Skip to main content

மும்பை வரலாற்றுச் சாதனை; பெங்களூருவிடம் வெற்றியைப் பறித்த சூர்யா

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

Mumbai's historic feat; Surya stole victory from Bengalur

 

16 ஆவது ஐபிஎல் லீக் தொடரின் 54 ஆவது லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதின.

 

முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக டுப்ளசிஸ் 65 ரன்களையும் மேக்ஸ்வெல் 68 ரன்களையும் தினேஷ் கார்த்திக் 30 ரன்களையும் எடுத்தனர். மும்பை அணி சார்பில் பெஹ்ரெண்ட்ராஃப் 3 விக்கெட்களையும் க்ரீன், ஜோர்டன், கார்த்திகேயே தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

பின் 200 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை அணி 16.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 200 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 83 ரன்களையும் வதேரா 52 ரன்களையும் இஷான் கிஷன் 42 ரன்களையும் எடுத்தனர். பெங்களூர் அணி சார்பில் ஹசரங்கா மற்றும் விஜயகுமார் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

 

நடப்பு சீசனில் ரோஹித் சர்மா தனது கடைசி 5 இன்னிங்ஸ்களிலும் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்து வருகிறார். சூர்யகுமார் இன்றைய போட்டியில் 83 ரன்களை குவித்தார். இதுவே ஐபிஎல் போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோராகும். மேலும் அவர் ஐபிஎல் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த வீரர் ஆனார். நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி  3 முறை 200+ ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது. ஒரு அணி ஒரு சீசனில் மூன்று முறை 200+ சேஸ் செய்து வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

கிரிக்கெட் மட்டுமல்ல எல்லாத்துலயும் ‘நம்பர் 1’ தான்; விராட்டின் புதிய சாதனை

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

Not just cricket but 'No. 1' in everything; Virat's new record

 

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரரும் அந்த அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி நடப்பு தொடரில் 639 ரன்களை விளாசியுள்ளார். அதில் 2 சதங்களும் அடக்கம். 139 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 53.25 சராசரியுடன் நடப்பு சீசனில் அவர் விளையாடியுள்ளார். 

 

மேலும் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதமடித்தவர் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். இதுவரை விராட் 7 சதங்களை பதிவு செய்துள்ளார். இரண்டாம் இடத்தில் கிறிஸ் கெயில் 6 சதங்களை அடித்துள்ளார். தொடர்ந்து அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலிலும் விராட் முதலிடத்தில் உள்ளார். 

 

ஐபிஎல் தொடரில் இருந்து அவரது அணி வெளியேறிய பின் தற்போது அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது லண்டன் சென்றுள்ள அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தன்னை முழுமூச்சில் தயார்படுத்தி வருகிறார். 

 

ப்ளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி பெறவில்லை என்றாலும் கூட இரண்டு நாட்கள் இணையத்தை கலக்கினார் கோலி. தற்போது அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் 1601 பதிவுகளுடன் 250 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பெற்றுள்ளார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்கிற பெருமையைப் பெறுகிறார்.


 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

கலைந்த கனவு; ஆர்.சி.பி ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் 

Published on 22/05/2023 | Edited on 22/05/2023

 

deputy cm dk shivakumar who consoled the RCB fans

 

16 ஆவது ஐபிஎல் தொடரின் 70 ஆவது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் குஜராத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

 

முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 197 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்களை எடுத்தார். குஜராத் அணியில் நூர் அகமத் 2 விக்கெட்களையும் ரஷித் கான், யஷ் தயாள், ஷமி தலா 1 விக்கெட்களை எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 198 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கில் 104 ரன்களைக் குவித்தார். விஜய் சங்கர் 53 ரன்களை அடித்திருந்தார். பெங்களூர் அணியில் சிராஜ் 2 விக்கெட்களையும் வைஷாக் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 1 விக்கெட்டை எடுத்திருந்தனர்.

 

இன்றைய போட்டியிலும் பெங்களூர் அணியின் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார். 16 முறை டக் அவுட்டாகி இரண்டாவது இடத்தில் ரோஹித் சர்மா உள்ளார். இன்றைய போட்டியில் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் சதமடித்ததன் மூலம் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சதமடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்தனர். இந்த போட்டியில் குஜராத் அணி வென்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

 

இதனால் இந்த முறையும் ஆர்.சி.பியின் ஐபிஎல் கோப்பை கனவு கனவாகவே போயுள்ளது. இதனால் ஆர்.சி.பியின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தங்களது வருத்தத்தை பதிவு செய்துள்ளனர். இதனிடையே  ஆர்.சி.பி அணி தனது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் துக்கத்தை விவரிக்க வார்த்தையே இல்லை. இறுதிவரை இடைவிடாமல் போராடினோம், ஆனால் நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை எல்லா நேரங்களிலும் எங்களை ஆதரிக்கும் ரசிகர்களுக்கு நன்றி. கோப்பையை நோக்கிய பயணம் முடிவுக்கு வந்து எங்களுக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது” என உருக்கமாக பதிவிட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக  துணை முதல்வர் டி.கே சிவகுமார், “பெங்களூரு அணி போட்டியில் வேண்டுமானால் தோற்றிருக்கலாம். ஆனால் அவர்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அனைவரின் மனங்களையும் வென்றுவிட்டனர். கோப்பையை வெல்லும் நேரம் வரும். நம்பிக்கையுடன் இருங்கள்” என ட்விட் செய்துள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்