Skip to main content

"12,000 முறைப் பாடினார்... நம்மாழ்வார் காட்சி தந்தார்" - நாஞ்சில் சம்பத் பேச்சு

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

"SONG 12,000 times...Nammalwar gave a glimpse"- Nanjil Sampad SPEECH

 

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு அரசியல்வாதியும் இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "வைணவத்தாலும், சைவத்தாலும் தமிழ் செழுந்தமிழாயிற்று. சங்க காலத்திலிருந்து ஆயிரம் ஆயிரம் புலவர்கள் பாடியும், பரவியும் கொண்டாடிய தமிழ் சமயக் குறவர்களின் சந்தனத் தமிழ் வந்ததற்குப் பிறகு அந்த தமிழ் செழித்தது; கொழித்தது. திருமுறை என்று பேசப்படக்கூடிய சமயக் குறவர்களின் பாட்டு ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் கண்ணனை, பெருமாளைக் கொண்டாடுகிற ஆழ்வார்களின் பாட்டு தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய பக்தி இயக்கத்தை உருவாக்கியுள்ளது. 

 

காவிய கவிஞர் வாலி தான் சொல்லுவார். நூறாயிரம் இருந்தாலும் நாலாயிரம் போல் வருமா என்று. அது என்ன நாலாயிரம்? நாலாயிரம் திவ்யப் பிரபந்தம். 12 ஆழ்வார்கள் பாடியது. பேய் ஆழ்வார், பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட 12 பேர் பாடினார்கள். அது நாலாயிரம் பாட்டு. இது எப்படி கிடைச்சது?

 

ஸ்ரீரங்கநாதமுனினு சொல்லி காட்டுமன்னார்குடியில் ஒருவர் இருந்தார். அவர் தினசரி காலை எழுந்திருப்பார். குளிப்பார்; பெருமாளை சேவிப்பார். இப்படி பெருமாளை சேவிப்பதும் பெருமாளுக்கு மலர் மாலை கட்டுவதும் பெருமாளுக்கு சேவிப்பது பெரும் பாக்கியம் என்று கருதி மனநிறைவுப் பெறுவது தான் அந்த ஸ்ரீரங்கநாதமுனிக்கு அன்றாட செயல். கோவிலில் சேவித்து வருகிறபோது, அவரது காதில் ஒரு குரல் கேட்கிறது. 

 

நாதமுனி காதில் நாதம் போல், வேதம் போல், கீதம் போல் வந்து விழுகிறது. உடனே பரவசப்படுகிறார். இது எங்கிருந்து வந்தது அப்படினு கேட்கிறார். ஒரு 10 பாட்டு இருக்குன்ணு சொல்லி, நம்மாழ்வாரின் 10 பாட்டை சொல்லுகிறார்கள். இன்னும் 990 பாட்டு இருக்கிறது. எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. 990 பாட்டு மட்டும்தானா., இல்லை நாலாயிரம் இருக்கிறது. எங்கு இருக்கிறது என்று அவருக்குத் தெரியவில்லை; தேடுகிறார், தேடுகிறார் நாதமுனி தேடுகிறார். ஓடுகிறார், ஓடுகிறார் ஆழ்வார் திருநகரிக்கு ஓடுகிறார். நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார் திருநகரிக்கு வந்து, அங்கு பாராங்குசர் என்று சொல்லக்கூடிய ஒரு முனிவர் அவரைப் பார்க்கிறார். 

 

அவர் ஒரு பன்னிரண்டு பாட்டை சொல்லிக் கொடுக்கிறார். அப்போது பராங்குசர் சொன்னார் நீ 12,000 தடவை இந்தப் பாடல்களைப் பாடினால் நம்மாழ்வார் உனக்கு காட்சி தருவார். இந்த 12,000 முறை இந்தப் பாடல்களை மனனம் செய்து பக்தியோடு உள்ளம் உருக இறைவனை ஒன்றி , அவனோடு ஐக்கியமாகி அவனோடு கலந்து அவனோடு கரைந்து இந்தப் பாட்டை 12,000 முறை நீ உச்சரித்து ஓதினால் நம்மாழ்வார் உனக்குக் காட்சி தருவார் என்று பராங்குசர் கூறினார். 

 

அப்படியா மனிதனால் முடிகிற காரியமா என்று நாதமுனி யோசிக்கவில்லை. ஒரு இடத்தில் உட்கார்ந்தார். 12,000 முறை அந்தப் பாட்டை உள்ளம் உருகப் பாடினார். பெருமாளை நினைத்து உருகினார்.  கதறி, உருகி 12,000 முறை சொல்லிவிட்டார். நம்மாழ்வார் காட்சித் தந்தார்" என்று குறிப்பிட்டார். 

 

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.