். முதலிடத்தில் சுரேஷ் ரெய்னா 109 கேட்சுகளுடன் உள்ளார். ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் 4 முறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் ஜாஸ் பட்லரும் இணைந்துள்ளார். அவர் இன்றைய போட்டியுடன் சேர்த்து நடப்பு ஐபிஎல் தொடரில் 4 முறை டக் அவுட் ஆகியுள்ளார். 

 

இன்றைய போட்டியில் 59 ரன்களை மட்டும் எடுத்ததன் மூலம் ராஜஸ்தான் அணி தனது இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் பெங்களூர் அணிக்கு எதிராக 2009 ஆம் ஆண்டில் 58 ரன்களை எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. ஐபிஎல் போட்டிகளில் மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோரை ராஜஸ்தான் அணி இன்று பதிவு செய்துள்ளது.