Skip to main content

ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள் 2020- 2022

Published on 01/09/2020 | Edited on 01/09/2020

 

ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள் 2020- 2022
(பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்டக் குறிப்புகள் அடங்கியது)
கணித்தவர்: ஜோதிட மாமணி, முனைவர் முருகு பாலமுருகன்

 

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி, சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 7-ஆம்  தேதி  (23-9-2020),  புதன்கிழமை  காலை 8.  22 மணியளவில் ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு  ராசியிலிருந்து  விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர். 12-4-2022  மதியம் 1.  38  மணிவரை ராகு ரிஷபத்திலும், கேது விருச்சிகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றனர். (வாக்கியப் பஞ்சாங்கப்படி, 1-9-2020, செவ்வாய்க்கிழமை பகல் 2. 10 மணிமுதல் 21-3-2022 மதியம் 3.02 மணிவரை). 

 

மேஷம்
(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

எ திலும் தைரியத்துடன் செயல்படும் திறன் கொண்டவராகவும், தன்னை நம்பியவர்களை எத்தகைய துன்பத்திலிருந்தும் காப்பாற்றக் கூடிய பரந்த மனப்பான்மை கொண்டவராகவும் விளங்கும் மேஷ ராசி வாசகர்களே! இதுநாள்வரை உங்கள் ராசிக்கு 3, 9-ல் சஞ்சரிக்கும் சர்ப்ப கிரகங்களான ராகு- கேது, திருக்கணிதப்படி ஏற்படும் பெயர்ச்சிக்குப் பிறகு, 23-9-2020 முதல் 12-4-2022 வரை ராகு 2-ஆம் வீட்டிலும், கேது 8-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால், குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமைக்குறைவு, ஒன்றுமில்லாத விஷயத் திற்குக்கூட கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அனுசரித்துச் செல்வது நல்லது. உற்றார்- உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் மட்டுமே சிறுசிறு சிக்கல்களை சமாளிக்கமுடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது, உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. ஒரு ராசியில் நீண்டநாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி, திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது, அதிக முதலீடுகொண்ட செயல்களைக் கவனமாகக் கையாள்வது சிறப்பு. வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைப்பளு இருக்கும். எது எப்படியிருந்தாலும் தனகாரகன் குரு 20-11-2020 வரை பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும், அடுத்து லாப ஸ்தானமான 11-ல் அதிசாரமாக (கும்ப ராசியில்) 6-4-2021 முதல் 14-9-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-4-2022 வரை சஞ்சரிக்கவுள்ள காலத்தில் பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. உங்கள் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் தடைப்பட்டுக் கொண்டிருக்கும் திருமண சுபகாரியங்கள் யாவும் தடைவிலகி கைகூடும். புத்திரவழியில் மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நவீன பொருட்கள், வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கக்கூடிய யோகம் சிலருக்கு உண்டாகும். எடுக்கும் பணிகளை சிறப்புடன் செய்து முடித்து அனை வரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். குரு (மகர ராசியில்) 20-11-2020 முதல் 6-4-2021 வரை மற்றும் 14-9-2021 முதல் 20-11-2021 வரை உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்க இருப்பதால், இக்காலங்களில் பண விஷயங்களில் கவனமுடன் இருப்பது, எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் சுமாராக இருக்கும். கூட்டாளிகளின் ஆதரவால் நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலைக் குறைத்துக் கொள்ளமுடியும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது, பெரிய தொகை ஈடுபடுத்தும் விஷயத்தில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள், அலர்ஜி ஏற்படலாம் என்றாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்படமுடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது சிறப்பு. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சில நேரங்களில் ஆரோக்கியப் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால், எதிலும் கவனத்துடன் இருப்பது, மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது. முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால், விட்டுக்கொடுத்துச் செல்வது, உற்றார்- உறவினர் களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பணவரவு சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு 2021 ஏப்ரலுக்குப் பின் நல்ல வரன் கிடைக்கப்பெற்று திருமண சுபகாரியம் கைகூடும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்குப் புத்திர பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகம்

செய்யும் பணியில் சில நிம்மதிக்குறைவுகளை சந்திக்க நேர்ந்தாலும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு வெளியிடங்களில் தங்கிப் பணிபுரிய நேரிடும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கு ஏற்ற நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றாலும் வேலை அதிகப்படியாக இருக்கும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் சற்று மந்தநிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாமல் சமாளிக்கமுடியும். நவீன கருவிகளை வாங்க அரசுவழியில் கடனுதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளையும் வேலையாட்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கடன்கள் ஓரளவுக்குக் குறையும். தூரப் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை ஏற்ற- இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படவும். பிறரை நம்பி பெரிய தொகை கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். நம்பியவர்களே பண விஷயத்தில் நெருக்கடிகளை உண்டாக்குவார்கள் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. வம்பு, வழக்குகளில் இழுபறிநிலையே நீடிக்கும். கொடுத்த பணத்தைப் பல்வேறு தடைகளுக்குப் பின்பே வசூலிக்கமுடியும்.

அரசியல்

மக்களின் ஆதரவைப்பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பெயர், புகழ், கௌரவப் பதவிகள் தேடிவரும் என்றாலும், வரவுக்குமீறிய வீண்செலவுகள் ஏற்படும். எதைப் பேசுவதென்றாலும் சிந்தித்துப் பேச்சினால் நற்பலனை அடையமுடியும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பணவரவுகளில் ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் எதையும் சமாளித்துவிடுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றிகிட்டும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைப்பதால் லாபம் பெருகும். உடனிருப்பவர்களிடமும் பங்காளிடமும் பேச்சில் கவனத்துடன் இருப்பதும், வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது. புதிய நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. காய்கனிகளாலும், கால்நடைகளாலும் லாபம் அடையமுடியும். கலைஞர்கள்

உங்கள் உழைப்பிற்கான பலனைப் பெறமுடியும். சிறுசிறு தடைகள் இருக்கும் என்பதால், கிடைக்கும் வாய்ப்புகளைத் தற்போது பயன்படுத்தினால் 2021 ஏப்ரலுக்குப் பின்பு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் செயல்பாடுகளால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். வரவேண்டிய பணத்தொகை கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைத்து உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். இழந்தவற்றை மீட்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். பயணங்கள்மூலம் அலைச்சல் இருந்தாலும், அதனால் ஆதாயம் இருக்கும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வதன்மூலம் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கமுடியும். சுபகாரியங்கள் 2020 ஏப்ரலுக்குப் பின் கைகூடும். புத்திரவழியில் நல்ல செய்தி கிடைக்கும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது, கணவர்வழி உறவினர்களிடம் பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவுகளில் ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துரீதியான நற்பலன் கிடைக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் மந்தநிலை ஏற்படும் என்பதால் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். விளையாட்டுப்போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுகளையும் தட்டிச்செல்வீர்கள். தேவையற்ற நட்புகள் உங்களை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லும். வாகனங்களில் செல்லும் போதும் நிதானம் தேவை.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-9-2020 முதல் 26-1-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 2-ல் ராசியாதிபதி செவ்வாய் நட்சத்திரமான மிருகசீரிஷத்திலும், கேது 8-ல் கேட்டை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் பொருளாதரா ரீதியான ஏற்ற- இறக்கமான பலன்களையே பெற முடியும் என்பதால், நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு மற்றவர்களிடம் நிதானமாக செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானத் தைக் கடைப்பிடித்து, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. தனகாரகன் குரு 20-11-2020 வரை பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சாரம் செய்வதால், எந்தப் பிரச்சினையும் எதிர்கொண்டு நற்பலன்களை அடைவீர்கள். பணவரவு தேவைக்கேற்ற படி இருக்கும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிறுசிறு அலைச்சல், டென்ஷனால் உடற்சோர்வு, சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியிருக்காது. சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமதம் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். என்றாலும், வேலை நிமித்தமாக குடும்பத்தைவிட்டுப் பிரிந்து சிறிதுநாள் இருக்கநேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்துவிடுவீர்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-1-2021 முதல் 1-6-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 2-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 8-ல் கேட்டை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் எதிலும் கவன மாக இருப்பது நல்லது. சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில்ரீதியாக வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கலாம். எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள், வாக்குவாதங்கள் தோன்றும். பொறுமையுடன் செயல்படுவது நல்லது. திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும். அசையும், அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படக்கூடும். வீடு, வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். 6-4-2021 முதல் குரு அதிசாரமாக 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதாரம் தேவைக்கேற்றபடி இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது சிறப்பு. ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்று அ லைச்சல் ஏற் படும். மற்ற வர்களி டம் விட் டுக்ù கா டுத்துச் செல்வதன்மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்வது உத்தமம்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 2-6-2021 முதல் 5-10-2021 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 2-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 8-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதிக் குறைவு ஏற்படும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அஜீரணக் கோளாறு, உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் செய்யநேரிடும். சனி 10-ல் சஞ்சரிப்பதால் பண வரவு சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடன்கள் ஏற்படாது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர்மூலம் நல்லது நடக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகலாம். அசையும், அசையா சொத்துகளால் வீண்விரயங்களை சந்திக்கநேரிடும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. 14-9-2021 வரை குரு அதிசாரமாக 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத நன்மைகள் ஏற்பட்டு அனுகூலங்களை அடைவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெறமுடியும். உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மனதிற்கு நிம்மதியைத் தரும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 6-10-2021 முதல் 8-2-2022 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 2-ல் கிருத்திகை நட்சத்திரத்தில், கேது 8-ல் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு. எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கட்டுப்பாடு தேவை. முடிந்தவரை தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே வாக்குவாதங்கள் தோன்றும் காலம் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தாமல் இருப்பதன்மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். 10-ல் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 20-11-2021 முதல் குரு 11-ல் சஞ்சரிக்க இருப்பதால், பொருளாதார நிலையில் நல்லதொரு மாற்றம் உண்டாகி பண வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளி களை அனுசரித்துச் சென்றால் மேன்மைகளை அடையலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன்மூலம் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெற முடியும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடையமுடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலைக் குறைத்துக் கொள்ள முடியும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 9-2-2022 முதல் 12-4-2022 வரை

