Skip to main content

மாணவர் வழிகாட்டி: எல்லா காலத்துக்கும் ஏற்ற வேளாண்மைத்துறை சார் படிப்புகள்! #5

Published on 10/08/2020 | Edited on 10/08/2020
Agricultural courses suitable for all seasons

 

பிளஸ்-2 முடித்த மாணவர்களின் இறுதிக்கட்ட விருப்பப் பட்டியல்களுள் சில பாடப்பிரிவுகள் உண்டு. அவற்றுள் வேளாண்மைத்துறை சார்ந்த பாடப்பிரிவுகளும் அடங்கும்.


இன்றும் நம்மில் பெரும்பாலானோர், பி.எஸ்.ஸி., விவசாயம் படிப்போரை கொஞ்சம் ஏற, இறங்க பார்ப்பதுண்டு. எல்லா துறைகளுமே ஏதோ ஒரு வகையில் தனித்துவம் மிக்கது என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. 


அதேநேரம், எந்த ஒரு துறையிலும் தொய்வும், சரிவும் ஏற்படலாம். ஆனால் ஒருபோதும் சரிவையோ, வீழ்ச்சியையோ சந்தித்திராத துறை என்றால் அவை வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறைகள் மட்டுமே. காரணம், உலகம் உயிர்ப்புடன் இயங்குவதற்குத் தேவையான உணவை உற்பத்தி செய்வது வேளாண்மைத்துறை என்பதுதான்.


ஆகையால், இத்துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன, இத்துறையைப் படிப்பதால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், எதிர்காலம் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம். 


அடிப்படைக் கல்வித்தகுதி: 


12ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவுகளைப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் வேளாண்மைத்துறை சார்ந்த பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயில முடியும்.


என்னென்ன பாடப்பிரிவுகள்?: 


B.Sc., Agriculture (விவசாயம்)

 

B.Sc., Agriculture Management (விவசாய மேலாண்மை)

 

B.Tech., Bio Informatics (உயிர் தகவல்)

 

B.Tech., Agriculture Engineering (வேளாண்மை பொறியியல்)

 

B.Tech., Agriculture Information Technology (விவசாய தகவல் தொழில்நுட்பம்)

 

B.Sc., Horticulture (தோட்டக்கலை)

 

B.Tech., Horticulture (தோட்டக்கலை தொழில்நுட்பம்)

 

B.Sc., Forestry (காடு வளர்ப்பு)

 

B.Sc., Cericulture (பட்டு வளர்ப்பு)

 

B.Tech., Food Process Engineering (உணவு பதப்படுத்துதல்) 


கால அளவு: 


மேற்கண்ட படிப்புகள் அனைத்துமே 4 ஆண்டு பாடப்பிரிவுகள் ஆகும். 


பட்டய படிப்புகள்:


இவைத் தவிர, விவசாயம் (Diploma in Agriculture), தோட்டக்கலை (Diploma in Horticulture) பிரிவுகளில் இரண்டு ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ எனப்படும் பட்டய படிப்புகளும் வழங்கப்படுகின்றன. 


கோயம்புத்தூர், திண்டிவனம், தர்மபுரி, ஒரத்த நாடு ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிற்சி மையங்களில் டிப்ளமோ பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. மேலும், திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்திலும் டிப்ளமோ பயிற்சி அளிக்கப்படுகிறது.


மத்திய தேர்வு முறை:


ஐசிஏஆர் (ICAR - Indian Council for Agriculture Research) நடத்தும் பொது நுழைவுத்தேர்வில் (AIEEA) வெற்றி பெறுவதன் மூலம் மேற்கண்ட பாடப்பிரிவுகளில் சேரலாம். 

இணையத்தள முகவரி: www.icar.org.in

 

மாநில அரசு தேர்வு முறை: 


பிளஸ்-2 பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்தும் மாநில பொது கலந்தாய்வு முறை மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறும். 

இணையத்தள முகவரி: www.tnau.ac.in


வேலைவாய்ப்பு: 


இன்றைய நிலையில் உலகம் முழுவதும் 800 கோடி வாடிக்கையாளர்களை உள்ளடக்கிய உணவு உற்பத்தித் துறைக்கு மூலகாரணியாக விளங்குவது வேளாண்மைத்துறை மட்டுமே. அதனால், மனிதர்களுக்கு பசி இருக்கும் வரை இத்துறையில் வேலைவாய்ப்புகளுக்கும் ஒருபோதும் பஞ்சமில்லை.


