Skip to main content

கவாஸ்கருக்கு அடுத்து இவர்தான்; சாதனை படைத்த இளம் வீரர்

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
 He is next to Gavaskar; An accomplished young player

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் அறிமுக வீரராக ராஜத் பட்டிதார் களம் இறங்கினார். 

முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித், ஜெய்ஸ்வால் களம் இறங்கினர். ரோஹித் 14 ரன்களை எடுத்து நடையைக் கட்ட, கில் 34 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஷ்ரேயாஸ் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அறிமுக வீரரான ராஜத் பட்டிதார் 32 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பொறுப்புடனும் அதே நேரத்தில் அதிரடியாக ஆடினார். சிறப்பாக ஆடிய அவர் தனது இரண்டாவது சதத்தை சிக்சர் அடித்து பூர்த்தி செய்தார். அக்சர் 27, ஶ்ரீகா் பரத் 17 என்று ஆட்டமிழந்தாலும் மறுபுறம் ஜெய்ஸ்வால் நிலைத்து நின்று ஆடினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 336/6 என்று இருந்தது. ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், அஸ்வின் 5 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

பின்னர் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். டெஸ்ட் போட்டிகளில் மிகக் குறைந்த வயதில் இச்சாதனையை செய்யும் 3 ஆவது வீரரானார். முதலில் வினோத் காம்ப்ளி 21 வயது 32 நாள்களிலும், கவாஸ்கர் 21 வயது 283 நாள்களிலும் செய்துள்ளனர். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 209 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 112 ஓவர்களில் 396 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பஷிர், அகமத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடத் துவங்கிய இங்கிலாந்து அணிக்கு டக்கெட் 21, சொதப்பினாலும் கிராவ்லி அரைசதம் கடந்து ஓரளவு சிறப்பாக ஆடி 76 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரூட் 5 பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார். கடந்த ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பைப் பறித்த ஒல்லி போப் 23 ரன்களில் பும்ராவின் துல்லியமான யார்க்கரால் க்ளீன் போல்டு ஆனார். பேர்ஸ்டோ 25 ரன்களில் ஆட்டமிழந்தார். ஃபோக்ஸ் 6 ரன்களில் நடையைக் கட்டினார். இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் 172-6 என்று ஆடி வருகிறது. ரன்களுடனும், கேப்டன் ஸ்டோக்ஸ் 14 ரன்களுடனும், அஹ்மத் ரன் எதுவும் எடுக்காமலும் ஆடி வருகின்றனர். 

- வெ.அருண்குமார்

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.