 

Ad

 

உங்கள் ராசிக்கு ராகு 2-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 8-ல் விசாக நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். என்றாலும் 11-ல் குரு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று சாதகமான பலன்களை அடைவீர்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. முடிந்தவரை மற்றவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்பட்டால் நற்பலன் ஏற்படும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் மேன்மைகளை அடைவார்கள். கடந்தகால பொருட்தேக்கம் விலகி முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளி மற்றும் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெறமுடியும். வேலைப்பளு இருந்தாலும் சம்பள உயர்வு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 1, 2, 3, 9.

நிறம் : ஆழ்சிவப்பு.

கிழமை : செவ்வாய். கல் : பவளம்.

திசை : தெற்கு. தெய்வம் : முருகன்.

பரிகாரம்

மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால், ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைக்குட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவதும் நல்லது. கேதுவுக்குப் பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது. சனி 10-ல் சஞ்சரிப்பதால் சனிக்குத் தொடர்ந்து பரிகாரம் செய்வது அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கிழமைகளில் விரதமிருந்து நல்லெண்ணெய் பமேற்றுவது, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீலநிற சங்குப்பூக்கள் மற்றும் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வது நல்லது.

ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2-ஆம் பாதங்கள்)

சா ந்தமான குணம் இருந்தாலும் கோபம் வந்தால் கட்டுப்படுத்த முடியாத இயல்பு கொண்ட ரிஷப ராசி வாசகர்களே! உங்கள் ராசிக்கு 2, 8-ல் சஞ்சரித்த சர்ப்ப கிரகங்களான ராகு- கேது 23-9-2020 முதல் 12-4-2022 வரை ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால், கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது, கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் சிறுசிறு சிக்கல்களை எதிர்கொள்ளமுடியும். 8-ல் சஞ்சரித்த கேது 7-ல் சஞ்சரிக்க இருப்பதால், கடந்தகால உடல்நிலை பாதிப்பு விலகும் என்றாலும் உணவு விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்ப ஒற்றுமை சாதகமாக இருக்கும், பெற்றோரின் ஆதரவுமூலம் குடும்பத்தில் நல்லது நடக்கும். சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு, ஒரு ராசியில் நீண்டகாலம் தங்கும் கிரகமான சனி, தற்போது திருக்கணிதப்படி 9-ல் சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப் பவர் களுக் கு நல் ல வாய்ப்பு கள் கிû டக் கும். ú வû ல நிமித்தமாக வெளியூர்களில் இருந்தவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைந்துவாழும் வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு வெளியூர்மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

20-11-2020 முதல் 6-4-2021 வரை மற்றும் 14-9-2021 முதல் 20-11-2021

வரை குரு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். பொருளாதார நிலையும் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாகக் குறையும். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். வீடு, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் அனுகூலப்பலன் கிடைக்கும். பிறரை நம்பி பெரிய தொகை கடனாகக் கொடுப்பது, முன்ஜாமின் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் இருந்தாலும் அடையவேண்டிய இலக்கை அடைந்து வி டமுடி யும். உத்தி ú யா கஸ் தர் களுக் குச் ù சய் யும் பணியி ல் நிம்மதியிருக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். உயரதிகாரிகளால் சிறுசிறு கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடன்பணிபுரியவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு 10-ல் அதிசாரமாக (கும்ப ராசியில்) 6-4-2021 முதல் 14-9-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-4-2022 வரை சஞ்சரிக்க உள்ள காலத்தில், தொழில், வியாபாரத்தில் கவனத்துடன் இருப்பது வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குறிப்பாக, இக்காலத்தில் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் நிலை, அலைச்சல், டென்ஷன் ஏற்படலாம். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உடல்நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. உங்களின் விடாமுயற்சியால் எதையும் எதிர்கொள்வீர்கள். எந்தவொரு காரியத்திலும் அதிக உழைப்பினை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் ஆரோக்கிய பாதிப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினை களால் மனநிம்மதி குறையும். தூரப் பயணங்கள் உங்களுக்கு அலைச்சலை தந்தாலும் அதனால் பொருளாதார அனுகூலங்கள் உண்டாகும்.

குடும்பம், பொருளாதார நிலை

பண வரவு சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத வீண்செலவுகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப்பதன்மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன் உண்டாகும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலைப்பளு அதிகரித்தாலும் அதனால் ஆதாயம் இருக்கும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகள் வரும் நாட்களில் கிடைக்கும். உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானமாக இருந்தால் நல்ல நிலையை அடையமுடியும். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். வெளியூர்மூலம் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். வீண்பழிச்சொற்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். சக நண்பர்களிடம் பேச்சைக் குறைத்துக்கொண்டு தங்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தக்க நேரத்தில் கிடைத்து வாழ்வில் படிப்படியான வளர்ச்சியை அடைவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் அனுகூலங்கள் கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது சிந்தித்து செயல்பட்டால் வளமான பலனை அடையமுடியும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதும் அவர்களைக் கலந்தாலோசித்து எந்த முடிவுகளையும் எடுப்பதும் நல்லது. அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல்மூலம் அனுகூலப்பலன்கள் கிடைக்கும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி, முன்ஜாமின் கொடுப்பது போன்றவற்றில் கவனத்துடன் செயல்பட்டால் மேன்மைகள் உண்டாகும். கொடுத்த கடன்களை வசூலிக்கமுடியும். வம்பு, வழக்குகளில் நல்ல ர்ப்புகள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

அரசியல்

மக்களின் ஆதரவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நற்பெயர் எடுப்பீர்கள். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுசெய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தாலும், அதனால் உங்கள் பெயர், புகழ் மேன்படும். அடிக்கடி தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்கள் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பத்திரிக்கை நண்பர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் நன்றாக அமைந்து லாபகரமான பலனை அடைவீர்கள். உழைப்பிற்கேற்ற லாபத்தைப் பெற்று உங்களின் கடந்தகால கடன்கள் படிப்படியாகக் குறையும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டாலும் எதையும் தனித்துநின்று சமாளித்துவிடுவீர்கள். அரசுவழியில் கிடைக்கவேண்டிய மானிய உதவிகள்மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்கள் விஷயத்தில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது உத்தமம்.

கலைஞர்கள்

புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். ரசிகர்களின் ஆதரவுகள் குறையாமல் இருப்பதால் எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடமுடியும். கார், பங்களா வாங்கும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். வெளியூர்ப் பயணங்கள் மேற்கொண்டு அதன்மூலம் ஆதாயம் அடைவீர்கள். பத்திரிகைகளில் வரும் கிசுகிசுக்களால் மனநிம்மதி குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். திருமண சுபகாரியங்கள் நிறைவேறி மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவி அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத் துக்கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்கள்மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுப்பீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை அளிக்கும். தேவையற்ற பொழுதுபோக்குகளால் மனம் வேறுபாதைகளுக்குச் செல்லும். விளையாட்டுப்போட்டிகளின்போது கவனமுடன் செயல்படுவதும் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும் நல்லது. கல்விக்கான பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும்.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-9-2020 முதல் 26-1-2021 வரை

ராகு ஜென்ம ராசியில் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 7-ல் கேட்டை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால், முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவு நிலவினாலும், உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதி சனி 9-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தற்போது 8-ல் சஞ்சரிக்கும் குரு 20-11-2020 முதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் பணவரவு சிறப் பா கவே இருக்கும். தடைப்பட்ட சுபகாரி யங்கள் கைகூடும். முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிபெறுவீர்கள். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலன் கிட்டும். தொழில், வியாபாரத்தில் கடந்தகால மந்த நிலை விலகி முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபகரமான பலனை அடையமுடியும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் நற்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பால் எதையும் சமாளிப்பீர்கள். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களைத் தவிர்த்தால் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-1-2021 முதல் 1-6-2021 வரை