பி.எஸ்சி., விவசாயம், தோட்டக்கலை படித்தவர்கள் இதே துறையில் எம்.எஸ்சி., எம்.டெக்., என முதுநிலை படிப்பைத் தொடரலாம். 


மத்திய, மாநில அரசுத்துறைகள் மட்டுமின்றி தனியார் துறைகளிலும் வேளாண் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றலாம். விரிவாக்க அலுவலர், கள அலுவலர், வேளாண் அலுவலர், பண்ணை மேலாளர், ஆராய்ச்சி அலுவலர், தரக்கட்டுப்பாட்டு அலுவலர், வணிக மேம்பாட்டு அலுவலர், விதை தொழில்நுட்ப அலுவலர் மற்றும் வங்கிகள், இன்சூரன்ஸ், உணவுப்பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.


மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள்:


1. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம், புது டெல்லி. (Indian Agricultural Research Institute) PUSA, New Delhi -110012.

 

2. தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி. (National Banana Research Centre)

 

3. மத்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், கோயம்புத்தூர். (Central Sugarcane Breeding Institute) 

 

4. மத்திய வேளாண்மை பல்கலைக்கழகம், இம்பால், மணிப்பூர்.

 

5. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம், போர்ட்பிளேர், அந்தமான். (Indian Agricultural Research
Institute),Port Blair, Andhaman.

 

6. இந்திய வேளாண்மை பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், போபால், புது டெல்லி. (Indian Agricultural
Engineering Research Institute), Bhopal, New Delhi -110 012).

 

7. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம், ஹைதராபாத். (Indian Agricultural Research Institute), Hyderabad.

 

8. இந்திய உயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், ராஞ்சி. (Indian Agricultural Bio Technology Institute), Ranchi.


இந்நிறுவனங்கள் பற்றிய மேலதிக விவரங்களை www.icar.gov.in என்ற இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.


தமிழகத்தில் உள்ள வேளாண்மைக் கல்லூரிகள் விவரம்:


1. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

 

2. தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வாழவச்சானூர், திருவண்ணாமலை.

 

3. தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்த நாடு, தஞ்சாவூர்.

 

4. தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை.

 

5. முதுநிலை பயிற்சி கல்லூரி, வேளாண்மை பல்கலைக்கழக வளாகம், கோயம்புத்தூர்.

 

6. தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.

 

7. தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பல்லாபுரம், குமுளூர், திருச்சி.

 

8. அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி.

 

9. தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிக்குளம், திருநெல்வேலி.


தோட்டக்கலை மத்திய அரசு கல்லூரிகள் பட்டியல்:


1. Central Institute of Sub-Tropical Horticulture, Lucknow.

 

2. Central Institute of Temperate Horticulture, Srinagar.

 

3. Indian Institue of Horticultural Research, Bangalore.

 

4. Central Institute for Arid Horticulture,Bikaneer, Rajasthan,

 

Web site:- www.icar.gov.in 


தோட்டக்கலை மாநில அரசு கல்லூரிகளின் விவரம்:


1. தமிழ்நாடு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்புத்தூர்.

 

2. தமிழ்நாடு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பெரியகுளம், தேனி மாவட்டம்.

 

3. தமிழ்நாடு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை.

 

4. தமிழ்நாடு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (பெண்கள்), திருச்சி. இணையத்தள முகவரி: 


வனத்துறை மத்திய அரசு கல்லூரி:

 

Central Forest Research Institute Dehradun, Uttarakhand


வனத்துறை மாநில அரசு கல்லூரிகளின் விவரம்:


தமிழ்நாடு வனத்துறை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்.


மேலும் விவரங்களை www.tnau.ac.in என்ற இணையத்தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சி.ஏ.ஏவை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் (படங்கள்)

Published on 12/03/2024 | Edited on 12/03/2024

 

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் சி.ஏ.ஏ விளம்பர பதாகைகளைத் தீ வைத்து எரித்தனர்.

Next Story

படியில் தொங்கியபடி பயணம்; கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Travel hanging on a step; 3 college students were loss their live

பேருந்தில் பயணிக்கும் சில பள்ளி, கல்லூரி மாணவர்கள் அபாயகரமாக படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் பேருந்தில் படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருநாவலூரில் தனியார் பேருந்தின் படியில் கல்லூரி மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணித்ததாகக் கூறப்படுகிறது. பேருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த கண்டெய்னர் லாரி உரசியதில் படியில் தொங்கியபடி பயணித்த மூன்று பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் காமேஷ், மோனிஷ், தனுஷ் ஆகிய மூன்று இளைஞர்களின் உடல்களும் பிரேப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.