Skip to main content

விலையுயர்ந்த காய்களை சாப்பிட்டால் புற்று நோய் வராதா? - சித்த மருத்துவர் அருண் விளக்கம்

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

Siddha Doctor Arun - Vegetables 

 

விலை அதிகமான காய்கறிகளை கஷ்டப்பட்டு வாங்குகிறோம், அதில் தான் ஆரோக்கியம் இருப்பதாக நம்புகிறோம் இது குறித்து சித்த மருத்துவர் அருண் விளக்குகிறார்.

 

நாம் வசிக்கும் இடங்களில் கிடைக்கும் காய்கறிகளை விட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் காய்கறியைத்தான் பொதுவாகவே நம் மக்கள் விரும்புகின்றனர். வீட்டுத் தோட்டத்தில் விளையும் அவரைக்காய், முருங்கைக்காய், பசலைக் கீரை உண்பதில் சத்து இல்லை என நினைக்கின்றனர். மாறாக, சூப்பர் மார்க்கெட் சென்று கலர் கலர் முட்டைகோஸ், ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளில் தான் சத்துகள் இருப்பதாக எண்ணுகிறார்கள். நம் மண்ணில் விளையும் தானியங்களை, காய்கறிகள் நமக்கேற்ற தாதுக்களை வழங்குகிறது. இவை விலை குறைவாக கிடைக்கிறது. எனவே, பணக்காரர்கள் உண்ணும் விலையுயர்ந்த காய்கறிகளை உண்பதற்கு ஆசைப்படுகிறார்கள். 

 

முன்னொரு காலத்தில் நாம் கேழ்வரகு, கம்பு, சோளம் என சாப்பிடும் போது, பணக்காரர்கள் அரிசி சாப்பிடுவதை பார்த்து அந்த பழக்கத்திற்கு மாறினோம். அப்பொழுது, உயர்ந்த வகுப்பினர் மட்டுமே உண்ணும் பொருளாக அரிசி இருந்தது. ஆனால், சுழற்சி முறையில் தற்போது, பணக்காரர்கள் சிறுதானிய உணவிற்கு மாறிவிட்டு. அரிசி உடலுக்கு ஏற்றதில்லை என்ற பிரச்சாரமும் பரவிவருகிறது. மேலும், பழைய சாதம் தான் சத்தானது என்று சிலர் பேட்டியும் கொடுக்கின்றனர். இதனால், நாமும் ஹோட்டலுக்குச் சென்று பழைய சாதத்தை 200 ரூபாய் வரை கொடுத்து வாங்கி சாப்பிடுகிறோம். பணக்காரர்கள் பின்பற்றி வரும் உணவு பழக்கம் தான் பிறர் அந்த நிலைக்கு சென்றவுடன் தாங்களும் உணவு, உடை போன்றவற்றில் மாற்றம் அடைகிறார்கள். இதன் தொடர்ச்சியாக, இன்று பலரும் உண்ணும் பீட்சா கூட இப்படி வந்தது தான். இதற்கு காரணம், உயர்வானவர்கள் எதனை பின்தொடர்கிறார்களோ அது உயர்ந்தது என்று எண்ணிக் கொள்வதுதான். 

 

இதனால், நம் அன்றாடம் சாப்பிட்டு வந்த நாட்டுக் கத்திரிக்காய், பாகற்காய், பீர்க்கங்காய், அவரைக்காய், சுண்டைக்காய் முதல் வீட்டு தோட்டத்தில் விளையும் கீரை வகைகள் புறந்தள்ளப்பட்டு. வெளிநாட்டு படையெடுப்புகளுக்கு பிறகு, மிளகாய், தக்காளி முதலியன பயன்படுத்த தொடங்கினோம். மேலும், வெளிநாட்டவர்கள் வெண்மையின் காரணம் அவர்களின் உணவு என்று அதனை பின்பற்றுவது நமது அறியாமை என்று சொல்லலாம். 

 

பொதுவாக சித்த மருத்துவர்கள் புதிதாக ஒரு ஊருக்கு சென்றால் அங்குள்ள மூலிகைகள் குறித்து ஆராய்வோம். ஏனென்றால், அந்த மூலிகைகளை வைத்து தான், எந்த மாதிரி நோய் அருகில் பரவும் என கண்டறிவோம். எனவே, நீங்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்தாலும் சுற்றி 50கி.மீ. விவசாய நிலங்களில் கிடைப்பதை வாங்கலாம். இதைவிடுத்து, இந்த விலையுயர்ந்த காய்களை சாப்பிட்டால் புற்று நோய் வராது எனும் வாட்ஸ் அப் செய்திகளை நம்பாதீர்கள். முன்பு கூறியது போல, உயர்தட்டு மக்கள் தங்களது உணவு பழக்கத்தை சிறுதானியத்தை நோக்கி மாற்றியுள்ளனர். ஒருகட்டத்தில் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நூடில்ஸ் கூட இன்றைக்கு கெடுதல் என சொல்கிறார்கள். எனவே, ஏழைகளின் உணவை(தானியங்கள்) அவர்கள் உண்கின்றனர், அவர்களின் உணவு முறைக்கு நாம் மாறிவிட்டோம். 

 

இதனால், நம்மை சுற்றி தோட்டத்தில் விளையும் காய்கறிகள், கீரை வகைகள், நெல்லிக் கனி, மாதுளை முதலானவைகளை சாப்பிட வேண்டும். ஏனென்றால், இவைதான் எளிதில் செரிக்கக் கூடியது. இதைவிட்டு, முட்டகோஸ், ப்ரக்கலி போன்ற உணவுகள் நமக்கு மருத்துவ காலத்தில் உதவாது. நமக்கு அருகில் விளையும் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வாருங்கள். இதுவே, நோய் வராமல் நம்மை தற்காத்துக் கொள்ளும் நல்ல மருந்தாக பயன்படும். உணவே மருந்து, மருந்தே உணவு!

