rahane

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட்போட்டியில், இந்தியஅணி அபாரவெற்றி பெற்றது. இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்துபும்ரா6 விக்கெட்டுகளையும், அஸ்வின்மற்றும் சிராஜ்ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சிறப்பாக ஆடி சதமடித்த ரஹானேஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisment

வெற்றிக்குபிறகு பேசியகேப்டன்ரஹானே, வீரர்களைநினைத்து பெருமைப்படுவதாககூறினார். மேலும் அறிமுக வீரர்கள்சிறப்பாக ஆடியதாகவும் ரஹானேபாராட்டியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர், "வீரர்களைநினைத்து பெருமை கொள்கிறேன். அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள். அறிமுக வீரர்கள்சிராஜ்மற்றும் சுப்மன்ஆகியோர், அடிலெய்ட் தோல்விக்கு பிறகு ஆடியவிதம் பார்க்க சிறப்பாக இருந்தது. சுப்மன்கில்லின்முதல் தர கிரிக்கெட்கேரியர்பற்றி நாம் அறிவோம். சர்வதேச தரத்திலானபோட்டிகளிலும் அடித்து ஆடும் விருப்பத்தை காட்டியுள்ளார். சிராஜ்தன்னால்கட்டுக்கோப்பாக பந்து வீச முடியும் எனகாட்டியுள்ளார். அறிமுக வீரர்கள்கட்டுகோப்பாக பந்து வீசுவது மிகவும் கடினம். இதில்தான் முதல் தர கிரிக்கெட்அனுபவம் கைகொடுக்கும் எனநினைக்கிறேன்.

நாங்கள் பேசியதெல்லாம் களத்தில் நமதுமனப்பான்மையையும், நோக்கத்தையும் வெளிக்காட்ட வேண்டும் என்பதே. உமேஷ்யாதவ்தேறி வருகிறார். ரோகித் சர்மா அணிக்குதிரும்ப இருப்பதுகுறித்துஉற்சகமடைந்துள்ளோம். நேற்று அவருடன் பேசினேன். அவர் அணியோடுஇணைய காத்துக்கொண்டிருக்கிறார்" எனகூறியுள்ளார்.