Skip to main content

குடும்ப ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் என்ன? - ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் விளக்கம்

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

family health tips by dr Rajendiran 

 

குடும்ப ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் விளக்குகிறார்

 

தனிமனித ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் குடும்ப ஆரோக்கியம். குடும்பத்தில் உள்ள ஒரு மனிதர் வியாதியால் படுக்கும்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் அவரை கவனித்துக் கொள்கின்றனர். அவர் மீது மிகுந்த அன்பு, பாசம் செலுத்துகின்றனர். நிறைய பணம் செலவு செய்கின்றனர். இதன் மூலம் அவர் குணமடைகிறார். இது தமிழ்நாட்டின் வரம். அதே நபர் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ, குடும்பத்தில் உள்ள இன்னொரு நபர் பாதிக்கப்பட்டாலோ, அப்போது தான் கஷ்டம் தெரியும். 

 

ஏனெனில், மீண்டும் செலவு செய்வதற்கு பணம் இருக்காது. இதுபோன்ற பிரச்சனைகளை நாங்கள் பல நோயாளிகளிடம் பார்க்கிறோம். குடும்ப டாக்டர் என்கிற கான்செப்ட் முன்பு ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்தது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் நம்பத்தகுந்த, அர்ப்பணிப்பு கொண்ட ஒரு டாக்டர் இருப்பார். குடும்பத்தில் உள்ள அனைவருடைய வரலாறு குறித்தும் அவருக்குத் தெரியும். குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் செய்துவைப்பதற்குக் கூட மருத்துவரின் ஆலோசனையைப் பெறும் குடும்பங்கள் எல்லாம் இருக்கின்றன. 

 

பொறுப்பான ஒரு மருத்துவரின் ஆலோசனையைத் தொடர்ந்து பெறுவது நல்லது. எந்தப் பக்கம் காது குத்தலாம் என்று ஒரு குழந்தையை அழைத்து வந்து என்னிடம் கேட்டார்கள். குழந்தையை நான் பரிசோதித்தபோது காது மடலில் ஒரு சிறு பிரச்சனை இருப்பது தெரிந்தது. அதற்கு ஏற்றவாறு நான் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினேன். சமுதாயம் நம் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கான சான்று இது. இதுபோன்ற பல நன்மைகள் குடும்ப டாக்டரால் உங்களுக்கு ஏற்படும். அனைவரும் இன்று பிசியாக இருக்கின்றனர். தேவையானவற்றை மட்டும் பரிசோதிப்பது வழக்கமாகிவிட்டது. 

 

குடும்ப டாக்டர் என்கிற முறை இருக்கும்போது குடும்பத்தில் உள்ள அனைவரின் உடல்நிலை குறித்தும் அந்த மருத்துவருக்கு தெரியப்படுத்தலாம். இருவருக்குமே அது பலனளிக்கும். ஒருவருடைய நீண்டகால நோய்களை மருத்துவர் அறியும்போது, தற்காலத்தில் அதற்கு ஏற்றவாறு மருந்துகளையும் ஆலோசனைகளையும் அவர் வழங்குவார். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட குடும்ப டாக்டரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். சில சிறிய நோய்கள் குறித்து யாரிடமும் சொல்லாமல் இருக்கும் குடும்பங்கள் இருக்கின்றன. குடும்ப டாக்டர் உங்களுக்கு அனைத்து வகைகளிலும் உதவுவார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலத்தை வைத்தே நோயினை கண்டறியலாமா? - பிரபல மருத்துவர் சந்திரசேகர் விளக்கம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

  Dr Chandrsekar | Hemorrhoids | Constipation | Motion Problem |

 

மலச்சிக்கலால் உருவாகும் மூல நோயின் தன்மைகள் பற்றி தொடர்ச்சியாக நமக்கு விழிப்புணர்வு தகவல்களை டாக்டர் சந்திரசேகர் அளித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக உணவு முறையினால் ஏற்பட்ட மாற்றத்தால் ஏற்படும் சிக்கல் பற்றியும், வெளியேறும் மலத்தினை வைத்தே நோயின் தன்மையை கண்டறிவது பற்றியும் விளக்குகிறார்.

 

நமது உணவு முறையே சரிவிகித உணவாகத்தான் இருந்து வந்தது. அதாவது கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கும், செரிமானத்திற்கு ரசம் ஊற்றி சாப்பிடுவார்கள், புரதத்திற்கு பருப்பு கூட்டு இருக்கும், நார்ச்சத்திற்கு பொரியல் இருக்கும் இவ்வாறாக அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவை நாம் எடுத்துக் கொண்டோம். தண்ணீரும், மோரும் இறுதியாக எடுத்துக் கொள்ளுதல் எளிமையாக செரிமானம் அடைந்து சத்துக்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த உணவு முறை காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. 

