Skip to main content

மாணவர் வழிகாட்டி: இன்ஜினியரிங் படிப்பில் இத்தனை பாடப்பிரிவுகளா? வாங்க தெரிஞ்சுக்கலாம்... #11

Published on 22/08/2020 | Edited on 27/08/2020
students guidance

 

இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்கள் நேரடியாக அரசு மற்றும் சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகள் என்றில்லாமல் ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி என பிரத்யேக கல்வி நிலையங்களில் பயில்வது குறித்தும் கடந்த தொடர்களில் பார்த்தோம். 

 

பிளஸ்-2 படிக்கும்போதே இன்ஜினியரிங்கில் பொதுவாக உள்ள சில துறைகளைப் பற்றி மாணவர்கள், பெற்றோர்கள் அறிந்திருக்கக்கூடும். எனினும், இத்துறையில் உள்ள ஒட்டுமொத்த பாடப்பிரிவுகள் குறித்தும் இங்கே பார்க்கலாம். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் சில, குறிப்பிட்ட சில கல்லூரிகளில் மட்டுமே பயிற்றுவிக்கப்படுவதாகவும் இருக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

படிப்பின் விவரம்: பி.இ., / பி.டெக்., (Bachelor of Engineering / Bachelor of Technology)

 

இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள்: 

 

ஏரோனாட்டிகல், ஆட்டோமொபைல், விவசாயம், கணினி அறிவியல், கட்டிடக்கலை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேசன், மின்னியல் மற்றும் மின்னணுவியல், ஜியோ இன்பர்மேடிக்ஸ், இண்டஸ்ட்ரியல், மெக்கானிகல், மெட்டீரியல் சயின்ஸ், மைனிங், மேனுபாக்சரிங், பிரிண்டிங், புரடக்ஷன், கெமிக்கல், செராமிக், ஃபுட், இன்பர்மேஷன், இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி, பெட்ரோ கெமிக்கல், பார்மாசூட்டிகல், ரப்பர் அண்ட் பிளாஸ்டிக், டெக்ஸ்டைல், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெக்கட்ரானிக்ஸ், பயோ மெடிக்கல், எலக்ட்ரானிக் அன்டு டெலிகம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன், மரைன் இன்ஜினியரிங், மெட்டலர்ஜிகல், பெட்ரோலியம், ரோபோடிக்ஸ் அன்டு ஆட்டோமேஷன், ஃபேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகள் இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் வழங்கப்படுகின்றன. 

 

மேற்சொன்ன ஒவ்வொரு துறையும் ஏதோ ஒரு வகையில் தனித்துவம் மிக்கதுதான். எந்த துறையை எடுத்து படித்தாலும் ஆர்வத்துடன், கூடுதல் அறிவையும் வளர்த்து கொள்ளும்போது வேலைவாய்ப்புக்கும் ஒருபோதும் பஞ்சமில்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும். 

 

அடிப்படைக் கல்வித்தகுதி: அண்ணா பல்கலைக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எந்த ஒரு இன்ஜினியரிங், கல்லூரியில் சேர்வதற்கும் பிளஸ்-2 தேர்ச்சி போதுமானது. 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்து படித்தவராக இருக்க வேண்டும். அல்லது, பிளஸ்-2வில் Vocational Group எனப்படும் தொழிற்கல்வி பாடப்பிரிவு படித்திருக்க வேண்டும்.

 

படிப்பின் கால அளவு: 4 ஆண்டுகள்


தேர்வு முறை:

12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மாநில கலந்தாய்வு முறையில் இன்ஜினியரிங் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.