ராகு ஜென்ம ராசியில் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 7-ல் கேட்டை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால், கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் ஒற்றுமையும் சுபிட்சமும் சிறப்பாகவே இருக்கும். உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிபெறுவீர்கள். பணம் பலவழிகளில் தேடிவரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வீடு, மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகளைத் தற்போது மேற்கொள்ளலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்களும் தேடிவரும். செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும், பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதையும் சிறப்புடன் செய்துமுடித்து உயரதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப் பெண்களைப் பெறமுடியும். பெற்றோர், ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்துகொண்டால் அனைவரின் ஆதரவுகளையும் பெறுவீர்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 2-6-2021 முதல் 5-10-2021 வரை

ராகு ஜென்ம ராசியில் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 7-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்பதால், நீங்கள் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்று கூறமுடியாது. என்றாலும், அன்றாடப் பணிகளைச் செய்துமுடிப்பதில் எந்த சிரமமும் இருக்காது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. குருவும் அதிசாரமாக 10-ல் 14-9-2021 முடிய சஞ்சரிப்பதால், திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சிலகாலம் தள்ளிவைப்பது உத்தமம். உங்கள் ராசிக்கு 9-ல் சனி சஞ்சரிப்பதால், எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றிபெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தும்போது சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை உண்டாகக்கூடும் என்பதால் முழுமூச்சுடன் முயன்று படிப்பது உத்தமம்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 6-10-2021 முதல் 8-2-2022 வரை

ராகு ஜென்ம ராசியில் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 7-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றும் என்பதால், உற்றார்- உறவினர்களை அனுசரித்துச்செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொண்டால் மட்டுமே தேவையற்ற மருத்துவச் செலவுகள் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியும். குரு 20-11-2021 முதல் 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும், எதிர்பாராத உதவிகள்மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளை எதிர்கொள்ளநேரிடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவும் என்றாலும், சனி 9-ல் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும். நீங்கள் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைந்துவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியிருக்கும். என்றாலும் வேலைப்பளு ஏற்படும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். கொடுக்கல்& வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் கவன முடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 9-2-2022 முதல் 12-4-2022 வரை

ராகு ஜென்ம ராசியில் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 7-ல் விசாக நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதாலும், குரு 10-ல் சஞ்சரிப் பதாலும் நீங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வது சிறப்பு. நேரத்திற்கு உணவுண்ண முடியாத சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலைக் குறைத்துக்கொள்ளலாம். பாக்கிய ஸ்தானமான 9-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்து குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும், அடிக்கடி சிறுசிறு ஒற்றுமைக்குறைவுகளும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப் பலனை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறக்கூடிய ஆற்றல் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தும்போது கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்துச் செல்வது சிறப்பு. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்படசெயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். விளையாட்டுப்போட்டிகளில் கவனம் தேவை. எண் : 5, 6, 8.

அதிர்ஷ்டம் அளிப்பவை

நிறம் : வெண்மை, நீலம்.

கிழமை : வெள்ளி, சனி. கல் : வைரம்.

திசை : தென்கிழக்கு. தெய்வம் : விஷ்ணு, லட்சுமி.

பரிகாரம்

ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால், ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைக்குட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவது. கேதுவுக்குப் பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

மிதுனம்
(மிருகசீரிஷம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

நல்ல ர்க்கமான சிந்தனையும், அறிவாற்றலும், நினைவாற்றலும் கொண்ட மிதுனராசி வாசகர்களே! இதுநாள்வரை ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது என சஞ்சரித்த சர்ப்ப கிரகங்கள், திருக்கணித பஞ்சாங்கப்படி 23-9-2020 முதல் 12-4-2022 வரை ராகு 12-ஆம் வீட்டிலும், கேது 6-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் நிலவும் கருத்து வேறுப்பாடுகள் படிப்படியாகக் குறைந்து கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நெருங்கியவர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு திருப்திகரமாக அமைந்து ஏற்றங்களை அடைவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறை யும். ஆன்மிகம், தெய்வீகக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்புகள் அமையும். குரு 20-11-2020 வரை சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதும் ,அடுத்து பாக்கிய ஸ்தானமான 9-ல் அதிசாரமாக (கும்ப ராசியில்) 6-4-2021 முதல் 14-9-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-4-2022 வரை சஞ்சரிக்க உள்ள காலத்தில் பண வரவு சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் குறையும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் தேடிவரும். சுபகாரியங்கள் யாவும் தடையின்றி கைகூடும். புத்திர பாக்கியமும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவதால் அபிவிருத்தியும் பெருகும். எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகளும் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வர். உயரதிகாரிகளின் ஆதரவும், உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மனநிம்மதியை ஏற்படுத்தும். ஒரு ராசியில் நீண்டநாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால், உங்களுக்கு அஷ்டமச்சனி நடப்பதால், உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால், உணவு விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. செய்யும் செயல்களில் இடையூறு ஏற்படலாம் என்பதால், முடிந்தவரை பொறுப்புகளை அதிகரித்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனத்துடன் செல்வது நல்லது. பணவரவு சாதகமாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது, அதிக முதலீடுகளைடத் தவிர்த்துவிடுவது நல்லது. முடிந்தவரை கடன் வாங்குவதைத் தவிர்ப்பது சிறப்பு.

குரு (மகர ராசியில்) 20-11-2020 முதல் 6-4-2021 வரையும், 14-9-2021

முதல் 20-11-2021 வரையும் உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ள காலத்தில் பொருளாதாரரீதியாக நெருக்கடி, சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கேது 6-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் பலம் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். மருத்துவச் செலவுகள் சற்றே குறையும். என்றாலும் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது நல்லது. மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். வீண்விரயங்கள் ஏற்படும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவதும், தூரப் பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை

குடும் பத்தி ல் மகிழ்ச்சியும் சுபி ட் சமும் நி றை ந்திருக் கும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கப்பெற்று திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். கணவன்- மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவதால் அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர் களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். பணவரவு தாராளமாக இருந்து குடும்பத்தேவைகள் யாவும் தடையின்றிப் பூர்த்தியாகும். என்றாலும் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. பூமி, மனை வாங்கும் விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது சிறப்பு. கடன் வாங்குவதைத் தவிர்ப்பது உத்தமம்.

உத்தியோகம்

பணியில் உயரதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி தரும். திறமைக்கேற்ற பாராட்டு கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களை அடையமுடியும். எடுக்கும் பணிகளைச் செய்துமுடிக்க இடையூறுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடையமுடியும். சக நண்பர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்நீச்சல் போடவேண்டி இருக்கும். நீங்கள் உழைக்கவேண்டும் என நினைத்தாலும் உடல் ஒத்துழைக்காது. ஆரோக்கிய பாதிப்பால் எதிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவதால் அடையவேண்டிய இலக்கை அடைந்துவிடுவீர்கள். வெளியூர்த் தொடர்புகளால் மேன்மைகளை அடைவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சரளமாக இருப்பதால், கொடுக்கல்- வாங்கலில் சாதகமான நிலையினை அடையமுடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகையைக் கையாளும்போது கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். வம்பு, வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

அரசியல்

பெயரும் புகழும் உயரக்கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைக்குப் பின் வெற்றிகிட்டும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்க்கொள்வீர்கள். மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பணவரவு இருந்தாலும் அதிகப்படியான செலவுகள் ஏற்படும் காலம் என்பதால், எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச்சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கு ஏற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் பணவரவு சிறப்பாக அமையும். நீர்வரத்தில் பிரச்சினை, பங்காளிகளிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. நவீன முயற்சிகளைக் கையாண்டு அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி, நிலம், மனை போன்றவற்றை வாங்கும் வாய்ப்புகள் ஏற்பட்டாலும் அதன்மூலம் கடன் உண்டாகும். உறவினர்களின் ஆதரவு நிம்மதியைத் தரும்.

கலைஞர்கள்

எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று உங்களின் நடிப்புத்திறன் வெளிச்சத்திற்கு வரும். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால் மனநிறைவு உண்டாகும். அதிக அலைச்சலால் சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு இடையூறு ஏற்படும். புதிய முதலீடுகளில் கவன மாக இருப்பது நல்லது. பணவரவு சிறப்பாக இருந்தாலும் கடன் இருக்கும். இசைத்துறையில் உள்ளவர்களுக்கும் சாதிக்கக்கூடிய அளவிற்கு வாய்ப்புகள் தேடிவரும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் இருந்தாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடமுடியும். கணவர்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கப்பெற்று மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட உறவினர்களிடம் பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது. சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.

