Skip to main content

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தினேஷ் கார்த்திக்!

Published on 16/10/2020 | Edited on 16/10/2020

 

Dinesh Karthik

 

13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் வழி நடத்தி வந்தார். நடப்பு தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 4 வெற்றிகள், 3 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது. கடந்த உலகக் கோப்பை தொடரில் இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து, நடப்பு ஐ.பி.எல் தொடர் தொடங்கும் போதே, கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பை இயான் மோர்கனிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இருப்பினும், தினேஷ் கார்த்திக்கே கேப்டன் பொறுப்பில் தொடர்ந்தார்.

 

இந்நிலையில், தற்போது தினேஷ் கார்த்திக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, அதை இயான் மோர்கனிடம் ஒப்படைத்துள்ளதாக அணி நிர்வாகம் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

 

இன்று நடைபெற இருக்கிற கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் இயான் மோர்கன், அணியை வழிநடத்த இருக்கிறார்.