Skip to main content

வரலாற்று நிகழ்வு; 6 ரன்னில் முதலிடத்தை இழந்த லக்னோ; பஞ்சாப் படுதோல்வி

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

historical event; Lucknow lost top spot by 6 runs; Punjab lost badly

 

16 ஆவது ஐபிஎல் சீசனின் 38 ஆவது லீக் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 257 ரன்களை குவித்தது. ராகுல் 12 ரன்களில் ஆட்டமிழந்தாலும் மேய்ர்ஸ் 54 ரன்களையும் ஆயுஸ் படோனி 43 ரன்களையும் ஸ்டோனிய்ஸ் 72 ரன்களையும் பூரான் 45 ரன்களையும் குவித்தனர். பஞ்சாப் அணியில் ரபாடா 2 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங், சாம் கர்ரன், லிவிங்ஸ்டன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.  இந்த போட்டியில் மேயர்ஸ் 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். 

 

இந்த போட்டியில் லக்னோ அணி குவித்த 257 ரன்கள் ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக பதிவானது. முதல் இடத்தில் பெங்களூர் அணி புனே வாரியர்ஸ் அணிக்கெதிராக 263 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. லக்னோ அணி பெங்களூர் அணியைவிட 6 ரன்கள் மட்டுமே குறைவாக எடுத்துள்ளது. இந்த போட்டியில் லக்னோ அணி அதிக பவுண்டரிகள் விளாசிய அணிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த அணி 24 ஃபோர்கள், 14 சிக்ஸர்கள் என மொத்தம் 41 பவுண்டரிகளை அடித்துள்ளது. முதல் இடத்தில் பெங்களூர் அணி உள்ளது. இந்த அணி 21 ஃபோர்கள் 21 சிக்ஸர்கள் என 42 பவுண்டரிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.  

 

258 ரன்கள் என்ற இமாலய இலக்கை கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்தாலும் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. அதிகபட்சமாக அதர்வா டைட்  66 ரன்களையும் சிக்கந்தர் ராசா 36 ரன்களையும் லிவிங்ஸ்டன் 23 ரன்களையும் ஜிதேஷ் சர்மா 24 ரன்களையும் எடுத்தனர். லக்னோ அணியில் பூரான் ராகுலைத் தவிர அனைத்து வீரர்களும் பந்து வீசினர். இதில் யஷ் தாக்கூர் 4 விக்கெட்களையும் பிஷ்னோய் 2 விக்கெட்களையும் நவீன் உல்-ஹக் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

 

 

Next Story

6 நிமிடங்களில் 50 ரன்கள்! அதிசயிக்க வைத்த ஆர்.சி.பி.வீரர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
50 runs in six minutes! Amazing RCB player will jacks

ஆறு நிமிடங்களில் 50 ரன்கள் அடித்து ஆர்.சி.பி.வீரர் ஒருவர் அதிரடியில் அதிசயிக்க வைத்துள்ளது சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

ஐபிஎல் 2024இன் 45ஆவது லீக் ஆட்டம் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நேற்றிய போட்டி முத்ற்கொண்ட், இனி ஆடும் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப் வாய்ப்பில் கொஞ்சமாவது நிலைத்திருக்க முடியும் என்பதால் பெங்களூரு அணிக்கு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. குஜராத் அணியும் வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப் வாய்ப்பு வலுப்பெறும் என்பதால் ஆரம்பம் முதலே விறுவிறுப்பு தொடங்கியது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. சஹா, கில் இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த தமிழ்நாட்டு வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் ஷாருக்கான் ஆகியோரின் பொறுப்பான அதே நேரத்தில் அதிரடியான பேட்டிங்கால் குஜராத் அணி சரிவில் இருந்து மீண்டது. அதிரடியாக ஆடிய ஷாருக்கான் ஐபிஎல்-இல் தனது முதலாவது அரை சதத்தை பதிவு செய்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மில்லர் வழக்கம் போல அதிரடியாக 26 ரன்கள் எடுக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக ஆடிய சுதர்சன் அரைசதம் கடந்து 84 ரன்கள் குவித்தார். குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. சிராஜ், ஸ்வப்னில் சிங், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 201 ரன்கள் என்பது கடின இலக்கு போலத் தோன்றினாலும், எல்லா ஆட்டங்களிலும் எளிதில் அடிக்கப்படுவதால் நம்பிக்கையுடன் பெங்களூரு அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய பெங்களூரு அணிக்கு டு பிளசிஸ் நல்ல தொடக்கம் கொடுத்து 24 ரன்களில் வழக்கம் போல நடையைக் கட்டினார். எப்போதும் போல பொறுப்புடன் ஆடிய கோலியுடன் அதிரடி வீரர் வில் ஜேக்ஸ் இணைந்தார். குஜராத் அணியின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபக்கமும் சிதறடித்தார்.