மாணவ- மாணவியர்

கல்வியில் திறம்பட செயல்பட ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எது எப்படி இருந்தாலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறமுடியும். விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான பரிசுகளைப் பெறுவீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். பொழுதுபோக்குகளால் கல்வியில் நாட்டம் குறையும்.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-9-2020 முதல் 26-1-2021 வரை

உங்கள் ராசிக்கு கேது 6-ல் ராசியாதிபதி புதன் நட்சத்திரமான கேட்டையில் சஞ்சரிப்பதால், எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். கணவர்- மனைவி கருத்து வேறுபாடுகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். குரு 20-11-2020 முடிய 7-ல் சஞ்சரிப்பதால், எதிர்பாராத பணவரவு ஏற்பட்டு குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். சனி 8-ல், ராகு 12-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சி ஏற்படுத்தும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தும்போது கவனத்துடன் இருந்தால் லாபத்தினை அடையமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்யும் காரியங்களில் மட்டும் கவனம் தேவை. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வதால் கிடைக்கவேண்டிய லாபம் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுகளைப் பெற முடியும். எதிர்பார்க்கும் இடமாற்றமும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-1-2021 முதல் 1-6-2021 வரை

உங்கள் ராசிக்கு 12-ல் ராகு ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 8-ல் குரு, சனி சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உங்கள் தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் நல்லது. கணவர்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். முடிந்தவரை உற்றார்- உறவினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. கேது 6-ல் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 8-ல் சஞ்சரிக்கும் குரு 6-4-2021 முதல் அதிசாரமாக 9-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் நீங்கள் எதிர்நீச்சல் போட்டாவது எதையும் சமாளித்துவிடுவீர்கள். பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று எந்த பிரச்சினையையும் சமாளித்துவிடமுடியும். வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமை ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவதன்மூலம் அலைச்சலைக் குறைத்துக்கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிவர்களின் ஆதரவால் எடுக்கும் பணிகளை சிறப்பாகச் செய்துமுடிக்க முடியும். ஆன்மிகம், தெய்வீகக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளைக் குறைத்துக்கொண்டு கல்வியில் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெறமுடியும்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 2-6-2021 முதல் 5-10-2021 வரை

உங்கள் ராசிக்கு கேது 6-ல் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 14-9-2021 முடிய குரு அதிசாரமாக 9-ல் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால், போட்டி, பொறாமை, மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்றுவிடக்கூடிய ஆற்றல் உண்டாகும். பணவரவு ஏற்ற- இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சனி 8-ல், ராகு 12-ல் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உங்களது உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனத்துடன் செல்வது நல்லது. கணவர்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்துச் செல்வது நல்லது. நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும் அதிக முதலீடுகளை எச்சரிக்கையுடன் கையாள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். வெளிவட்டாரத் தொடர்புகள் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை அதிகமாக இருந்தாலும் பதவி உயர்வுகள் கிடைக்கும். உற்றார்- உறவினர் களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். மாணவர்கள் கல்வியில் கவனம் எடுத்துக்கொள்வது உத்தமம்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 6-10-2021 முதல் 8-2-2022 வரை

ஜென்ம ராசிக்கு கேது 6-ல் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 8-ல் சஞ்சரிக்கும் குரு 20-11-2021 முதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருக்கும் தடைகள் விலகி நல்லது நடக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, கைகால் அசதி, சோர்வு போன்றவை ஏற்பட்டாலும், அன்றாடப் பணிகளைச் செய்து முடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. பணிபுரிபவர்களுக்குப் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறுவதில் இருக்கும் தடைகள் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை கிட்டும். ராகு 12-ல் சஞ்சரிப்பதால் வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் நிறைவேறக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் தேவையற்ற அலைச் சலை சந்திக்க நேர்ந்தாலும் அதன்மூலம் அனுகூலப் பலனையும் அடையமுடியும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 9-2-2022 முதல் 12-4-2022 வரை

ஜென்ம ராசிக்கு கேது 6-ல் குரு நட்சத்திரமான விசாகத்தில் சஞ்சரிப்பதும், 9-ல் குரு சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால், நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும் காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் லாபமும், வெற்றியும் கிட்டும். பணவரவு சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்துவரும் பிரச்சினைகள் படிப்படியாகக் குறை யும். கணவர்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி னாலும் ஒற்றுமை குறையாது. எதிர்பாராத தனவரவுகளால் கடன்களும் குறையும். கொடுக்கல்- வாங்கலில் இருக்கும் தடைகளும் விலகும். சனி 8-ல் சஞ்சரித்து அஷ்டமச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்பட்டாலும், எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் அமையும். உற்றார்- உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படமுடியும் என்றாலும் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். மேலதிகாரிகளிடம் பேசும்போது சற்று பொறுமையுடன் இருப்பது மிகவும் உத்தமம். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

அதிர்ஷடம் அளிப்பவை

எண் : 5, 6, 8.

நிறம் : பச்சை, வெள்ளை.

கிழமை : புதன், வெள்ளி. கல் : மரகதம்.

திசை : வடக்கு. தெய்வம் : விஷ்ணு.

பரிகாரம்

மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 12-ல் ராகு சஞ்சரிப்பதால், ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைக்குட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது. சனி 8-ல் சஞ்சரித்து அஷ்டமச்சனி நடப்பதால், தொடர்ந்து சனிக்குப் பரிகாரம் செய்வது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கிழமைகளில் விரதமிருந்து நல்லெண்ணெய் பமேற்றுவது, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீலநிற சங்குப் பூக்கள் மற்றும் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வது நல்லது.

கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

யாருக்கும் அஞ்சாத குணமும் மற்றவர்களைக் கவரக்கூடிய உடலமைப்பும் கொண்ட கடக ராசி வாசகர்களே! இதுநாள்வரை 6, 12-ல் சஞ்சரித்த கேது, ராகு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 23-9-2020 முதல் 12-4-2022 வரை உங்கள் ராசிக்கு 11-ல் ராகுவும், 5-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் எடுத்துக்கொண்டால் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்படமுடியும். பூர்வீக சொத்துரீதியாக பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் பொறுமையுடன் இருப்பது, சிந்தித்துப் பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க அளவிற்கு லாபப் பலனை அடைவீர்கள். எதிர்பாராத அனுகூலங்களும் ஏற்படும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். கடந்தகால பிரச்சினைகள் குறையும். ஒரு ராசியில் நீண்டநாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி, திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் கணவர்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்குக்கூட ஒற்றுமைக்குறைவு ஏற்படலாம் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச்சென்றால் எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும். குரு (மகர ராசியில்) 20-11-2020 முதல் 6-4-2021 வரையும், 14-9-2021 முதல் 20-11-2021 வரையும் உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். ஆன்மிகம், தெய்வீகக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உற்றார்- உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் அலைச்சல் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலத்தில் எதிர்பார்த்த லாபம் சிறப்பாக அமையும். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் அபிவிருத்தி பெருகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள்மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

குரு 20-11-2020 வரை ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதும், அடுத்து அஷ்டம ஸ்தானமான 8-ல் அதிசாரமாக (கும்ப ராசியில்) 6-4-2021 முதல் 14-9-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-4-2022 வரை சஞ்சரிக்க உள்ள காலத்தில் பண விஷயத்தில் சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. மறைமுக எதிர்ப்புகள், வம்பு, வழக்குகள், அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றி கிட்டும். எந்தவொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போடவேண்டி இருக்கும். பெரிய தொகை ஈடுபடுத்தும்போது சிந்தித்து செயல்படுவது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்துவந்த வீண்மருத்துவச் செலவுகள் குறையும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருப்பதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் அலைச்சலைக் குறைத்துக்கொள்ள முடியும். சிலருக்கு வயிற்றுப் பிரச்சினை ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை

பண வரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் சுபிட்சமான நிலை உண்டாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் தேடிவரும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கக்கூடிய யோகம் அமையும். புத்திரவழியில் சிறிது மனக்கவலை ஏற்படலாம் என்பதால் அவர்களைப் பக்குவமாகக் கையாள்வது நல்லது. பூர்வீக சொத்துகள்ரீதியாக உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகளுக்கு வாய்ப்பு இருப்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது.

உத்தியோகம்

பணியில் திறமைக்கேற்ற பாராட்டு கிடைக்கப்பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விரும்பம் நிறை வேறும். அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பது மன நிம்மதியைத் தந்தாலும், சக நண்பர்களிடம் கவனத்துடன் பேசுவது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையிருக்கும். வெளியூர், வெளிநாட்டுத்தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். தொழில்ரீதியான அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உங்கள் செயல்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். கூட்டாளிகளை மட்டும் அனுசரித்துச் செல்வது, எந்தச் செயல் செய்வதென்றாலும் அவர்களைக் கலந்தலோசித்து செயல்படுவது மிகவும் நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். பெரிய தொகை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். கடன் பிரச்சினை கள் குறையும். வம்பு, வழக்கு போன்றவற்றில் ர்ப்பு சாதகமாக வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

அரசியல்

பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். தலைவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவு பெருகும். வருவாய் அதிகரிக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். பத்திரிகையாளர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச்சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளைக் கையாண்டு பயிர் விளைச்சலைப் பெருக்குவீர்கள். அரசுவழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரவு சிறப் பாக இருப்பதால் கடன்கள் குறையும். கால்நடைகளால் அனுகூலம் உண்டாகும்.