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

நன்றாக தூங்குவதற்கு இதை பின்பற்றுங்க - சித்த மருத்துவர் நித்யா விளக்கம்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Siddha doctor Nithya - Sleeping tips

 

நன்றாக தூங்குவதற்கு சித்த மருத்துவர் நித்யா சில விளக்கங்களை நமக்கு அளிக்கிறார்.

 

தூக்கமின்மையால் என்னென்ன பிரச்சனைகள் வருமென்று முந்தைய பகுதியில் பார்த்தோம். எனவே இதை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறவர்கள் ஒரு வாரம் சித்த மருத்துவ குறிப்பின்படி சொல்கிற சில டிப்ஸ்களை பின்பற்றினாலே உடனடியாக சரி செய்ய முடியும்.

 

காலை எழுந்ததுமே வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இரவு முழுவதும் வயிறு நீரற்று உஷ்ணமாக இருப்பதால் முதற்கட்டமாக நீர் அருந்த வேண்டும். இரவே வெந்தயம் ஊறப்போட்டு அதை பருகலாம். அல்லது சீரகம் ஊற போட்டு குடிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நன்னாரி, தேர்த்தாங்க் கொட்டை, வெட்டி வேர் போன்றவற்றை வாங்கி தேவையான அளவு எடுத்துக் கொண்டு இரவே ஊறவைத்து காலையில் வடிகட்டி குடிக்க வேண்டும். 

 

இது குடிப்பதால் உடல் உஷ்ணம் நீங்கி ஆழ்ந்த தூக்கத்திற்கு உங்களை உடல் தயார்ப்படுத்திக் கொள்ளும். கசகசாவை பாலில் கலந்து குடிக்கலாம். சித்த மருத்துவத்தில் அதிமதுரம் சூரணம் வாங்கி இளம் சூடான பாலில் கலந்து குடிக்கலாம். அதிமதுரம் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் சரிசெய்து தூக்கம் அதிகரிக்கும். இரவு நேர உணவை சீக்கிரம் முடித்துவிட்டு தூங்க வேண்டும். போனை அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது. ஜீரணம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் உணவை கண்டிப்பாக நிறுத்தி விட வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினால் இரவு நேர உறக்கத்தினை பெறலாம். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

ஆழ்ந்த தூக்கம் இல்லாவிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா? - சித்த மருத்துவர் நித்யா விளக்கம்

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

  DrNithiya | Siddha | Sleepless |

 

தூக்கமின்மையால் வரும் சிக்கல்கள் குறித்து சித்த மருத்துவர் நித்யா விளக்கம் அளிக்கிறார்.

 

இன்றைக்கு இருக்குற காலகட்டத்தில் பல நோய்களுக்கு காரணமாக இருப்பது தூக்கமின்மை பிரச்சனைதான். இது வயது வித்தியாசமின்றி எல்லா வயதினருக்கும் உள்ளது. இரவில் சில வேலைகளை செய்வதால் தூக்கம் வந்தும் நாம் தூங்காமல் நமக்கு நாமே தீங்கு விளைவித்துக் கொள்கிறோம். குறிப்பாக இரவில் அதிகமாக போன் பயன்படுத்திக் கொண்டிருப்பதும், நைட் சிப்ட் வேலை செய்து அதனால் நான் பகலில் தூங்கி சமப்படுத்திக் கொள்கிறேன் என்று நினைப்பது முற்றிலும் தவறானதாகும். 

 

ஒரு நாளுக்கு எட்டு மணி நேர உறக்கம் என்பது மிக மிக முக்கியமானது. எப்போதாவது இதில் முன்ன பின்ன கூடுதல் குறைதல் இருந்தால் பிரச்சனையில்லை. எப்போதுமே இந்த தூக்க நேரம் குறைந்தால் உடலுக்கு கண்டிப்பாக சிக்கலை உருவாக்கும். சித்த மருத்துவத்தை பொறுத்தவரை வாதம், பித்தம், கபம் என்ற மூன்றிற்கு முக்கியத்துவம் தரப்படும்.

 

பித்தம் அதிகரித்தால் தூக்கமின்மை சிக்கல் உருவாகும். பித்தம் எப்படி அதிகரிக்கிறது என்றால் உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் ஏற்படும் மாற்றங்கள் பித்தம் அதிகரிக்க காரணமாகும். சிலர் எவ்வளவு தூங்கினாலுமே நான் அசதியாக இருக்கிறேன், தூங்கியது போலவே இல்லை என்பார்கள். இதற்கெல்லாம் பித்தப் பிரச்சனை காரணமாகிறது. உடலின் உள் உறுப்புக்களான கிட்னி, கல்லீரல், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தூக்கமின்மை முக்கிய காரணமாக அமையும்.

 

ஒழுங்காக தூங்காதபோது உள் உறுப்புகளின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். இது நோய் வர வழிவகுக்கும். காலை எழுந்ததும் தலைவலி இருப்பது, முடி கொட்டுவது, காதில் இரைச்சல் இருப்பது போல உணர்வது இதெல்லாம் தூக்கமின்மையால் நோய்கள் பெரிதாய் வரப்போவதற்கான ஆரம்ப அறிகுறிகள். தூக்கமின்மையால் மலச்சிக்கல் உருவாகும். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்