50 runs in six minutes! Amazing RCB player will jacks

கோலி அரைசதம் கடந்து 70 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் நின்றார். மறுபுறம் வில் ஜேக்ஸ் 31 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அடுத்த ஆறு நிமிடங்களில் 50 ரன்கள் எடுத்து 41 பந்துகளில் சதமடித்தார். இதில் 10 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல்-இல் இது 5ஆவது அதிவேக சதமாகும். மாலை 6.41 க்கு அரை சதம் கடந்த வில் ஜேக்ஸ் 6.47 க்கு சதம் கடந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக ஆர்.சி.பியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர்கள் வெளியிட்ட பதிவும் வைரலாகி வருகிறது.  

Next Story

நிராகரிப்பின் வலி;பஞ்சாப்பை நிமிரச் செய்த சஷாங்க் சிங்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
The pain of rejection; Shashank Singh who gives victory for Punjab!

ஐபிஎல்2024 இன் 42ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு நவம்பர் மாத மழை என்பது எப்படி உறுதியோ அதுபோல நரைனின் அதிரடி உறுதி என சிறப்பாக ஆரம்பித்தார் சுனில் நரைன். அவருடன் இணைந்து சால்ட்டும் சகட்டுமேனிக்கு சிக்சர்களை பறக்கவிட கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 137 ரன்கள் குவித்தது.

The pain of rejection; Shashank Singh who gives victory for Punjab!

சால்ட், பேர்ஸ்டோ என இருவரும் அரைசதம் கடந்தனர். நரைன் 71, சால்ட் 75 என சிறிய இடைவெளியில் இருவரும் ஆட்டமிழக்க அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 39 (23), ரசல் 24(12), ஸ்ரேயாஸ் ஐயர் 28(10) என அவர்கள் பங்குக்கு சில சிக்சர்களையும், பவுண்டரிகளையும் பறக்க விட கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்தது. அர்ஸ்தீப் 2, சாம் 1, ஹர்ஷல் 1, ராஹுல் 1 முறையே விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பின்னர் 262 ரன்கள் எனும் வரலாற்று இலக்கை விரட்டியது பஞ்சாப் அணி. ஆரம்பத்தில் பேர்ஸ்டோ ஸ்ட்ரைக் செய்ய தடுமாற பிரப்சிம்ரன் சிங் சிக்சர்களை பறக்க விட்டார். பவுண்டரிகளும் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர்.பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் பேர்ஸ்டோ தன் பங்குக்கு அதிரடி காட்டி அரை சதம் கடந்தார். பின்னர் பேர்ஸ்டோவுடன் இணைந்த ரூசோ சிறிது அதிரடி காட்டி 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் கேப்டன் சாம் கரன் இறங்காமல், இந்த சூழலை சமாளிக்க சஷாங்தான் சிறந்தவர் என முடிவெடுத்து 4ஆவது விக்கெட்டுக்கு அவரைக் களமிறக்கினார். சஷாங்க் அவரை ஏமாற்றவில்லை. இந்த ஐபிஎல்-இல் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஷாங்க் சிங், ஈடன் கார்டன் மைதானத்தின் மூலை முடுக்கெல்லாம் தன் அட்டகாசமான பேட்டிங்கால் பந்துகளை சிக்சர்களாக மாற்றி சிதறடித்தார். விக்கெட் விழ சிறு வாய்ப்பு கூட தராமல் அதிரடியாகவும், அதே நேரத்தில் நேர்த்தியாகவும் ஆடி, இறுதி வரை ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதில் 8 சிக்சர்களும் அடங்கும்.

The pain of rejection; Shashank Singh who gives victory for Punjab!

அனுபவ வீரருக்கான அழகுடன் ஆடிய பேர்ஸ்டோ ஐபிஎல்-இல் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்து 48 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 18.4 ஓவர்களிலேயே 262 ரன்களை எடுத்து சாதனை வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டிகளின் வரலாற்றில் ஒரு அணியால் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு இதுவாகும். இதன் மூலம் 6 புள்ளிகள் பெற்று 8 ஆவது இடத்துக்கு முன்னேறி பிளே ஆஃப் ரேசில் நாங்களும் உள்ளோம் என்று மற்ற அணிகளுக்கு தெரிவித்துள்ளது. சதமடித்த பேர்ஸ்டோ ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.