கலைஞர்கள்

எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்குப் பஞ்சம் ஏற்படாது. புதிய கார், பங்களா போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும். படப்பிடிப்பிற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக அமையும். சேமிப்புகள் பெருகும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். சிலருக்கு கர்ப்பப்பை சம்பந்தபட்ட பாதிப்பு ஏற்படலாம் என்பதால், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கணவர்- மனைவியிடையே வாக்குவாதம் ஏற்படலாம் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உற்றார்- உறவினர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. சொந்த வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வீர்கள். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்துச்செல்லும் என்பதால் நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை. பள்ளி, கல்லூரிக்குப் பெருமை சேர்க்கும்விதமாக நடந்து கொள்வீர்கள்.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-9-2020 முதல் 26-1-2021 வரை

உங்கள் ராசிக்கு ராகு 11-ல் செவ்வாய் நட்சத்திரமான மிருகசீரிஷத் திலும், கேது 5-ல் கேட்டை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால், இதுவரை இருந்த இடைஞ்சல்கள் எல்லாம்விலகி வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப்பெறுவதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். 20-11-2020 முதல் தனகாரகன் குரு 7-ல் சஞ்சாரம் செய்ய இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணம் பலவழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். கணவர்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல்& வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைத் தடையின்றிப் பெற முடியும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வதன்மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ளமுடியும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27--1-2021 முதல் 1-6-2021 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 11-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், தனகாரகன் குரு 7-ல் சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சினை கள் விலகி கணவர்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல்நிலை சிறப்பாக இருக்கும் கடந்தகால வீண்செலவுகள் குறையும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கப்பெற்று மங்களகரமான கைகூடும். பணவரவு சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாகக் குறையும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கவேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 5-ல் கேது சஞ்சரிப்பதால் புத்திரவழியில் சிறிது மனக்கவலை ஏற்படும். சனி 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை பிறருக்கு கடனாகக் கொடுக்கும்போது கவனத்துடன் இருப்பது சிறப்பு. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்தப் பிரச்சினைகளும் ஏற்படாது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடையமுடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடை வார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்பு வோரின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி, கல்லூரிக்குப் பெருமை சேர்ப்பார்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 2-6-2021 முதல் 5-10-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 11- ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 5-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் பணவரவு தேவைக்கேற்படி இருக்கும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால், முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்வதன்மூலம் வீண்விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்கமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றினாலும் பெரியளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. சனி 7-ல் சஞ்சரிப்பதால், கணவர்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக வாய்ப்பு ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. சிலருக்கு பூர்வீக சொத்துகளால் சிறுசிறு வீண் செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, உடன்பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமை அதிகரிக்கும். என்றாலும், எதையும் சமாளித்து ஏற்றமான பலன்களைப் பெறுவீர்கள். கிடைக்கவேண்டிய லாபமும் கிடைக்கும். மாணவர்கள் கல்விக்காகப் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் உண்டாவதால் சற்றே அலைச்சல் அதிகரிக்கும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 6-10-2021 முதல் 8-2-2022 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 11-ல் கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், குரு 20-11-2021 முடிய 7-ல் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால், எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்க்கும் வெற்றிகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வதன்மூலம் மருத்துவச் செலவுகளைக் குறைத்துக்கொள்ளமுடியும். சனி 7-ல் சஞ்சரிப் பதால், குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக்குறைவுகள் உண்டாகும் என்பதால், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, அனைவரிடமும் விட்டுக்கொடுத்து நடப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது என்றாலும், நிறைய போட்டிகளை சமாளித்தே லாபத்தைப் பெறவேண்டியிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். பணவரவுகளில் சுமாரான நிலையிருந்தாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்துவிட முடியும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன் ஏற்படாமல் சமாளிக்கலாம். எந்தவொரு காரியத் திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தி யோகஸ்தர்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் உயர திகாரிகளின் ஆதரவைப் பெறலாம். உடன்பணிபுரியும் சக ஊழியர்களை அனுசரித்துச் சென்றால் வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்ளமுடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 9-2-2022 முதல் 12-4-2022 வரை

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் விசாக நட்சத்திரத்தில் கேது சஞ்சரிப்பதும், 8-ல் குரு சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால், எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றிபெறமுடியும். பணவரவு எதிர்பார்த்தபடி கிடைத்தாலும் வீண்செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக் கறை எடுத்துக்கொள்வது நல்லது. சனி 7-ல் சஞ்சரிப்பதால் கணவர்- மனைவியிடையே பிரச்சினைகள் உண்டாகி நிம்மதிக்குறைவு ஏற்படும். திருமண சுபகாரியங்கள் கைகூட சற்று தாமதம் ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அவர்கள்மூலம் அனுகூலப்பலன்களைப் பெறமுடியும். ராகு 11-ல் சஞ்சரிப்பதால், உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப்பெற தாமதமாகும். என்றாலும், உயரதிகாரிகளின் பாராட்டு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகை பிறருக்கு கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்தே லாபம் பெற முடியும். வெளியூர் ,வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் என்றாலும், தேவையற்ற பயணங்களைக் குறைத்துக்கொள்வது நல்லது. மாணவர்களுக்கு உடல்நிலையில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் கல்வியில் மந்த நிலை உண்டாகும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 1, 2, 3, 9.

நிறம் : வெள்ளை, சிவப்பு.

கிழமை : திங்கள், வியாழன். கல் : முத்து.

திசை : வடகிழக்கு.

தெய்வம் : வேங்கடாசலபதி.

பரிகாரம்

கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 5-ல் சஞ்சரிப்பதால், விநாயகரை வழிபடுவது, "ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ' என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது, செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது, சர்ப்ப சாந்தி செய்வது நல்லது. சனி 7-ல் சஞ்சரித்துக் கண்டச்சனி நடைபெறுவதால், அனுமனை யும் விநாயகரையும் வழிபடுவது, நல்லெண்ணெய் ஊற்றி பமேற்றவும், சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீலநிற சங்குப் பூக்கள் மற்றும் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வதும் நல்லது.

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவராகவும், எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்டவராகவும் விளங்கும் சிம்ம ராசி வாசகர்களே! உங்கள் ராசிக்கு இதுநாள்வரை நிழல் கிரகங்களான ராகு 11-லும், கேது 5-லும் சஞ்சாரம் செய்தனர். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 23-9-2020 முதல் 12-4-2022 வரை ராகு ஜென்ம ராசிக்கு 10-ஆம் வீட்டிலும், கேது 4-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ளது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். பணவரவு சிறப்பாக இருந்தாலும் வேலை அதிகப்படியாக இருக்கும். வீடு, வாகனங்கள் மூலம் எதிர்பாராத வகையில் வீண்செலவுகள் ஏற்படும். சர்ப்ப கிரக சஞ்சாரம் சாதகமற்றிருந்தாலும், ஒரு ராசியில் அதிக நாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி, திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால், பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். தாராள தனவரவால் சகலவிதத்திலும் மேன்மையான பலனை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருந்தாலும் லாபம் அதிகரிக்கும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொண்டால் அது பரிபூரண வெற்றியைத் தரும். கடன் குறைந்து சேமிக்கும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும் சூழ்நிலை ஏற்படும். சக நண்பர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உங்கள் ராசியாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகமும் தனகாரகனுமான குரு பகவான் 20-11-2020 வரை பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதும், அடுத்து சமசப்தம ஸ்தானமான 7-ல் (அதிசாரமாக கும்ப ராசியில்) 6-4-2021 முதல் 14-9-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-4-2022 வரை சஞ்சரிக்க உள்ள காலத்தில், உங்களது பொருளாதார நிலை மேலும் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும், கணவர்- மனைவியிடையே அன்னோன்யம் அதிகரிக்கும். அழகிய குழந்தையைப் பெறும் வாய்ப்பு உண்டாகும். உற்றார்- உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் தொடக்கத்தில் சில பிரச்சினைகளை சந்தித்தாலும், ர்ப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் அ னுகூலப் பலன்களை அடைவீர்கள். கொடுத்த கடன்களும் தக்க நேரத்தில் திரும்ப வரும். வீண்வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். குரு (மகர ராசியில்) 20-11-2020 முதல் 6-4-2021 வரையும், 14-9-2021 முதல் 20-11-2021 வரையும் உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ள காலத்தில் மட்டும் பணவிஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், சனி 6-ல் சஞ்சரிப்பதால் அனுகூலப்பலனை அடையமுடியும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் மனநிம்மதி ஏற்படும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன், இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகக்கூடிய காலம் என்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. தூரப் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். எதிலும் கடினமாக உழைத்தால்தான் நற்பலனை அடையமுடியும்.

குடும்பம், பொருளாதாரநிலை

பணவரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவர்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் நல்லதாக நினைத்துச்செய்யும் காரியங்களும் உற்றார்- உறவினர்களுக்கு பிரச்சினைகளை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றிபெறமுடியும். அசையும், அசையா சொத்துகளால் சிறுசிறு சுபச்செலவுகளை சந்திப்பீர்கள்.