தொடர்புடைய துறை: அண்ணா பல்கலைக்கழகம்


இணையதள முகவரி:

www.annauniv.edu
www.annauniversitycounselling.com,  www.tndte.ac.in


இன்ஜினியரிங், கல்லூரிகள் விவரம்: 


1. அண்ணா பல்கலைக்கழகம் - 2 வளாகங்கள் (கிண்டி, குரோம்பேட்டை வளாகம்)

2. அண்ணா பல்கலை வளாக கல்லூரிகள் - 13

3. அண்ணா பல்கலை சார்ந்த அரசுக்கல்லூரிகள் - 9

4. அரசு உதவி பெறும் கல்லூரிகள் - 3

5. சுயநிதி கல்லூரிகள் - 537 


கல்வியின் பயன்பாடு: பி.இ., / பி.டெக்., படித்தவர்கள் அடுத்து எம்.இ., எம்.டெக்., எம்.பி.ஏ., போன்ற உயர்கல்வி படிக்கலாம். தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளை Board of Apprentice வாயிலாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெறலாம். 

 

அரசு மற்றும் தனியார் துறைகளில் உதவி பொறியாளர், கண்காணிப்பாளர், தொழில்நுட்ப அலுவலர் போன்ற வேலைவாய்ப்புகளைப் பெறலாம். சுயதொழில் தொடங்கவும் வாய்ப்புகள் உள்ளன. வெளி நாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

 

மேற்கண்ட விவரங்களை பின் வரும் இணையதளங்களில் பார்த்து கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

 

அதாவது, இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்கள், தொழில் பழகுநர் பயிற்சி பெற Board of
Apprenticeship-ன் www.boatsr-apprentice.tn.nic.in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்தல் வேண்டும். அதன் முகவரி: Board of Apprenticeship
No. 4th Cross Street, CIT. Campus, Tharamani, Chennai - 13.

 

 

Next Story

பொதுத்தேர்வு தொடங்கும் முன்னரே மாவட்டக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
District Education Officer suspended before public examination

2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி (01.03.2024) தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 302 மையங்களில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் அடங்குவர்.

மேலும் பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் சுமார் 47 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

திட்டமிட்டபடி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே கல்வித்துறையில் இருக்கக்கூடிய அலுவலர்களுக்கு ஆயத்தப் பணிகளுக்கான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருந்தது. தேர்வு செயல்பாடுகளில் சுணக்கமிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபாவை சஸ்பெண்ட் செய்து இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முறையான பொதுத்தேர்வு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யாமல் சுணக்கம் காட்டியதால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பே மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Next Story

 உடல் உறுப்பு தானம்; கல்வி செலவை ஏற்ற அமைச்சர் காந்தி

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Minister Gandhi bears the education expenses of the organ donor's children

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அவரைக்கரை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ருத்திரகோட்டி(42). கார் ஓட்டுநர். இவருக்கு திருமணம் ஆகி 3 பெண் பிள்ளை ஒரு ஆண்  பிள்ளை உள்ள நிலையில் இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து விட்டார் இவர், கடந்த சனிக்கிழமை அதிகாலை அவரைக்கரை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் சிஎம்சி ரத்தினகிரி வளாகத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து, ருத்திரகோட்டியின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்பேரில், அவரது இதயம், ஒரு சிறுநீரகம் ஆகியவை சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனைக்கும். கல்லீரல், மற்றொரு சிறுநீரகம் மற்றும் கார்னியா ஆகியவை சிஎம்சி மருத்துவமனைக்கும் தானமாக பெறப்பட்டு அங்கு தயார் நிலையில் இருந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. 

Minister Gandhi bears the education expenses of the organ donor's children

மூளைச்சாவு அடைந்த ருத்திரகோட்டிக்கு அரசு மரியாதை செலுத்தும் வகையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி ஆகியோர் இறந்தவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பெரிய பெண் பிள்ளைக்கு ஐடிஐ அரசு கல்லூரியில் சேர்த்து விடுவதாகவும் மீதமுள்ள இரண்டு மற்றும் ஒரு ஆண் பிள்ளை ஆகியோரின் பள்ளி படிப்பு செலவை தானே ஏற்பதாக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.