Skip to main content

முடி உதிர்வதைத் தடுப்பது எப்படி? - விளக்குகிறார் சித்த மருத்துவர் அருண்

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

"How to prevent hair loss?" - Explains Siddha doctor Arun!

 

'நக்கீரன் நலம்' யூ-டியூப் சேனலுக்கு சித்த மருத்துவர் அருண் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "உயிருக்கு ஆபத்து என்றால் கூட யாரும் உணர்வதில்லை. ஆனால், ஒரு நான்கு அல்லது ஐந்து முடி உதிர்ந்துவிட்டாலே ஏதோ ஒரு பெரிய வியாதி நமக்கு இருக்கிறது. நாம் வழுக்கையாகப் போகிறோம். நமக்கு கல்யாணம் ஆகாது என்று நினைக்கக்கூடிய இளைஞர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். முடி உதிர்தல் ஏற்படும் ஆண்கள், பெண்கள் பெரிய மன அழுத்தத்துடன் வருவார்கள். அப்படி தான் சமூகம் முடி உதிர்தலை உருவாக்கி வைத்திருக்கிறது. உண்மையிலே முடி உதிர்தல் அப்படி ஒரு பிரச்சனையா என்றால் இல்லை. 

 

முடி உதிர்வது இயல்பானது. ஒரு நாளை 50 முதல் 100 முடி வரை இயல்பாக உதிரும். கண்ணுக்கு தெரியாமலே உதிரும். முடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருக்கிறது. நமது குடும்பத்தில் பரம்பரையாக வழுக்கை இருக்கிறது என்றால், நமக்கு 25-லிருந்து 30 வயது ஆகும் போது முடி உதிர ஆரம்பிக்கும். உடல் சூடு அதிகரித்தல், சத்துக் குறைபாடு, தொழில் காரணமாக இருக்கலாம். இல்லை, மன அழுத்தமே காரணமாக இருக்கலாம். முடி உதிர்தலைச் சரி செய்வதற்கான மருந்துகள் சித்த மருத்துவத்தில் இருக்கிறது. பரம்பரையாக வழுக்கை விழுவதைத் தடுக்க முடியாது. அதை சில காலங்களுக்கு ஒத்திப் போடலாம். 

 

வழுக்கையில் முடி வளருமா என்றால் வளராது. சித்த மருத்துவத்தைப் பொறுத்தளவில், முடி உதிர்வதற்கான காரணம் தெரிந்தது என்றால், அதைக் குணப்படுத்துவதற்கு உண்டான வழியைப் பார்க்கலாம். தைலம் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவை தலையில் தேய்ப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது அந்த நடைமுறை இல்லை. வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். குளித்த பின், தலையை நன்றாக தேய்த்து தேங்காய் எண்ணெய்யை வைத்து தேய்க்க வேண்டும். முடி உதிர்ந்தால் நீங்கள் செய்ய வேண்டியது தலையில் எண்ணெய் தேய்ப்பது தான். 

 

தேங்காய் எண்ணெய் உடல் சூட்டை இயல்பான நிலையில் வைக்க உதவும். முடி உதிர்தல் சம்பந்தமான பிரச்சனைக்கு தினமும் காலை, இரவு கரிசாலை பொடியை தேனில் கலந்து சாப்பிட வேண்டும். முடி உதிர்தல் குறித்து பயப்பட தேவையில்லை. இயல்பான ஒன்று தான். அதை நம்மால் சரி செய்து கொள்ள முடியும்" எனத் தெரிவித்தார். 

 

 

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

100 ரூபாயில் மருத்துவப் புரட்சி; டாடாவின் மைல்கல் சாதனை  

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
100 rupees to cure cancer; Tata's milestone achievement

உலகில் மிகவும் கொடுமையான நோய்களில் ஒன்றாக கருதப்படுவது புற்றுநோய். தீர்க்க முடியாத அல்லது எளியோரால் சிகிச்சை எடுக்க முடியாத அளவிற்கு மிகக் கொடூரமானதாகக் கருதப்படுகிறது. விலை உயர்ந்த மாத்திரைகள், மருந்துகள், சிகிச்சை முறைகள் எடுத்துக் கொண்ட பிறகு அதிலிருந்து முற்றிலும் விடுபட முடியும். அதிலும் முதல் நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டால் அதிலிருந்து மீள்வது எளிது என்பவையெல்லாம் மருத்துவத் துறையின் கூற்றுகளாக இத்தனை வருடங்கள் இருந்து வருகிறது.

அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வசதிகள், புதிய கண்டுபிடிப்புகள் உலகை புதிய பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் நிலையில், மருத்துவத்துறையிலும் சில புதிய புரட்சிகள் அபரிமிதமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேன்சர் சிகிச்சைக்கு பல்லாண்டு காலமாகவே சிகிச்சைக்கான தீர்வு மற்றும் புற்றுநோயால் ஏற்படும் மரணங்களை குறைத்து உயிர் வாழ்தலை நீடிக்க வைப்பது போன்றவை மருத்துவத் துறைக்கு மிகப்பெரிய சவாலாக நீடித்து வந்தது.

இந்தியாவில் மட்டும் சராசரியாக ஆண்டுக்கு 14 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் ஒன்பது லட்சம் பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. உலகில் பல்வேறு மூலைகளிலும் புற்றுநோயை முற்றிலுமாக குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகளுக்கான ஆய்வுகள் அனுதினமும் நடைபெற்று வருகிறது. இதுவரை அதற்கான முழு தீர்வு எட்டப்படவில்லை என்றே கூறலாம்.

100 rupees to cure cancer; Tata's milestone achievement

இந்நிலையில், மும்பையின் டாடா மெமோரியல் ஹாஸ்பிடல் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாகவே புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டு வந்தனர். எலிகளை வைத்து நடைபெற்ற மருத்துவச் சோதனையில் அந்த மருந்து வெற்றியைக் கொடுத்திருக்கிறது. ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் மீண்டும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்காக எடுத்துக் கொள்ளும் மருத்துவ முறைகளில் ஏற்படும் பக்க விளைவுகளை 50% குறைப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர் பிளஸ் சியூ என்ற அந்த மாத்திரை, இந்திய தர நிர்ணய ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்த உடனே சந்தைகளில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதிலும் குறிப்பிடத்தகுந்த விஷயமாக புற்றுநோய் மருத்துவம் என்றாலே விலை உயர்ந்தது என்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தானது நூறு ரூபாய் என்ற குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளதுதான்.