வழியெல்லாம்வாழ்வோம்#5
(டாக்டர்.டேனியல்ராஜசுந்தரம்P.T)
உங்கள்குழந்தைகள்நலமா-பாகம்3
சென்றவாரம்காகிதக்குவளைகள்,நெகிழிபொருட்களால்ஏற்படும்தீமைகள்பற்றிபேசினோம். இந்தக் கட்டுரை,நாம்தொன்மையான,பாரம்பரியமாகப்பயன்படுத்திவந்தபித்தளை,செம்புபோன்ற உலோகங்களால்ஆனபாத்திரங்களின்நன்மையைவிளக்குகிறது.
பித்தளைப்பாத்திரத்தின்நன்மைகள்:
தாமிரம்மற்றும்துத்தநாகம்ஆகியவற்றின்சரியானவிகிதத்திலானகலவையேபித்தளையாகும். தனித்தனியே இருக்கும்போதுநச்சாகஇருக்கும்துத்தநாகமும்,தாமிரமும்குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கையில்மருத்துவத்தன்மைஉடையதாகமாறுகின்றன. எனவே,இத்தகையபித்தளைப் பாத்திரங்களில்சமையல்செய்யும்போது,அதுநுண்ணியஅளவில்நம்உடலில்சேர்வதால் கிடைக்கவல்லநன்மைகள்பல.
பித்தளையில்இருக்கும்துத்தநாகம்நுண்ணுயிரிகளுக்குஎதிராகச்செயல்பட்டுநோய்எதிர்ப்பு சக்தியைக்கொடுக்கவல்லது.மேலும்300வகைஎன்சைம்களின்இயக்கத்துக்குஇதுஉதவுவதோடு, மனிதனின் வளர்சிதைமாற்றத்துக்கும்துணைபுரிகிறது.பித்தளையில்இருக்கும் தாமிரம்உடல்செயல்பாட்டுக்கும், 13வகைநொதிகளின் செயல்பாட்டுக்கும்ஊக்கம்தருகிறது. உடலில்இயற்கைவினைகளுக்குத்தூண்டுகோலாகஉள்ளது.புரோட்டீன் செயல்பாட்டுக்கும் கைகொடுக்கிறது.’’எனவேதியியல்அறிஞர்கள்கூறுகின்றனர்.பித்தளைப்பாத்திரத்தில்வெந்நீர் வைத்துக்குடிக்கும்போது,சருமநோய்களைஎதிர்க்கக்கூடியசக்திகிடைக்கும். குறிப்பாக,குழந்தைகளுக்குஇதுமிகவும்நல்லது.
அதனால்தான்அந்தக்காலத்தில்குழந்தைகளுக்கு செம்புஉலோகத்தாலானவிளையாட்டுப் பொருட்களைகொடுத்தனர்.நம்முன்னோர்.குழந்தைகள்பித்தளைச்செப்புசாமான்கள்வைத்து விளையாடும்போதுஅந்தஉலோகம்அவர்கள்சருமத்தில்உரசுவதால் அவர்களுக்குநுண்உயிரித்தாக்குதல்குறைக்கப்பட்டு,நோய்எதிர்ப்புசக்தியும்கிடைக்கும்.
செம்புப்பாத்திரங்கள்:
நம்தமிழ்ப்பண்பாட்டின்படி,தாமிரப்பானைஅல்லது துட்டுப்பானைஎன்பதுநம் முன்னோர்களின் வாழ்வியலோடுஇணைந்த ஒன்று.வீடுகளில்நடக்கும்ஒவ்வொருநிகழ்வுக்கும்பித்தளைகுடம் அல்லதுஅண்டாஅல்லதுசெம்புப்பானைகள்என்றுபரிசளிப்பதேபாரம்பரியமாய்இருந்து வந்தது.
தாமிரப்பானையில்இருந்துதண்ணீர்குடிப்பதுஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின்படி,உடம்பில்உள்ளமூன்று தோஷங்களானகப்ஹா,பிட்டாமற்றும்வடா போன்றவற்றைசரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிரப்பானையில்இருந்துதண்ணீரைகுடித்தால்,உங்கள்உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும்எனஆயுர்வேதமருத்துவர்கள்கூறுகின்றனர்.
