Skip to main content

அம்மாவின் செல்ல மகனைக் கையாள சில முக்கிய வழிமுறைகள்!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

ways to handle husband who is moms child

 

அம்மாவின் செல்ல மகன்கள் சராசரி ஆண்களை விட, உறவுகளில் அதிக உணர்ச்சி மிகுந்தவர்கள் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அவர்கள், எளிதில் பொய் கூற மாட்டார்கள், அதேபோன்று, யாருக்கும் துரோகம் செய்வதில்லை. மிகவும் சாந்த குணம் உடையவர்களாக இருப்பார்கள். இருப்பினும், அளவிற்கு அதிகமாக தாய் - மகன் உறவில் நெருக்கமாக இருக்கும்போது சில விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

 

நெருங்கிய தாய் - மகன் உறவின் சில விளைவுகள் என்ன?

 

அனைத்து பெண்களுக்குமே தங்களது கணவனின் அன்பை முழுமையாகப் பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அம்மாவின் செல்ல மகன்கள் திருமணத்திற்குப் பின்னரும், சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு தங்கள் அம்மாவினை சார்ந்து இருக்கிறார்கள். பெரும்பாலும், அவர்கள் தனது அம்மாவின் கருத்துக்களுக்குக் கட்டுப்படுவதை விரும்புவார்கள். இதனால், மனைவியின் தேவைகளையும், கோரிக்கைகளையும் சில நேரங்களில் புறக்கணிக்கிறார்கள். இது சில சமயங்களில் கணவன் - மனைவி உறவுகளுக்கிடையே மனக்கசப்பை ஏற்படுத்தும். எனவே, உங்கள் கணவர் அம்மாவின் செல்ல மகனாக இருக்கும்பட்சத்தில், அவரைக் கையாள சில உதவிக் குறிப்புகள் இதோ.

 

தேவையான சில இடங்களைப் பெறுங்கள்:

 

உங்களது கணவர் எடுக்கும் முடிவுகளின் மீது நம்பிக்கை வையுங்கள். அவர் ஏதாவது கூறினால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்புங்கள். ஒருவேளை அது தவறாக இருந்தால், அன்புடன் மென்மையாக எடுத்துக்கூறுங்கள். உங்கள் கணவர் அவரது அம்மாவின் செல்ல மகன் என்றால், உங்களுடைய தாய் வீட்டில் வசிப்பது நல்ல யோசனையல்ல. ஏனெனில், உங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அவர் அவரது தாயிடம் செல்லக்கூடும். எனவே, இருவரின் நெருங்கிய உறவானது உங்கள் மீது கோபத்தை அதிகரிக்கும்.

 

எல்லைகளை நிறுவுங்கள்:

 

சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உங்கள் கணவர் அவரது அம்மாவைச் சார்ந்து இருக்கலாம். ஆனால், அவர் உங்களுக்கு முன்னால் ஒரு சுயாதீனமாகச் செயல்பட வேண்டும் என்பதை நீங்கள் உங்கள் கணவருக்குத் தெளிவுபடுத்த வேண்டும். உங்கள் கணவர் தனது முடிவுகளில், உங்களை வழிநடத்த முயற்சிக்கலாம். ஆனால் நீங்கள் அவரை ஒரு தனிநபராகச் செயல்பட அனுமதிக்கும் அளவுக்குக் கருத்துக்களை முன் வைக்க வேண்டும். அதேபோன்று, உங்கள் கணவரிடம் குழந்தைத்தனமாகப் பேசுங்கள், விளையாடுங்கள், இது இருவருக்குமான உறவை வலுப்படுத்தும். 

 

உங்கள் மாமியாருடன் மோதலைத் தவிர்க்கவும்:

 

உங்களது மாமியார், நாத்தனார் போன்றவர்களைப் பற்றி உங்களது கணவரிடம் குறை கூறுவதை முடிந்தவரை தவிர்க்கவும். அப்படியே அவர்கள் செய்த தவறை சுட்டிக்காட்ட வேண்டும் என்றாலும், மென்மையாகக் கூறி புரிய வையுங்கள். சட்டெனக் குறைகூறிவிட்டால், உங்களது கணவருக்கு உங்கள் மீது உள்ள மதிப்பு குறையலாம். நீங்கள் இதனை மென்மையாகக் கையாளும்பட்சத்தில், மாமியார், நாத்தனார் உங்களுடன் சண்டை போட்டால் கூட, உங்கள் கணவர் உங்கள் பக்கம் இருந்து பேசுவார்.

 

முக்கிய முடிவுகளைச் சொந்தமாக எடுங்கள்:

 

உங்கள் திருமணம் வரை உங்கள் மாமியார், உங்கள் கணவரின் முக்கிய முடிவுகளை எடுத்திருக்கலாம். இருப்பினும், உங்கள் கணவர் திருமணம் ஆன பிறகு, தனது சொந்த வாழ்க்கையை நிர்வகிக்கும் திறன்கொண்டிருப்பது அவசியம். அதேபோன்று, உங்கள் கணவருடன் நீங்கள் ஒன்றிணைந்து முக்கிய முடிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும். மேலும், இருவரின் சண்டையிலும் அல்லது வாதத்திலும் இடையில் யாரும் கருத்து சொல்ல வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  

 

மாமியாருடன் நெருங்கிய உறவு வேண்டும்:

 

உங்கள் மாமியார் உங்கள் கணவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான மற்றும் நெருக்கமான நபராக இருக்கிறார் என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக அவர் அம்மாவின் செல்ல மகன் என்றால், நீங்கள் உங்கள் மாமியாருடன் நெருங்கிய உறவை உருவாக்க வேண்டும். சில சமயங்களில் அவர்களின் முக்கிய ஆலோசனையை எடுத்துக்கொள்ளுங்கள். அதேபோன்று, எந்த ஒரு முக்கிய முடிவையும் உங்களது சம்மதம் இல்லாமல் எடுக்காத அளவிற்குப் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், உங்கள் உறவை வலுப்படுத்திக்கொள்ள, அடிக்கடி ஒன்றாக அமர்ந்து இரவு உணவு  உண்பது அவசியம்.

 

எனவே, மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி திருமணமான பெண்கள் அனைவரும், தங்கள் கணவரை வழிநடத்தி ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியுடன் கடந்து செல்லலாம்.

 

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி மூன்றே நாளில் படுகொலை

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

couple who got married for love was incident in three days

 

காதல் திருமணம் செய்துகொண்ட மூன்றே நாளில் கணவன் மனைவியை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

தூத்துக்குடி முருகேசன் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வசந்தகுமாரின் மகன் மாரிசெல்வம்(22). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மாரிசெல்வமும் திருவிக நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கத்தின் மகள் கார்த்திகாவும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இதற்குப் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் கடந்த 30 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். 

 

இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மாரிசெல்வத்தின் வீட்டிற்கு வந்து கோபத்துடன் பேசிவிட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில்தான் நேற்று இரவு மாரிசெல்வம் வீட்டிற்குள் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் காதல் திருமணம் செய்துகொண்ட இருவரைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றது. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காதல் திருமணம் செய்து கொண்டதால் இருவரையும் பெண் வீட்டார் கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பொருளாதார ரீதியாக மாரிசெல்வம் பின்தங்கி இருந்ததால், திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கொலையை அரங்கேற்றியதாகத் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ளவர்களைப் பிடிக்க போலீசார் மூன்று தனிப்படை அமைத்துள்ளதாகவும், ஒருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.