Skip to main content

ஒரே நேரத்தில் களமிறங்கும் இரண்டு இந்திய அணிகள் - இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டம்!

Published on 23/02/2022 | Edited on 23/02/2022

 

team india

 

இந்தியாவும், இலங்கையும் மோதும் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்த தொடருக்குப் பின்னர் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுடன் இருபது ஓவர் போட்டியில் விளையாடவுள்ளது. அதனை தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்து சென்று, கடந்த வருடம் கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அந்த டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான ஒரு இருபது ஓவர் போட்டியிலும் இந்தியா விளையாடவுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

அதன்பிறகு இந்திய அணி, அக்டோபர் மாதத்தில் தொடங்கும் இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இந்தநிலையில் ஜூலைக்கும் அக்டோபரில் தொடங்க இருக்கும் இருபது ஓவர் உலகக்கோப்பை தொடருக்கும் இடைப்பட்ட காலத்தில், இந்திய அணி மேற்கு இந்தியத் தீவுகளுக்கும், ஜிம்பாப்வேக்கும் பயணம் செய்யவுள்ளதாகவும், ஆசியக் கோப்பை போட்டியில் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடுவது வீரர்களுக்குச் சோர்வை ஏற்படுத்தலாம் என்பதால், ஒரேநேரத்தில் இரண்டு இந்திய அணிகளை விளையாடவைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

ஜிம்பாப்வேக்கு இரண்டாம் கட்ட இந்திய அணி செல்லும் எனவும், முன்னணி வீரர்களைக் கொண்ட இந்திய அணி ஆசியா கோப்பையில் விளையாடும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இதற்காக 35 வீரர்களைத் தேர்வு செய்வது குறித்து இந்திய அணியின் தேர்வாளர்கள் ஆராயத் தொடங்கிவிட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

Next Story

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணி அறிவிப்பு!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Test series against England; Indian team announcement

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதில் முதல் 2 போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி ரோஹித் ஷர்மா தலைமையிலான டெஸ்ட் அணியில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.