Skip to main content

மாணவர் வழிகாட்டி: தகவல் தொடர்பு துறை படிப்புகளை வழங்கும் ஐஐஐடி! #10

Published on 22/08/2020 | Edited on 27/08/2020
 IIIT offers Communication Department courses! # 10

 

 

பிரத்யேகமான படிப்புகளை வழங்கும் பல்கலைகள் மற்றும் கல்லூரிகளில் படிப்பதன் மூலம் 100 சதவீதம் உடனடி வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட துறையில் கூடுதல் நிபுணத்துவமும் பெற ஏதுவாகிறது. 

 

இனி கம்ப்யூட்டர்களும், டிஜிட்டல் தொழில்நுட்பமும்தான் உலகை முழுமையாக ஆளப்போகின்றன. இத்தகைய சூழலில் தகவல் தொடர்புத்துறைக்கு வளமான எதிர்காலம் இருப்பதை நாம் சொல்லாமலே புரிந்து கொள்ள முடியும்.

 

பி.இ., தகவல் தொடர்பு படிப்புகளை கிட்டத்தட்ட எல்லா பொறியியல் கல்லூரிகளும் வழங்குகின்றன. எனினும், இத்துறைக்கென பிரத்யேகமாக இயங்கும் பல்கலைகளில் படிப்பதன் மூலம் படிக்கும் காலத்திலேயே இத்துறையில் உலகளவிலான வளர்ச்சி பற்றியும், அதன் நிபுணர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்புகளும் கிடைக்கின்றன. 

 

ஆனால், தகவல் தொடர்பு துறைக்கென்றே தனித்துவமாக இயங்கும் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி (Indian Institute of Information Technology - IIIT), இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி (International Institute of Information Technology) ஆகிய பல்கலைக்கழகங்களில் வெறும் பிளஸ்-2 மதிப்பெண்களை மட்டும் வைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து விட முடியாது. இந்நிறுவனங்களில் வழங்கப்படும் படிப்புகள், மாணவர் சேர்க்கை நடைமுறைகளை இனி பார்க்கலாம்...

 

படிப்பின் விவரம்: பி.டெக்.,

அடிப்படை கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி. கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை பயின்றிருக்க வேண்டும்.

 

படிப்பின் கால அளவு: 4 ஆண்டுகள்

மாணவர் சேர்க்கை நடைமுறை: ஐஐடி நடத்தும் ஜேஇஇ மெயின் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்த விவரங்களை <www.jeemain.nic.in> என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

 

கல்லூரிகளின் விவரம்: 


1. இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி 

2. இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி


பயன்பாடு:

எம்.டெக்., எம்.பி.ஏ., உள்ளிட்ட உயர்கல்வியில் சேர்ந்து படிக்கலாம். தனியார் துறையில் வளாக தேர்வு மூலம் உடனடியாக வேலைவாய்ப்பு பெறலாம். 


அரசு மற்றும் தனியார் துறைகளில் பொறியாளர், கண்காணிப்பாளர், தொழில்நுட்ப அலுவலர் போன்ற பணி வாய்ப்புகளைப் பெறலாம். சுயதொழிலும் தொடங்கலாம். வெளிநாடுகளிலும் இத்துறைக்கு எப்போதும் ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

 

இண்டியன் இன்ஸ்டிடியூப் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி நிறுவனம் வழங்கும் படிப்புகள்: 

கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (Computer Science Engineering)

எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (Electronics and Comunication Engineering)

இன்பர்மேஷன் டெக்னாலஜி (Information Technology)

கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் (Computer Engineering)

எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (Electronics and Comunication Engineering) (Design and Manufacturing) 

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (டிசைன் அண்ட் மேனுபாக்சரிங்) (Mechanical Engineering) (Design and Manufacturing)

மெக்கானிக்கல் (ஸ்மார்ட் இன்ஜினியரிங்) / டிசைன் (Mechanical) (Smart Engineering)

கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் அப்ளைடு மேத்தமேடிக்ஸ் (Computer Science and Applied Mathematics)

 

 IIIT offers Communication Department courses! # 10


ஆகிய படிப்புகளை மேற்கண்ட கல்வி நிறுவனம் வழங்குகிறது. 


அதேபோல், இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி (International Institute of Information Technology) கல்வி நிறுவனம் பி.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிகல் அன்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய பட்டப்படிப்புகளை வழங்குகின்றது.  இவ்விரு கல்வி நிலையங்கள் தொடர்பாக பின்வரும் இணையதள பக்கங்களில் பார்த்து மேலும் விவரங்களைப் பெறலாம். (அட்டவணையைக் காண்க)

 

 

Next Story

தேர்தலுக்குப் பிறகு ஷாக் கொடுக்க இருக்கும் சிம்கார்டு நிறுவனங்கள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
SIM card companies to give a shock after the election

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் முடிந்த கையோடு செல்போன் நிறுவனங்களின் கட்டணங்கள் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளியான தகவலின் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் செல்போன் கட்டண உயர்வு 15 சதவீதத்திலிருந்து 17 சதவீதம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவன கட்டணங்களும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

ரூபாய் 208 ஆக உள்ள பார்த்தி ஏர்டெலின் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் 2027 இறுதியில் ரூபாய் 286 என உயரும் என கூறப்படுகிறது. கட்டணம் உயர்த்தப்படுவதன் மூலம் பார்த்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு பல மடங்கு வருவாய் கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்போன் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

பொதுத்தேர்வு தொடங்கும் முன்னரே மாவட்டக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
District Education Officer suspended before public examination

2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி (01.03.2024) தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 302 மையங்களில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் அடங்குவர்.

மேலும் பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் சுமார் 47 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

திட்டமிட்டபடி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே கல்வித்துறையில் இருக்கக்கூடிய அலுவலர்களுக்கு ஆயத்தப் பணிகளுக்கான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருந்தது. தேர்வு செயல்பாடுகளில் சுணக்கமிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபாவை சஸ்பெண்ட் செய்து இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முறையான பொதுத்தேர்வு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யாமல் சுணக்கம் காட்டியதால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பே மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.