உத்தியோகம்

எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள், பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும், வேலை அதிகமாக இருக்கும் என்பதால் மன நிம்மதியற்ற நிலை ஏற்படும். உடல்நிலை காரணமாக எதிலும் திறம்பட செயல்பட முடியாத நிலை ஏற்படும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் மேன்மைகள் அடைவீர்கள் என்றாலும் அதிக அலைச்சல் இருக்கும். தொழில் சிறப்பாக இருந்தாலும் மறைமுகப் பிரச்சினைகளால் அனைத்து விஷயத்திலும் அதிக அக்கறை எடுக்கவேண்டி இருக்கும். உடனிருப்பவர்கள் பிரச்சினை களை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெற முடியாமல் போகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால், கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தி முன்னேற்றத்தை அடையமுடியும். கொடுத்த பணத்தை பலமுறை அலைந்துதான் வாங்கமுடியும். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வம்பு, வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பூர்வீக சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

அரசியல்

மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதால் உங்கள் பதவிக்குப் பங்கம் ஏற்படாது பார்த்துக்கொள்ள முடியும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளவேண்டி வருவதால் அலைச்சல் அதிகரிக்கும். உடல்நிலையில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும்போது சிந்தித்து செயல்படவும். பத்திரிகை நண்பர்களைப் பகைத்துக்கொள்ளாதிருப்பது உத்தமம்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். நவீன முறைகளைக் கையாண்டு விளைச்சலைப் பெருக்கமுடியும். என்றாலும், வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். இதனால், செய்யும் பணியில் சுணக்கம் ஏற்படும். எதிலும் நீங்களே முன்னின்று செயல்படவேண்டிய நிலை இருப்பதால், ஓய்வில்லாமல் உழைக்கவேண்டி இருக்கும். பங்காளிகளைப் பகைத்துக்கொள்ளாமல் இருப்பது, பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

கலைஞர்கள்

எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது. வரவேண்டிய பணத்தொகை வரவேண்டிய நேரத்தில் வந்துசேரும். கார், பங்களா வாங்கும் யோகம் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் சுகவாழ்விற்கு இடையூறு, தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச்செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். குடும்பப் பிரச்சினைகளை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாதிருக்கவும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமைந்து மகிழ்ச்சி ஏற்படும். பணவரவு தேவைக்கேற்றவாறு சிறப்பாக இருக்கும்.

மாணவ- மாணவியர்

மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாகக்கூடிய காலமிது என்பதால், முழுஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்விரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். விளையாட்டுப்போட்டிகளின்போது கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-9-2020 முதல் 26-1-2021 வரை உங்கள் ராசிக்கு 10-ல் ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், சனி 6-லும் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால், எடுக்கும் முயற்சிகளில் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றிகளைப் பெற்று விடமுடியும். கணவர்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்திலுள்ள அனைவரையும் அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வம்பு, வழக்குகள் மறைந்து நிம்மதி ஏற்படும். உங்கள் ராசிக்கு 5-ல் குரு 20-11-2020 முடிய சஞ்சரிப்பதால், திருமண சுபகாரிய முயற்சியில் முனைப் புடன் முயற்சித்தால் சாதகப்பலன் கிடைத்து, குடும்பத்தில் மங்கள நிகழ்வு நடக்கும். கேது 4-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக் கியத்தில் சிறுசிறு பாதிப்புகள், தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு போட்டி, பொறாமை விலகி லாபம் அதிகரிக்கும். உத்தியோ கஸ்தர்கள் உடன்பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்துப் பணிகளையும் சிறப்பாகச் செய்துமுடிக்கமுடியும். ஆன்மிகம், தெய்வீகக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் நிதானித்துச் செயல்படுவது நல்லது. மாணவர்கள் முயன்று படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-1-2021 முதல் 1-6-2021 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 10-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும், எடுக்கும் முயற்சிகளில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். கணவர்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கேது 4-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மந்தம், சோர்வு ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு 6-4-2021 முடிய 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவு தேவைக்கேற்றபடி இருந்தாலும், எதிர்பாராதவகையில் வீண்விரயங்கள் ஏற்படும். திருமண சுபகாரியங்கள் தடைக்குப் பின் கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். செய்யும் தொழில், வியாபாரத்தில் மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். வேலையாட்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து நடந்துகொண்டால் தொழிலில் முன்னேற்றத்தை அடையமுடியும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு குறைவாகவே இருந்தாலும் அடையவேண்டிய மதிப்பெண்களைப் பெறுவார்கள். தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 2-6-2021 முதல் 5-10-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 10-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 4-ல் அனுஷ நட்சத்திரத்திலும், 6-ல் சனி சஞ்சரிப்பதும் உங்களுக்கு நன்மைகளைத் தரும் அமைப்பு என்றாலும், இடையூறுகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலும் அலைச்சல், உடல் அசதி ஏற்படும் என்பதால், உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. பணவரவுகளில் ஏற்ற- இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கணவர்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. ஆண்டுக்கோளான குரு பகவான் அதிசாரமாகவும் வக்ர கதியிலும் 7-ல் சஞ்சரிப்பதால், எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். வேலையாட்கள்மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக்கொள்ளமுடியும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகை கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு மன ஆறுதலைத் தரும். மாணவர்களின் கல்வித்திறன் சிறப்பாகவே இருக்கும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தைத் தவிர்ப்பது நல்லது.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 6-10-2021 முதல் 8-2-2022 வரை

உங்கள் ராசியாதிபதி சூரியன் நட்சத்திரமான கிருத்திகையில் ராகு 10-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் சிக்கல்கள் விலகி நீங்கள் நினைத்ததை நிறைவேற்றமுடியும். பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செவுகளைக் குறைத்துக் கொண்டால் வீண்விரயங்களைத் தவிர்க்கலாம். கணவர்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும், 4-ல் கேது, சனி நட்சத்திரத்தில் இருப்பதால், தேவையற்ற அலைச்சல், வாகனங்கள்மூலம் வீண்செலவுகள் ஏற்படும். 20-11-2021 முதல் குரு உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால், திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்லது நடந்து, குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறைந்து சேமிக்கும் அளவிற்கு தாராள தனவரவு ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் விலகி ஒரு தெளிவான நிலை ஏற்படும். கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் பதவி உயர்வுகளும் சம்பள உயர்வுகளும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல் குறையும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதோடு விளையாட்டுப்போட்டிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றிபெறமுடியும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 9-2-2022 முதல் 12-4-2022 வரை

உங்கள் ராசியாதிபதி சூரியன் நட்சத்திரத்தில் ராகு 10-லும், குரு நட்சத்திரமான விசாகத்தில் கேது 4-லும் சஞ்சரிப்பது மட்டுமின்றி, இக்காலத்தில் உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 7-ல் குரு சஞ்சரிக்க உள்ளதால், சகலவிதத்திலும் நற்பலன்கள் தேடிவரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து, எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை மிகச்சிறப் பாக இருப்பது மட்டுமின்றி எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கணவர்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நன்மைகள் நடக்கும். ù ப ô ன் , ù ப ô ரு ள் வ ô ங் க க் கூ டி ய வ ô ய் ப் பு அ û ம யு ம் . உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலைப்பளு குறையும். சிலருக்கு வாகனங்கள் வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களைப் பெறமுடியும். வெளியூர், வெளிநாட்டுமூலம் அனுகூலமான செய்தி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் தேக்கங்கள் விலகி லாபகரமான பலனை அடைவீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்றுவிடமுடியும்.

எண் : 1, 2, 3, 9.

அதிர்ஷ்டம் அளிப்பவை

நிறம் : வெள்ளை, சிவப்பு.

கிழமை : ஞாயிறு, திங்கள். கல் : மாணிக்கம்.

திசை : கிழக்கு. தெய்வம் : சிவன்.

