Skip to main content

பெண்களின் மாதவிடாய் துயருக்கு புதிய தீர்வு! - பாகிஸ்தானில் அறிமுகம்

Published on 01/03/2018 | Edited on 01/04/2018

 

பாகிஸ்தானில் 44 சதவிகிதம் பெண்கள் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான நாப்கின் போன்ற வசதிகள் இல்லாமல் பணியாற்றும் இடங்கள் மற்றும் பள்ளி போன்ற இடங்களில் அவதிப்பட்டு வருகின்றனர். அதை கருத்தில் கொண்டு வாஸ்மா இம்ரான் மற்றும் மஹின் கான் என்ற இருவர் மாதவிலக்கிற்கு கப் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
 

period


 

period

 

இதைப்பற்றி வாஸ்மா கூறுகையில், "பாகிஸ்தான் பெண்கள் மாதவிலக்கு விஷயங்களில் விழிப்புணர்வு இன்றியும் அதற்கான சரியான வசதிகள் இன்றியும் பள்ளி, பணியாற்றும் இடம் என அவதிப்பட்டு வருகின்றனர், பாகிஸ்தானில் மட்டுமல்ல உலக அளவில் மாதவிலக்கு காலங்களில் பெண்கள் பள்ளிக்கு போவதில்லை இதை சுலபமாக்க நாங்கள் இந்த கப்பை உருவாக்கியுள்ளோம்" என கூறினார்.
 

period

 

மஹின் கான் கூறுகையில், "இங்கே மாதவிலக்கு பற்றி ஆண்களுக்கு தெரியாது அதைப்பற்றி பொது இடங்களில் பேசவும் முடியாத நிலை இன்னும் இங்குள்ளது இதையெல்லம் உடைக்கவே இந்த கப்பை உருவாக்கியுள்ளோம்."

 

period

 

"நாங்கள் உருவாக்கிய இந்த மாதவிடாய் கப் பெண்களின் மாதவிலக்கு பிரச்சனையை கண்டிப்பாகத் தீர்க்கும். உடலுக்கேற்ற சிலிகானில் உருவாக்கப்பட்டிருக்கும் இது வழக்கமான சானிட்டரி நாப்கின் பயன்பாட்டை விட சுலபமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும். ஒரு பெண் தனது ஆயுள் முழுவதுமே ஐந்து அல்லது ஆறு கப்பை உபயோகித்தால் போதும். இதனால், சுற்றுச் சூழலுக்கு கேடாக அமையும் நாப்கின் கழிவுகள் பெருமளவில் குறையும். இதை விரைவில் சந்தைப்படுத்தவும் உள்ளோம்" எனவும் கூறினார். ஏற்கனவே இது போன்றவை அறிமுகமாகியிருந்தாலும் பாகிஸ்தானில் இவர்கள் தான் இதை அறிமுகம் செய்து பெண்கள் மத்தியில்  பரப்புகின்றனர்.      

சார்ந்த செய்திகள்

Next Story

'வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு'-தலைகுனிய வைத்த சிறுமிகளின் வைரல் வீடியோ!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
shocking video of school girls

திருப்பூரில் பள்ளி கழிவறையைப் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள குமாரபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி உள்ளார். இந்நிலையில் பள்ளியில் பயின்று வந்த இரண்டு பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகள் பேசும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் வருவாய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தாராபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். இதில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை நிர்பந்தித்து கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக  அறிவியல் ஆசிரியை சித்ராவும் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்தச் சிறுமிகள்  பேசி வெளியிடப்பட்ட வீடியோவில், 'யார் ஸ்கூல் பாத்ரூமை சுத்தம் செய்தது; நாங்க ரெண்டு பேரும்தான் பண்ணுவோம். யார் உங்களை பண்ண சொல்வது; எச்.எம் மிஸ், சயின்ஸ் மிஸ். நீங்கள் கழுவ மாட்டேன் எனச் சொல்ல வேண்டியது தானே; சொன்னா திட்டுவாங்க. எதிர்த்தா பேசுறனு குச்சியை எடுத்து வெளுப்பாங்க.  உங்கள் வீட்டில் சொல்ல வேண்டியது தானே; வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு' எனப் பேசும் அந்த வீடியோ மேலும் வைரலாகி வருகிறது.

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.