Skip to main content

மாணவர் வழிகாட்டி: பி.ஏ. பொருளாதாரம் படிச்சாலும் உயரலாம்! #13

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

 

students  BA, Economics Study

 

 

கோவிட்-19 தாக்கத்தால் உலக நாடுகள் பலவும் பொருளாதார ரீதியில் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இம்மாதிரியான சூழ்நிலையில் நாட்டின் பொருளாதார செயல்பாடுகளை மீட்டெடுக்கும் பொறுப்பு அனைத்துத் துறைகளுக்கும் இருக்கிறது. குறிப்பாக, பொருளியல் வல்லுநர்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது.

 

பொருளாதாரம், வாழ்வில் இரண்டற கலந்து விட்டது. எனினும், மாணவர் என்ற அளவில் அவர்களுக்கு மேல்நிலையில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும்போதுதான் அதைப்பற்றிய அடிப்படை பாடமே தொடங்குகிறது எனலாம். அதுவும், மேல்நிலை வகுப்பில் கணிதம், அறிவியல் பாடப்பிரிவுகளைக் கடந்து குரூப்-3 எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பொருளியல் பாடம் அறிமுகம் ஆகிறது.

 

பொதுவாகவே மூன்றாவது பாடப்பிரிவை தெரிவு செய்வோரில் பலரும், உயர்கல்வி என்று வரும்போது பி.காம்., பட்டப்படிப்பிற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். எந்தளவுக்கு பி.காம்., படிப்பிற்கு வேலைவாய்ப்பு இருக்கிறதோ, அதே அளவுக்கான வேலைவாய்ப்புகளும், வளமான எதிர்காலமும் பி.ஏ., பொருளாதாரம் படிக்கும் மாணவர்களுக்கும் இருக்கிறது. இதை நாம் ஆரம்பத்தில் இருந்தே இந்த தொடரில் சொல்லி வருகிறோம். எந்த படிப்பும் மோசமானது அல்ல; எல்லா படிப்புக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கிறது. பொருளியலும் அப்படித்தான்.

 

பிளஸ்-2 கலைப்பிரிவு மாணவர்களுக்கு, பி.ஏ. தொகுதியில் மொழிப்பாடம் முதல் ஏராளமான பாடப்பிரிவுகள் இருக்கின்றன. இப்போது நாம் பொருளாதாரம் படிப்பிற்கான வாய்ப்புகள் குறித்து காணலாம்.

 

பாடப்பிரிவு: பி.ஏ., பொருளாதாரம்

கால அளவு: 3 ஆண்டுகள்

 

தகுதி: பிளஸ்-2 தேர்ச்சி. கலைப்பிரிவில் பொருளாதாரத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

 

இணையான படிப்புகள்: பிளஸ்-2 முடித்து இளங்கலை பொருளாதாரம் படிக்க விரும்புவோர், அத்துடன் பி.ஏ., வணிக பொருளாதாரம், பி.எஸ்சி., கணித பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளையும் எடுத்து படிக்க முடியும். இவை மூன்றுக்கும் சின்னச்சின்ன வேறுபாடுகள் இருக்கின்றன. அவற்றை புரிந்து கொண்டு படித்தாலே போதுமானது.

 

பி.ஏ. பொருளாதாரம்: பொருளாதாரத்தில் அடிப்படைகள், கோட்பாடுகள், பயன்பாடுகள் ஆகியவற்றை மையமாக கொண்ட பாடமாகும்.

 

பி.ஏ. வணிக பொருளாதாரம்: இது நிறுவன நடத்தை, நிதி மேலாண்மை, செலவு கணக்கியல் வணிக தொடர்பியல், சந்தைப்படுத்துதல் ஆகிய கூறுகளை உள்ளடக்கியதாகும்.

 

பி.எஸ்.சி. கணித பொருளாதாரம்: இப்படிப்பில் நடைமுறை பாடங்கள் மட்டுமின்றி, புள்ளியியல், கணிதம் ஆகியவற்றை விரிவாக படிக்கலாம்.

 

சேர்க்கை நடைமுறை: அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பொருளியல் பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரிகளில் சேர பிளஸ்2வில் பெற்ற மதிப்பெண்கள் போதுமானது.

 

மேலும், புது டெல்லியில் உள்ள இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தின் மூலம் நிதியுதவி பெறும் நிறுவனமான மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகானாமிக்ஸ் (எம்எஸ்இ) கல்வி நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளைக் கொண்ட ஒருங்கிணைந்த எம்.ஏ., பொருளாதாரம் படிப்பில் சேர்ந்து பயிலலாம். இதில் முதல் மூன்று ஆண்டுகள் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. அதன்பிறகு இரண்டு ஆண்டுகள், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் நிறுவனத்திலும் பயிலலாம். இக்கல்வி நிறுவனத்தில் சேர இந்திய அளவில் நடத்தப்படும் நுழைத்தேர்வில் வெற்றி பெறுவது அவசியம்.

 

பொருளியல் துறை என்பது வாழ்வின் தவிர்க்க முடியாத பேரங்கமாக திகழ்கிறது. கிராமப்புற வளர்ச்சி, புள்ளியியல், உள்நாட்டு உற்பத்தி, வங்கித்துறை, நிதி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளுடன் நெருக்கிய தொடர்புடையது என்பதால், இத்துறைக்கு எல்லா காலத்திலும் மவுசு குறைவதே இல்லை.

 

படிப்புக்கான செலவு: அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ. பொருளாதாரம் படிப்பு வழங்கப்படுவதால், பெரும்பாலும் செலவு மிக மிகக்குறைவு. முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்தால், பொருளியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்குமே படிப்புக்கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்கிறது. ஒரு சாதாரண கல்லூரியில் படிப்பதைக் காட்டிலும், இதற்கென உள்ள தனித்துவமான கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும்போது கூடுதல் திறனை வளர்த்துக்கொள்ள ஏதுவாகிறது.

 

வேலைவாய்ப்புகள்: பி.ஏ. பொருளியல் படித்து முடித்த பட்டதாரிகளுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. சுய தொழில் முனைவோராகவும் உருவாக முடியும்.

 

பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளில் பல துறைகளிலும் போட்டித்தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பில் சேரலாம்.

 

தனியாரைப் பொருத்தவரை தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், பன்னாட்டு மற்றும் வணிக நிறுவனங்கள், பங்கு பரிவர்த்தனைகள், சந்தை ஆய்வுத்துறை உள்ளிட்ட பல துறைகளிலும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. மேலும், நிறுவன மற்றும் வாடிக்கையாளர் சேவை மேலாளர், சந்தை ஆய்வாளர், பொருளாதார ஆலோசகர், பொருளாதார முன்கணிப்பாளர், பொருளாதார மற்றும் சமூக தொழில் முனைவோர், இழப்பீடு மற்றும் பெனிஃபிட் மேலாளர், கடன் மற்றும் நிதி ஆய்வாளர் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளும் உள்ளன. பிஏ பொருளியல் படித்த தனித்திறன் உள்ள ஒருவரால் தனக்குத்தானே வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதோடு, மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க முடியும் என்பது இப்படிப்பின் மற்றொரு சிறப்பு அம்சம் ஆகும்.

 

 

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.