பரிகாரம்

சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 4-ல் கேது, 10-ல் ராகு சஞ்சரிப்பதால், ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழுநோயாளிகளுக்கு தானம் கொடுப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைக்குட்டை போன்றவற் றைப்பயன்படுத்துவது நல்லது. கேதுவுக்குப் பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, "ஓம் சரம் ச்ரீம் ச் ரௌம் சஹ கேதவ நமஹ' என்ற பீஜமந்திரத்தைக் கூறிவருவது, செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

கூர்மையான அறிவும், எதையும் முன்கூட்டியே செய்யும் திறனும் கொண்ட கன்னி ராசி வாசகர்களே! உங்கள் ராசிக்கு இதுநாள்வரை ராகு 10-லும், கேது 4-லும் சஞ்சாரம் செய்ததால், பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கநேரிட்டது. திருக்கணிப் பஞ்சாங்கப்படி தற்போது ஏற்பட உள்ள ராகு- கேது மாற்றத்திற்குப் பிறகு, 23-9-2020 முதல் 12-4-2022 வரை ராகு ஜென்ம ராசிக்கு 9-ஆம் வீட்டிலும், கேது 3-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப் பான அமைப்பு என்பதால், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிபெறுவீர்கள். நினைத்த காரியங்கள் யாவும் நினைத்தபடி நிறைவேறும். அலைச்சல் எல்லாம் விலகி நிம்மதியான நிலை ஏற்படும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்களால் மேன்மைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட செயல்களில் திறம்பட ஈடுபடுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். மனைவி, பிள்ளைகள் சுபிட்சமாக இருப்பார்கள். கணவர்- மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிலையிருக்கும். உற்றார்- உறவினர்களின் வருகையால் நற்பலன்கள் ஏற்படும். பிரிந்த சொந்தங்களும் தேடிவந்து நட்பு பாராட்டும். சொந்த பூமி, மனை, வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனி பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால், தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பொருட்தேக்கங்கள் குறைந்து லாபகரமான பலனை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் கௌரவமான நிலை ஏற்படும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வேலைப்பளு குறையும். குரு (மகர ராசியில்) 20-11-2020 முதல் 6-4-2021 வரையும், 14-9-2021 முதல் 20-11-2021 வரையும் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்கும் காலத்தில் பணவரவு மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் தேடிவரும். பூர்வீக சொத்து விஷயங்களில் வம்பு, வழக்குகள் முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தி நல்ல லாபத்தினை அடையமுடியும். கொடுத்த வாக்குறுதி களை யும் காப் பாற்றி ù பரி ய மனி தர் களி ன் ஆதரவுகளை ப் பெறுவீர்கள். குரு 20-11-2020 வரை சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதும் அடுத்து, ருண, ரோக ஸ்தானமான 6-ல் (அதிசாரமாக கும்ப ராசியில்) 6-4-2021 முதல் 14-9-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-4-2022 வரை சஞ்சரிக்க உள்ள காலத்தில், உங்களுக்கு பொருளாதாரநிலை ஏற்ற- இறக்கமாக இருக்கும் என்றாலும், சனி, கேதுவின் சாதகமான சஞ்சாரத்தால் எதையும் சமாளித்து முன்னேற்றமான நிலையினை அடைவீர்கள்.

உடல் ஆரோக்கியம்

உடல்நிலை மிகச்சிறப்பாக இருக்கும். சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். மருத்துவச் செலவுகள் குறை யும். குடும்பத்தில் உள்ளவர்களும் உடல்நலத்துடன் சுபிட்சமாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உடல்நிலையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அனுகூலப்பன் கிடைக்கும்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். கணவர்- மனைவி ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். பிள்ளைகள்வழியில் சிறுசிறு மனக்கவலை ஏற்படலாம் என்பதால் அவர்களிடம் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவு தாராளமாக இருப்பதால் பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்தியோகம்

தடைகள் விலகி பதவி உயர்வுகள் கிடைத்து நிம்மதி ஏற்படும். இருக்கும் இடத்தில் கௌரவமும் பெயர் புகழும் உயரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். அலைச்சல் குறைந்து எதிலும் நிம்மதியாக இருக்கமுடியும். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் அமோகமாக நடைபெறும். போட்டிகள் குறையும். நல்ல வாய்ப்புகள் தேடிவரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். நவீன கருவிகளை வாங்க அரசுவழியில் உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் உங்களது வேலைப்பளு குறையும். வங்கிக் கடன்கள் குறையும்.

கொடுக்கல்- வாங்கல்

பணவரவு சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் வீடு தேடிவரும். பணவிஷயமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன் கிடைக்கும். பொருளாதார உயர்வுகளால் குடும்பத் தேவைகள் மட்டுமின்றி பிற தேவைகளும் பூர்த்தியாகும். வம்பு, வழக்குகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு உண்டாகும்.

அரசியல்

பெயர், புகழ் யாவும் தேடிவரும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மனமகிழ்ச்சி ஏற்படும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பெயர், புகழ் உயர்வடையும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்யநேர்ந்தாலும் வரவேண்டிய வரவுகள் வந்துசேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். கௌரவம்மிக்க பதவிகள் தேடிவரும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைக்கப்பெறுவதால் லாபம் பெருகும். பண வரவு சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். நவீன முறைகளைக் கையாண்டு பயிர் விளைச்சலைப் பெருக்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். அரசுவழியில் மானிய உதவிகள் கிட்டும்.

கலைஞர்கள்

திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நிலுவையிலிருக்கும் பணத்தொகையும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். புதிய கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். படப்பிடிப்பிற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பணவரவு தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அ சையா சொத்துகளால் லாபம் கிட்டும். பூர்வீக சொத்துரீதியாக சிறிது மனக்கவலை ஏற்படும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் முன்னேற்றமான நிலையி ருக்கும். தேவையற்ற நட்புகளையும் பொழுதுபோக்குகளையும் தவிர்ப்பது நல்லது. விளையாட்டுப்போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுகளையும் தட்டிச்செல்வீர்கள். அரசு உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும்.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-9-2020 முதல் 26-1-2021 வரை

உங்கள் ராசிக்கு 9-ல் ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், 3-ல் கேது கேட்டை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன் குறைந்து உங்கள் முயற்சியில் பரிபூரண வெற்றிகளை அடைவீர்கள். ஜென்ம ராசிக்கு 5-ல் சனி சஞ்சரிப்பதும், 20-11-2020 முதல் குரு 5-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால், பணவரவுகள் சிறப் பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்கவும் முடியும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் நல்ல செய்தி கிடைக்கும். குடும்ப சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவர்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பயணங்களால் அனுகூலங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்றுவிடமுடியும். கூட்டாளிகளுக்கிடையே இருக்கும் பிரச்சினைகள் விலகும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படமுடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்றுவிடமுடியும்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-1-2021 முதல் 1-6-2021 வரை

உங்கள் ராசிக்கு 9-ல் ராகு ரோகிணி நட்சத்திரத்திலும், 3-ல் கேது கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், சனி பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதாலும் பணவரவுக்குப் பஞ்சம் இருக்காது. எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆரோக்கியம் நன்றாக இருந்து அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்படமுடியும். உற்றார்- உறவினர்கள்மூலம் அனுகூலங்கள் ஏற்படும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். நல்ல வரனும் தேடிவரும். கணவர்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். புத்திரவழியில் சுபச்செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடையவேண்டிய லாபத்தை அடைந்துவிடுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடப்பதன்மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும் என்றாலும், திறமைக்கேற்ற பாராட்டு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் குடும்பத்துடன் இணைவார்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி, கல்லூரிக்குப் பெருமை சேர்ப்பார்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 2-6-2021 முதல் 5-10-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 9-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 3-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்றாலும், 5-ல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால், உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை தோன்றும் என்றாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படமுடியும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிபெறக்கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந் திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன் தேடும் விஷயங்களை தள்ளிவைப்பது உத்தமம். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கவேண்டும் என்ற எண்ணம் நிறைவேறுவதில் தாமதமாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும் என்றாலும், கூட்டாளிகளிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் தடைப்பட்டுக்கொண்டிருந்த உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தையும், பொழுதுபோக்குகளையும் தவிர்த்துவிடுவது உத்தமம்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 6-10-2021 முதல் 8-2-2022 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 9-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 3-ல் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், சனி 5-ல் ஆட்சிபெற்று சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால், நீங்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் எதிர்நீச்சல்போட்டு வெற்றிபெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுக்கவேண்டியிருக்கும். கணவர்- மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். நெருங்கியவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. உற்றார்- உறவினர் களை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங் களுக்கான முயற்சிகளில் இடையூறு ஏற்படும். 5-ல் சஞ்சரிக்கும் குரு 20-11-2021 முதல் 6-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்றாலும், எதிர்பாராத உதவிகள்மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும், அசையா சொத்துகளால் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால், கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை அதிகமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை அடையமுடியும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 9-2-2022 முதல் 12-4-2022 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 9-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 3-ல் விசாக நட்சத்திரத்திலும், சனி 5-ல் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால், பணவரவு சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள்மூலம் எதையும் சமாளிக்கும் சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது ,உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எது எப்படி இருந்தாலும் அன்றாடப் பணிகளை சிறப்பாகச் செய்துமுடிப்பீர்கள். வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும், குரு 6-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. கணவர்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நற்பலனைத் தரும். பூர்வீக சொத்துகளால் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர் பார்த்த லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் பிரச்சினை களைத் தவிர்க்கமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் ஆதரவைப் பெறுவார்கள்.

எண் : 4, 5, 6, 7, 8.

அதிர்ஷ்டம் அளிப்பவை

நிறம் : பச்சை, நீலம்.

கிழமை : புதன், சனி.

கல் : மரகதப் பச்சை.

திசை : வடக்கு. தெய்வம் : விஷ்ணு.

பரிகாரம்

குரு பகவான் சில நாட்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் வியாழக் கிழமைகளில் விரதமிருந்து, குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் பமேற்றி வழிபடவும். 5 முக ருத்ராட்சம் அணியவும். அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்ற வற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்யவும்.

துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

முன்கோபம் அதிகம் இருந்தாலும் வாக்கு சாதுரியத்தால் பிறரைக் கவர்ந்திழுக்கும் ஆற்றல்கொண்ட துலா ராசி வாசகர்களே!

