Skip to main content

தொப்பை வர என்ன காரணம்? - சித்த மருத்துவர் அருண் 

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

What causes the belly? - Siddha doctor Arun

 

தொப்பை வருவதற்கான காரணம் குறித்தும் இயற்கை உபாதை சிக்கல் குறித்தும் சித்த மருத்துவர் அருண் தெரிவித்ததாவது;

 

நிறைய பேருக்கு தொப்பை இருக்கிறது. இதனால், வயிற்றில் வெறும் கொழுப்பு தான் இருக்கும் என்றில்லை. மாறாக நாம் சாப்பிடும் உணவுகளால் கேஸ் கூட உண்டாகியிருக்கும். மேலும், மது அருந்துவது, பிட்சா, குளிர்பானங்கள் போன்றவற்றாலும் உடல் உழைப்பு குறைந்ததும் தொப்பை வருவதற்கு காரணமாகலாம். 

 

சமையலில் விளக்கெண்ணெய்யைப் பயன்படுத்துவதன் மூலம் மலச் சிக்கலை குறைக்க உதவும். குழந்தைகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சினை வருவதுண்டு. துவரம் பருப்பை வேகவைக்க, தோசை சுடவும் விளக்கு எண்ணெய்யை பயன்படுத்துவதால் இயற்கையாக மலம் கழிய வாய்ப்புள்ளது. மலச் சிக்கல் பலசிக்கல் என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்போம். 

 

இயற்கை உபாதையை கழிப்பதை அருவருப்பாக கருத வேண்டாம். தினமும் எப்படி சாப்பிட்டு, தண்ணீர் குடித்து, உறங்குகிறோமோ அதுபோல இயற்கை உபாதையையும் தினமும் கழிக்க வேண்டும். இதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் உடலில் நோய் இருக்கிறது என்று அர்த்தம். தினமும் ஒரு முறையாவது இயற்கை உபாதையை கழிக்க வேண்டும். அப்படி நடந்தால் தான் உடலில் உள்ள கழிவுகள் நீங்கி விட்டதற்கான அறிகுறி. 

 

இதில் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க நார்ச் சத்துள்ள கீரை வகைகள், காய்கறிகள், கொய்யாப் பழம், மாதுளை, சப்போட்டா, திராட்சை, உலர் திராட்சை உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன்பிறகும் சரியாகவில்லை என்றால் உங்கள் குடும்ப சித்த மருத்துவரை அணுகலாம். மாறாக, நீங்களே முடிவெடுத்து வைத்தியம் பார்க்காதீர்கள். 

 

சிலருக்கு உடல் சூட்டினால் இயற்கை உபாதை கழிப்பதில் பிரச்சனை ஏற்படும். அப்போது அவர்கள் விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்திலும் அதிகரிக்கும் தெருநாய்க் கடி சம்பவங்கள்

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

nn

 

அண்மையில் சென்னையில் தெருநாய் கடித்து 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஈரோட்டிலும் சிவகங்கையில் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் தெரு நாய்கள் குழந்தைகளை கடிப்பது, சாலையில் செல்வோரை கடிப்பது தொடர்பான செய்திகளும், வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அண்மையில் சில நாட்களுக்கு முன்பு சென்னை திருவொற்றியூரின் பரபரப்பான சாலை ஒன்றில் 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேரை தெரு நாய் கடித்துக் குதறியது. அந்த தெருநாயை அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அடித்தே கொலை செய்தனர்.

 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் புஞ்சம்புளியம்பட்டி பகுதியில் வீட்டில் புகுந்த நாய் ஒன்று 65 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடித்துக் குதறியது. பின்னர் வெளியே வந்த அந்த நாய், கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடித்துக் குதறியது. இதில் பாதிக்கப்பட்ட 65 வயது பெண் உட்பட ஏழு பேர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிவகங்கையில் காரைக்குடி கல்லூரி சாலையில் வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்ததில் பெண் உட்பட ஐந்து பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தெரு நாய்க் கடி காரணமாக பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக விளக்கம்

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

dmdk explains about Vijayakanth's health

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக சார்பில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டது.

 

இந்நிலையில் தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாகத் தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளைப் பார்த்து யாரும் நம்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்