Skip to main content

இந்திய அணியில் தமிழக வீரருக்கு வாய்ப்பு?

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

 A chance for a Tamil Nadu player in the Indian team?

 

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் காயம் காரணமாக ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் தமிழக வீரருக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று (15-09-2023) இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இருந்தாலும் இந்த ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் முனைப்பில் விளையாடிக் கொண்டிருந்தார் அக்சர் படேல். பின்னர், கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் அக்சருக்கு தொடைப் பகுதியில் சில உள் காயங்கள் ஏற்பட்டது என்று சொல்லப்படுகிறது. ஆனால், காயத்திற்கான சிகிச்சை பற்றிய எந்த தகவலும் தற்போது வரை பிசிசிஐ சார்பில் வெளியிடப்படவில்லை. அக்சர் படேலின் இந்த வெளியேற்றம் இந்தியா அடுத்த மாதம் எதிர்கொள்ளவுள்ள உலகக் கோப்பையை பாதிக்குமா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. 

 

நாளை (17-09-2023), இந்தியா-இலங்கை ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 3.00 மணிக்கு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெறும். எனவே, இந்த இறுதிப் போட்டியில் அக்சர் படேல் விளையாட முடியாத சூழல் உள்ளதாகக் கூறப்படுகிறது. அக்சரின் காயம் குறித்து பிசிசிஐ கூறுகையில், "அக்சர் தற்போது பல காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். அவரின் சுண்டு விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 'டீப்பாக' பந்து வீசியதால் அவரின் முன்கையிலும் காயம் இருக்கிறது. இதில், மிக முக்கியமாக தொடையில் தசைப்பிடிப்பும் உருவாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

 

அவருக்குப் பதிலாகத் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட உள்ளதாகவும் பிசிசிஐ தரப்பில் தகவல்கள் வெளிவந்தன. மேலும் பிசிசிஐ, வாஷிங்டன் சுந்தரை தொலைப்பேசியில் அழைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், சுந்தர் சேர்க்கப்பட்டாலும் ப்ளேயிங் 11ல் இடம் பெறுவாரா என்பது சந்தேகம் தான்.

 

23 வயதான சுந்தர், 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5.05 என்ற எகானமி ரேட்டில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இதனுடன் ஒரு அரை சதத்தை சேர்த்து 233 ரன்கள் குவித்துள்ளார். ஒருவேளை ஆட்டத்தில் இக்கட்டான சூழல் ஏற்பட்டால் அவர் நம்பர் 8இல் பேட் செய்து உதவுவார். அக்சர் படேல் காயத்தில் இருந்து மீண்டு வரவில்லை என்றால் உலகக் கோப்பை அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் தான் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன், "உலகக் கோப்பை அணியில் ஒரு தமிழர் கூட இல்லை" என வருந்தினார். இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர் பெயர் அடிபடுவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

IND vs SA : கைவிடப்பட்ட முதல் டி - 20 போட்டி; ரசிகர்கள் ஏமாற்றம்

Published on 10/12/2023 | Edited on 11/12/2023
INd vs SA : First T-20 match abandoned; Fans are disappointed

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே மூன்று டி - 20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருந்தது. அதன்படி தென்னாப்பிரிக்காவின் டர்பனில் உள்ள ஹாலிவுட்பெட்ஸ் கிங்ஸ்மீட் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (10.12.2023) இந்தியா அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருந்தது. மூன்று டி - 20 போட்டிகள் கொண்ட தொடரில் இது முதல் போட்டியாகும்.

இந்த சூழலில் கிங்ஸ்மீட் மைதானத்தில் பெய்து வரும் மழையால் இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் முதல் டி20 போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தின் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், இடைவிடாமல் பெய்த மழை காரணமாக, தென்னாப்பிரிக்கா - இந்தியா மோத இருந்த முதல் டி - 20 போட்டி ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story

தென் ஆப்பிரிக்காவிலும் வெற்றியைத் தொடர்வாரா சூர்யகுமார்?

Published on 10/12/2023 | Edited on 11/12/2023
 T20 cricket match South Africa vs India score update

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் 4-1 என்று வெற்றி பெற்ற புத்துணர்ச்சியுடன் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்க உள்ளது. முதலில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்று தொடங்க உள்ளது. 

ரோஹித் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால், இந்த தொடரிலும் சூர்யகுமார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரவிந்திர ஜடேஜா அணிக்கு திரும்பியுள்ளார். அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கில் மற்றும் சிராஜ் ஆகியோரும் அணிக்கு திரும்பி உள்ளனர். கில்லும் அணிக்கு திரும்பி உள்ளதால் தொடக்க ஆட்டக்காரர்களாக யார் இரண்டு பேர் களமிறங்க போகிறார்கள் என்பது போட்டி தொடங்கும் முன்பே தெரிய வரும். பெரும்பாலும் யசஸ்வி மற்றும் கில் ஆகியோரே களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. ஸ்ரேயாஸ், ஜடேஜா, ரிங்கு சிங் ஆகியோருக்கே மிடில் ஆர்டரில் வாய்ப்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. கீப்பராக இஷான் அல்லது ஜித்தேஷ் இருவரில் யாருக்கு முன்னுரிமை என்பதும் ரசிகர்களிடையே ஆவலைக் கூட்டி உள்ளது. பவுலிங்கைப் பொறுத்தவரை சிராஜ், முகேஷ், அர்ஸ்தீப், பிஷ்னோய் என்று களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை கேப்டன் மார்க்ரம் தலைமையில் களமிறங்க உள்ளது. டி காக் இல்லாத நிலையில், லுங்கி இங்கிடியும் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். மார்க்ரம், மில்லர், மஹராஜ், ஷம்சி, கிளாசென், பெலுக்வாயோ என அனுபவ வீரர்களும் புதிய இளம் வீரர்களும் என சரிசமமாக தென் ஆப்பிரிக்க அணி களமிறங்க உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 24 டி20 போட்டிகளில் எதிர்த்து விளையாடியுள்ளனர். இதில் இந்திய அணி 13 முறையும், தென் ஆப்பிரிக்க அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு கிடைக்காமல் முடிந்துள்ளது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் ஒரு டி 20 போட்டியாக இரண்டு முறையும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒரு முறையும் என மூன்று முறை தொடரைக் கைப்பற்றியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி ஒரு முறை தொடரைக் கைப்பற்றியுள்ளது. 

இந்நிலையில் உலககோப்பை டி20 தொடருக்கு ரோஹித் மற்றும் கோலி தேர்வு செய்யப்படுவார்களா என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் ரோஹித், கோலி ஃபார்மை பொறுத்தே தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற கருத்தும் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் இந்த தொடரில் வீரர்களின் செயல்பாடு உலகக்கோப்பை அணியின் தேர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் உள்ள கிங்ஸ்மெட் மைதானத்தில் இன்று முதல் டி20 நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ளது.

- வெ.அருண்குமார்