 

ஆனால், இப்போதெல்லாம் எல்லா காய்கறிகளையுமே ஒன்றாக சேர்த்து சமைத்து கொடுக்கிறார்கள். உணவில் கறியை வேக வைத்து பிரியாணியாக கொடுக்கிறார்கள். பக்கெட் சிக்கன் என்று வெறும் சிக்கனை மட்டுமே வாங்கி வைத்து உண்ணுகிறார்கள். இது சரியாக செரிமானம் அடையாமல் மலச்சிக்கலை உருவாக்குகிறது. முந்தைய காலங்களில் மலம் வெளியேறிய பிறகு பரிசோதிப்பார்கள், கருப்பாக இருந்தால் உள் உறுப்புகளில் இரத்த கசிவு இருக்கிறது, வெள்ளையாக வெளியேறினால் மஞ்சள் காமாலை இருக்கிறது, ரத்தக்கசிவு வெளியேறினால் மூலம் இருக்கிறது என்பதை கண்டறிந்து சொல்வார்கள்.

 

இன்றைய வெஸ்டர்ன் டாய்லெட் முறையில் எப்படி மலம் வெளியேறுகிறது என்று அவரவர்களுக்கே தெரியாத நிலையில் தான் இருக்கிறார்கள். அதற்கு பிறகு எப்படி நோய் என்ன இருக்கிறது என்பது கண்டறிய முடியும்? நோயினை கண்டறிய முடியாத சாத்தியமற்ற நிலையில் தான் இந்த வாழ்க்கை முறை இருக்கிறது. வலியே இல்லாமல் இரத்தம் வருகிற மலச்சிக்கலால் மூல நோய் உருவாகும். ஆரம்பத்திலேயே மலச்சிக்கலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் சிகிச்சை எடுத்துக்கொண்டால் மருந்து, மாத்திரை, உணவு பழக்க வழக்க மாற்றங்களால் மூல நோயைச் சரி செய்ய முடியும். நோயின் தன்மை முற்றும் போது அறுவை சிகிச்சையால் தான் மூல நோயைச் சரி செய்ய முடியும்.

 


 

Next Story

வைரஸ் காய்ச்சலால் இறப்பு ஏற்படுமா? - டாக்டர் ராஜேந்திரன் விளக்கம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

 Dr Rajendran | Virus Fever | Dengue Fever |

 

இந்த மழைக்காலத்தில் அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது வெறும் காய்ச்சல்தானா? அல்லது அதைத் தாண்டி ஏதேனும் பிரச்சனை உருவாகுமா என்ற நமது கேள்விக்கு ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் டாக்டர் ராஜேந்திரன் விளக்கம் அளிக்கிறார்.

 

மழைக்கால நோய்கள் என்பது பல வகைகளில் உண்டு. அவற்றில் முக்கியமானது வைரஸ் காய்ச்சல். இது ஒரு நுண் கிருமிகளால் உண்டாவது. தற்போதைய மழைக்கால வைரஸ் காய்ச்சல்களில் எவற்றிற்கெல்லாம் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்புளுயன்சா வைரஸ், ஹெச் 1 என் 1, ஸ்வைன் ப்ளூ, போன்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிற காய்ச்சல்கள் ஆபத்து நிறைந்தவை. வைரஸ் தொற்றால் ஏற்படுகிற காய்ச்சல் வெறும் காய்ச்சல் மட்டுமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நிறைய வைரஸ் காய்ச்சலுக்கு மருந்தே இல்லை. இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழல் உண்டாகும். 

 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாகி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் மூன்று நாட்களுக்கு கடுமையான காய்ச்சலாக இருக்கும். அதோடு உடல் வலி, இடுப்பில் கடுமையான வலி, கண்ணைச்சுற்றி வலி போன்ற வலிகளால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அவதிப்படுவார்கள். அடுத்தடுத்த நாட்களில் குணமாகிவிடுவது போன்று தோன்றியிருக்கும் உடனே மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தி விடுவார்கள். அது மேற்கொண்டு பாதிப்பை ஏற்படுத்தும். 

 

குழந்தைகளுக்கு பெரியவர்களை விட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருந்தது, நாங்களே மாத்திரை கொடுத்தோம். மூன்று நாளில் சரியாகி விட்டது என்று பள்ளிக்கு அனுப்பினோம், ஆனால் பள்ளியில் மயங்கி விழுந்து விட்டாள் என்று மருத்துவரை அணுகுவார்கள். தானாகவே மாத்திரை எடுத்துக் கொள்வது மிகவும் சிக்கலில் முடியும். 

 

காய்ச்சலை சரி பண்ண வெறும் பாராசிட்டமால் என்ற எண்ணத்தை முதலில் மனதிலிருந்து நீக்குங்கள். அது ஒரு வகை வலி நிவாரணி மருந்து மட்டுமே. முறையாக மருத்துவரை அணுகி, என்ன வகையான வைரஸ் தொற்று என்பதை உறுதி செய்ய இரத்த பரிசோதனை செய்து, அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். நீர் ஆகாரம் உள் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே மழைக்கால காய்ச்சலில் இருந்து உங்களை காத்துக் கொள்ளும் முறையாகும்.