Skip to main content

‘பலநாள் கனவே ஒரு நாள் நனவே..’- பாக். பேத்திக்காகக் காத்திருக்கும் இந்தியத் தாத்தா!

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

Pakistani cricketer Hasan Ali's daughter met by her grandfather in India for first time

 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி, இந்தியாவை சேர்ந்த லியாகத் கானின் மகள் சாமியா அர்சூவை திருமணம் செய்தார். இந்தியா-பாகிஸ்தான் இடையே பயணம் செய்ய முடியாததால், நான்கு வருடங்களாகியும் கான் தனது பேத்தியின் குடும்பத்தை சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. ஆனால், தற்போது இத்தனை வருடங்கள் கழித்து அதற்கான நேரம் கைகூடி இருக்கிற செய்தி பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதையடுத்து இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. உலகக் கோப்பைக்கான போட்டிகள் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு முன்னதாக நடைபெறும் பயிற்சி ஆட்டங்களும் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

 

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வேகப் பந்து வீச்சாளர் ஹசன் அலி, இந்தியா, ஃபரிதாபாத்தைச் சேர்ந்த லியாகத்தின் மகள் சாமியா அர்சூவை 2019ம் ஆண்டு துபாயில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால், சாமியாவால் பாகிஸ்தான் எல்லையை கடந்து இந்தியா பயணித்து தனது குடும்பத்தை பார்க்க முடியாதே சூழலே இருந்துள்ளது. ஹரியான மாவட்டம் நுஹ் மாவட்டத்தில் வசித்து வரும் இவரின் தந்தை லியாகத் காணும் தனது பேத்தியை கையில் ஏந்த முடியவில்லையே என்று ஏங்கும் நிலைக்கு சென்றுள்ளார். ஆனால், ஹசன் அலி தற்போது உலகக் கோப்பை விளையாட இந்தியா வருவதால் தனது மனைவியின் குடும்பத்தை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்தது. அதிலும்,  நசீம் ஷா என்ற பவுலர் காயத்தின் காரணமாக விலகவே ஹசன் அலி பாகிஸ்தான் அணியில் தேர்வானார்.

 

எனவே, தனது மகளின் குடும்பம் இந்தியா வருவது குறித்து லிகாயத் கான் கூறுகையில், ‘எனது நாங்கள் மீண்டும் அகமதாபாத்தில் சந்திப்போம் என நம்புகிறேன். என்னால் பேரக்குழந்தையை கையில் ஏந்தும் வரை காத்திருக்க முடியவில்லை. நான் எனது கல்லூரி காலத்தின் போது படித்த ரூமியின் கவிதையின்படி தான் வாழ்ந்து வருகிறேன். அது, ‘உங்கள் இதயம் சொல்வதை கேளுங்கள்; கூட்டம் சொல்வதை அல்ல’ என் மகள் சாமியா எமிரேட்ஸ் ஏர்லைனில் விமானப் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார்.

 

அப்போது, தனது நண்பர் மூலம் ஹசன் அலியை துபாயில் சந்தித்து இருக்கிறாள். பின், ஹசனை பற்றி என்னிடம் தெரிவிக்க, நானும் அவளுடைய  முடிவை மறுக்கவில்லை. மகளின் மீது என்னுடைய தீர்மானங்களை திணிக்கையில் நான் கற்ற கல்விக்கு என்ன அர்த்தம் இருக்கப் போகிறது? சாமியா படித்தவள், சுதந்திரமானவள். முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை யார் கவனிக்கப் போகிறார்கள்? நீ யாரை திருமணம் செய்துகொண்டாலும் பரவாயில்லை. அவள் கடைசி வரை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது அங்கு சென்ற எங்களுடைய குடும்பங்கள் பாகிஸ்தானில்தான் வசித்து வருகின்றனர். ஹசன் அலியும் அன்புள்ளம் கொண்டவர் தான்." என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

 

மேலும் லியாகத்,  ஹசன் அலியிடம் இந்திய அணியை சந்திக்க உதவவும் விராத் கோலியுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 14, அஹமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானுக்கு இதயம் கொடுத்த இந்தியா; தமிழ்நாட்டில் கிடைத்த மறுவாழ்வு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Indian gave heart to Pakistan girl for treatment

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அப்போது, ஆயிஷாவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இந்தியா வந்த ஆயிஷா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அந்த சிகிச்சையின் போது, ஆயிஷாவின் இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினார்கள். சிகிச்சை முடிந்த பிறகு, தனது சொந்த நாட்டிற்கு திரும்பிய ஆயிஷா, அங்கு தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், பாகிஸ்தான் பெண்ணான ஆயிஷாவுக்கு கடந்த ஆண்டு மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு போதிய உபகரணங்கள் இல்லாததால் அவர் மீண்டும் சென்னை வந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆயிஷாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால் தான் ஆயிஷாவை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். 

அதன்படி, இதய தானத்துக்காக ஆயிஷா விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த நேரத்தில் மாற்று இதயம் கிடைக்கவில்லை. இதயம் கிடைக்கும் வரை ஆயிஷா, கடந்த 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம், விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு ஆயிஷாவுக்கு மாற்று இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆயிஷாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் பல காலமாக பிரச்சனைகள் இருக்கும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியாவில் தங்கி இருந்து வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Next Story

“மனைவியின் உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம்” - இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Imran Khan sensational allegation on Poison is mixed in wife's food

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

அதே வேளையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, புஸ்ரா பீவி, இஸ்லாமாபாத்தில் உள்ள பாணி காலா இல்லத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், தனது புஸ்ரா பீவிக்கு, உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவும் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஊழல் வழக்கு தொடர்பான வழக்கில் ஆஜரான இம்ரான்கான், ‘தனது மனைவிக்கு உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலந்து கொடுக்கப்படுகிறது. மேலும், அவருக்கு கொடுக்கப்படும் விஷம் கலந்த கலந்த உணவினால், அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையும் மிகவும் நலிவடைந்து வருகிறது.

அதனால், இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச மருத்துவமனையில் தனது மனைவியின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்’ எனக் கூறினார். இதையடுத்து, அடுத்த 2 நாட்களில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.