செம்பின்கீழ்க்கண்டநன்மைகள்நம்வீட்டுக்குழந்தைகளின்உடலுக்குஎல்லாவகைகளிலும் பயன்படுகின்றனஎன்பதைபுரியவைக்கின்றன.
பாக்டீரியாகொல்லி:
தண்ணீரில்உள்ளநோய்கிருமிகளைஒழிக்கும்குணத்தைக்கொண்டுள்ளதுதாமிரம்.முக்கியமாக வயிற்றுப்போக்கினால்உண்டாகும்ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இதுசிறப்பாக செயல்படும்.
தைராய்டுசெயல்பாட்டைஒழுங்குப்படுத்தும்காரணி:
தைராய்டுசுரப்பிசீராகசெயல்படஇதுஅதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிரக்குறைபாடுஇருக்கையில்,தைராய்டுசம்பந்தப்பட்டபிரச்சனைகள்உண்டாகும்.தைராய்டு சார்ந்த பிரச்சனைகள் குழந்தைகளுக்கு சோர்வு, மனஉளைச்சல் போன்ற குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன.
புண்களைவேகமாககுணப்படுத்தும்காரணி:
புதியஅணுக்களைஉருவாக்கிஅதனைவேகமாகவளரச்செய்ய தாமிரம்உதவும்.இதனால்புண்கள்வேகமாககுணமாகும்.இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள்தொற்றுக்களின்வளர்ச்சியைதடுக்கும்.
மூளைநடவடிக்கைகளைஊக்குவிக்கும்காரணி:
மூளையில்உள்ளநரம்பணுக்களுக்குமத்தியில்உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனைமூடும்.இந்தமயலின்உறைகளைஉருவாக்ககொழுப்புவகைப்பொருட்களைதொகுக்க தாமிரம்உதவுகிறது.இதுபோகவலிப்புவராமலும்அதுதடுக்கும்எனவேதியியல்நிபுணர்கள் கூறுகின்றனர்.
செரிமானத்தைமேம்படுத்தும்காரணி:
வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால்செரிமானம்சிறப்பாகும்.பரோட்டாபோன்றவைகள்குழந்தைகளைவசீகரிக்கும் இந்தக்காலகட்டத்தில்,குழந்தைகளின்செரிமானம்சார்ந்தபிரச்சனைகளேநம்மைஅடிக்கடி மருத்துவமனைகளுக்குஅலையவிடுகின்றன. எனவே தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.
இரத்தசோகையைஎதிர்க்கும்காரணி:
நம்உடலில்இரத்தசிவப்பணுக்களின்உற்பத்திஅதிகரிக்கதாமிரம்உதவுகிறது.இரத்தசோகையை எதிர்க்கஇரும்புமிகமுக்கியமானகனிமமாகும்.இதற்குதாமிரமும்சிறியஅளவில்தேவைப்படும்.
புற்றுநோய்க்குஎதிராகபாதுகாக்கும் தாமிரத்தில்சிறப்பானஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது.அதனால்தான்புற்றுநோய்அணுக்கள்வளரவிடாமல்அதுபாதுகாக்கிறது.மேலும், இயக்கஉறுப்புகளால்உடலில்ஏற்பட்டுள்ளபாதிப்புகளைசரிசெய்யஇதுஉதவும்.
எனவே,இனிமேலாவதுநம்குழந்தைகளின்நலம்கருதியாவது நம்பாரம்பரியவழக்கங்களைக் கடைபிடிப்போம்.பித்தளை,செம்புபோன்றஉலோகங்களால்ஆனதட்டுகள்,குவளைகள்,பாத்திரங்கள்ஆகியவற்றைபயன்படுத்துவோம்.
டாக்டர்.டேனியல்ராஜசுந்தரம்M.P.T(Ortho), M.A.(Socio)
மயோபதிஆராய்ச்சிநிலையம்
ஜீவன்அறக்கட்டளை