Skip to main content

‘கிங்’ கோலி நிகழ்த்திய புதிய இரண்டு சாதனை; டெல்லி அணி அபார வெற்றி 

Published on 07/05/2023 | Edited on 07/05/2023

 

'King' Kohli's new two records; Delhi team won big

 

16 ஆவது ஐபிஎல் சீசனின் 50 ஆவது லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிடல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

 

இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய பெங்களூர் அணி 181 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக விராட் 55 ரன்களும் லோம்ரோர் 54 ரன்களும் டுப்ளசிஸ் 45 ரன்களையும் எடுத்தனர். 182 ரன்கள் இலக்கைக் கொண்டு விளையாடிய டெல்லி அணி 16.4 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பிலிப் சால்ட் 87 ரன்களை எடுத்தார். ஆட்டநாயகனாக அவரே தேர்வும் செய்யப்பட்டார்.

 

இன்றைய போட்டியில் ஒரு அணிக்கு எதிராக 1000 ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி 5 ஆவது நபராக இணைந்தார். வார்னர் கேகேஆர் அணிக்காக 1075 ரன்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளார். மேலும் ஐபிஎல்லில் 7000 ரன்களைக் கடந்த முதல் வீரர் ஆனார். 233 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 46 அரைசதங்களுடன் அவர் இச்சாதனையை படைத்துள்ளார். டெல்லி பெங்களூர் இடையேயான கடைசி 5 ஐபிஎல் போட்டியில் பெங்களூர் 4 முறையும் டெல்லி ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

விராட் கோலியின் சாதனை; 5 வருடங்களுக்கு முன்பே கணித்த மறைந்த ரசிகர்!

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

Virat Kohli's record; Fan who predicted 5 years ago!

 

கிரிக்கெட் கடவுள், ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் பல சாதனைகளை கிரிக்கெட்டில் நிகழ்த்தியுள்ளார், அந்த வகையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 49 சதம் அடித்து அசைக்கமுடியாத மைல் கல் ஒன்றை கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்த்தியிருந்தார். இதனை கடந்த (15.11.2023) இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2023 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் சச்சின் அடித்த அந்த 49வது சதத்தை விராட் கோலி முறியடித்து உலக சாதனை படைத்தார்  

 

இந்த சாதனையை தொடர்ந்து  நியூசிலாந்து அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி; இதனை கொண்டாடும் விதமாக சமூக வலைத்தளங்களில் விராட் கோலியை புகழ்ந்து பதிவிட்டு வந்தனர், இதில் 12 வருடங்களுக்கு முன்பு பதிவிட்ட  பேஸ்புக்  பதிவு ஒன்று வைரலாகி உள்ளது 

 

Virat Kohli's record; Fan who predicted 5 years ago!

 

2012ஆம் ஆண்டு பதிவிட்ட அந்த பழைய பேஸ்புக் பதிவு கேரளாவைச் சேர்ந்த விராட் கோலியின் தீவிர ரசிகரான சிஜூ பாலநந்தனின் பதிவு; அப்பதிவில் அவர் கூறியிருப்பது,  “விராட் கோலி ஒரு நாள், சச்சின்  டெண்டுல்கரின் 49 சதங்களை முறியடிப்பார்” என்றும், தொடர்ந்து விராட் கோலியின் 35வது சதம் வரை அந்த பதிவின் கீழ் அப்டேட் செய்து வந்த சிஜூ பாலநந்தன் கார் விபத்தில் காலமானார்; இதன் பிறகு அவரின் நண்பர்கள்  விராட் கோலி அடித்த அடுத்தடுத்த சதத்தை இறந்த நண்பனின் பேஸ் புக் பதிவின் கீழ் அப்டேட் செய்து வந்துள்ளனர்.

 

Virat Kohli's record; Fan who predicted 5 years ago!

 

அரையிறுதி ஆட்டத்தில் சிஜூ பாலநந்தன் சொன்னது போல் விராட் கோலி, சச்சினின் சாதனையை முறியடித்த நிலையில், சிஜூவின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. உயிரோடு அவர் இல்லை என்றாலும், அவரின் அந்த வார்த்தைகள் இன்றளவும் உயிர் வாழ்வதாக அவரது நண்பர்களும் நெட்டிசன்களும் உருக்கம் தெரிவிக்கின்றனர்.

- காலேப் கீர்த்தி தாஸ்

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

விராட் கோலி சாதனை குறித்து சச்சின் நெகிழ்ச்சி!

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Sachin excited about Virat Kohli's feat

 

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா -  நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் 28 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

 

இதனையடுத்து வந்த விராட் கோலி நிதானமாக ஆடினார். அரை சதம் கடந்த கோலி 80 ரன்கள் எடுத்த நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் மொத்தமாக 674 ரன்களை குவித்தார். இதன் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 11 போட்டிகளில் குவித்த 673 ரன்கள் எனும் சாதனையை முறியடித்தார். ஒரு நாள் உலகப்கோப்பை தொடரில் ஏறத்தாழ 20 ஆண்டுகால சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய கோலி சதத்தை கடந்தார். இதன் மூலம் சச்சினின் மற்றொரு சாதனையான ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் (49) விளாசிய வீரர் எனும் சாதனையையும் முறியடித்து 50 ஆவது சதத்தை கடந்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 398 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

 

இந்நிலையில் விராட் கோலி சாதனைக்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விராட் கோலியின் ரோல் மாடலும், அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரான, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான சச்சின், விராட் கோலியைப் பாராட்டியுள்ளார்.  தனது சமூக வலைத்தளப் பக்கமான எக்ஸ் தளத்தில் "இந்திய டிரஸ்ஸிங் ரூமில் நான் உங்களை முதன்முதலில் சந்தித்தபோது, மற்ற அணியினர் என் கால்களைத் தொடும்படி கேலி செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும், திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன் ‘விராட்’ சிறந்த வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

 

Sachin excited about Virat Kohli's feat

 

ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட என்க்கு பெரிய மகிழ்ச்சி எதுவும் கிடையாது. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும், மிகப் பெரிய அரங்கில் அதைச் செய்ததும், மேலும் எனது சொந்த மைதானத்தில் இது நடந்தது எனக்கு பெருமகிழ்ச்சியைத் தந்துள்ளது”என பதிவிட்டுள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்