இதுநாள்வரை 3, 9-ல் சஞ்சரித்த கேது, ராகு தற்போது திருக்கணிப் பஞ்சாங்கப்படி ஏற்படும் மாறுதலுக்குப் பிறகு, 23-9-2020 முதல் 12-4-2022 வரை ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 8-ஆம் வீட்டிலும், கேது 2-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க உள்ளனர். நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய காலமாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் சிறுசிறு பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். கணவர்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால், விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உற்றார்- உறவின ர்களிடையே தேவையற்ற பேச்சுகளைத் தவிர்ப்பது, சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாதிருப்பது உத்தமம். உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சனி சஞ்சரிப்பதால், உங்களுக்கு அர்த்தாஷ்டமச்சனி நடைபெறுகிறது. இதனால், பொருளாதாரரீதியாக தேக்கநிலை, தேவையற்ற அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபமே கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களைக் குறைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பது நல்லது. வேலை அதிகமாக இருக்கும். தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு குரு 4-ஆம் வீட்டில் 20-11-2020 முதல் 6-4-2021 வரையும், 14-9-2021 முதல் 20-11-2021 வரையும் சஞ்சரிக்க இருக்கும் இக்காலங்களில் சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. குரு 6-4-2021 முதல் 14-9-2021 வரை (அதிசாரமாக கும்ப ராசியில்) மற்றும் 20-11-2021 முதல் 13-4-2022 வரை உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்கவிருக்கும் காலத்தில், பண வரவில் தேக்க நிலை விலகி அனுகூலங்கள் ஏற்படும். எதிர்பாராதவகையில் உதவிகள் கிடைத்துக் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்களில் தடைகள் விலகி நல்லது நடக்கும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். மணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் அமையும். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பிரச்சினைகள் குறைந்து லாபம் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நல்லது நடக்கும். கடன்களும் ஓரளவுக்குக் குறையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றங்களை அடையமுடியும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் விலகி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்று கூறமுடியாது. தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். மனைவி, பிள்ளைகளுக்கு ஆரோக்கிய பாதிப்புகளால் செலவுகள் ஏற்படும். என்றாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்படுவார்கள். நீண்டநாட்களாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப் பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பது, பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை

கணவர்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும், அசையா சொத்துகள்வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் கிடைக்கும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன்மூலம் அனுகூலப்பலன்களை அடையமுடியும்.

உத்தியோகம்

பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற் றங்கள் அலைச்சலை உண்டாக்கும். உயரதிகாரிகளிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை, தாமதங்களுக்குப் பின் கிட்டும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதைத் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்வது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும் என்பதால், மற்றவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. பல பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடிவந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவன முடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சலும் அதன்மூலம் வீண்செலவுகளும் ஏற்படும் என்பதால், முடிந்தவரை தூரப் பயணங்களைத் தவிர்த்துவிடுவது உத்தமம்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தும்போது சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தடைகள் உண்டாகும். வம்பு, வழக்குகளால் இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். அசையா சொத்துகளைப் பராமரிப்பதற்காக வீண் செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப்பதால் நிம்மதி ஏற்படும். அரசியல் மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும், அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவாகும். பணவரவு சுமாராக இருக்கும். எடுக்கும் முயற் சிகளில் எதிர்நீச்சல்போட்டே முன்னேறவேண்டியிருக்கும். பயணங் களால் அலைச்சல், வீண்செலவுகள் ஏற்படும் என்பதால், எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பொது இடங்களில் பேசும்போது பேச்சில் கவனமாக இருப்பதன்மூலம் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.

விவசாயிகள்

விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விளைபொருளுக்கு சுமாரான விலையே கிடைக்கும். முதலீட்டினை எடுக்கவே அரும்பாடு படவேண்டி இருக்கும். தக்கநேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக் கமாட்டார்கள். எதிலும் நீங்கள் முன்னின்றுசெயல்பட வேண்டி இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். முதலீடு விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பங்காளிகளை அனுசரித்துச்செல்வதன்மூலம் எதையும் எதிர்கொள்ள முடியும்.

கலைஞர்கள்

பயணங்களால் அலைச்சலும் உடல் சோர்வும் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சுமாராக அமையும். நினைத்த காரியங்களை நிறை வேற்ற எதிர்நீச்சல் போடவேண்டி இருக்கும். பணவரவு சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத வீண்விரயங்கள் ஏற்படும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. போட்டிகள் அதிகம் இருப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்திக்கொள்வது நல்லது.

பெண்கள்

கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது, கணவர்வழி உறவினர்களிடம் பேச்சில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் தேடிவரும். பணவரவைவிட செலவுகள் அதிகம் இருக்கும் என்பதால், ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.

மாணவ- மாணவியர்

கல்வியில் கவனமாக செயல்பட்டால்தான் முன்னேற்றத்தை அடையமுடியும். திறமைக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள் என்றாலும், படிப்பிற்கு அதிக அக்கறை எடுக்கவேண்டி இருக்கும். விளையாட்டுப்போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் மனது அலைபாயக்கூடிய சூழ்நிலை உண்டாகும் என்பதால், எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-9-2020 முதல் 26-1-2021 வரை

உங்கள் ராசிக்கு ராகு 8-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 2-ல் கேட்டை நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 4-ல் சனி சஞ்சாரம்செய்வதும் சாதமற்ற அமைப்பு என்பதால், கணவன்- மனைவியிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதிக் குறைவு உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எடுக்கும் முயற்சியில் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சிறுதடைக்குப் பின் அனுகூலப்பலனை அடையமுடியும். அசையும், அசையா சொத்துகள்வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தும்போது கவனத் துடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் மந்த நிலையை சந்திக்கநேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப் பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். புதிய வேலை தேடுபவர் களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என்றாலும் வேலை அதிகமாக இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலைக் குறைத்துக்கொள்ள முடியும். மாணவர்கள் வீண்பொழுதுபோக்குகளைத் தவிர்த்து கல்வியில் கவனமுடன் செயல்படுவது உத்தமம்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-1-2021 முதல் 1-6-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 8-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 2-ல் கேட்டை நட்சத்திரத்திலும், ஜென்ம ராசியில் 4-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல்போட வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கணவர்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார்- உறவினர்கள் சிறுசிறு பிரச்சினை களை ஏற்படுத்துவார்கள் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. 6-4-2021 முதல் குரு அதிசாரமாக 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வதன்மூலம் கடன் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலப்பலன் அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில், வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிபெறமுடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிப்பதால் சுக வாழ்வு பாதிப்படையும். நேரத்திற்கு உணவுண்ண முடியாத சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டு மனதிற்கு நிம்மதி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது, விடுப்பு எடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 2-6-2021 முதல் 5-10-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 8-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 2-ல் அனுஷ நட்சத்திரத்திலும், 4-ல் சனி வக்ர கதியிலும் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர்நீச்சல் போட்டாவது எதையும் சமாளித்துவிடுவீர்கள். கணவர்- மனைவி ஒற்றுமை நிலவும். முடிந்தவரை உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குரு அதிசாரமாக 14-9-2021 முடிய 5-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். உங்களுக்கு வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று எந் தப் பி ரச்சினையையும் சமாளித்துவிடமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமை ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவதன்மூலம் அலைச்சலைக் குறைத்துக்கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிவர்களின் ஆதரவால் எடுக்கும் பணிகளை சிறப்பாகச் செய்துமுடிக்க முடியும். ஆன்மிகம், தெய்வீகக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளைக் குறைத்துக்கொண்டு கல்வியில் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெறமுடியும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 6-10-2021 முதல் 8-2-2022 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 8-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 2-ல் அனுஷ நட்சத்திரத்திலும், சனி 4-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் நிம்மதிக்குறைவு, இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும். என்றாலும், உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் குரு 20-11-2021 முதல் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்க இருப்பதால், பொருளாதாரரீதியான நெருக்கடிகள் விலகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் நல்லது நடந்து மகிழ்ச்சி ஏற்படும். புத்திரவழியில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பெண்கள் சிக்கனமாக செயல்படுவதன்மூலம் கடன் பிரச்சினைகள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தாதிருப்பதன்மூலம் பிரச்சினை களைத் தவிர்க்கலாம். தொழில்- வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற மான நிலை உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாகச் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவால் எதையும் சாதிக்கமுடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது உத்தமம்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 9-2-2022 முதல் 12-4-2022 வரை

உங்கள் ராசிக்கு 4-ல் சனி சஞ்சரித்து அர்த்தாதஷ்டமச்சனி நடப்பதும், ஜென்ம ராசிக்கு ராகு 8-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 2-ல் விசாக நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பாகும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும் என்பதால் பயணங்களைத் தவிர்ப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் மருத்துவ செலவுகளைத் தவிர்க்கலாம். கணவர்- மனைவி கருத்துவேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். தனகாரகன் குரு 5-ல் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுண்டாகும். பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். எடுக்கும் முயற்சிகள் அனை த்திலும் வெற்றிபெறுவதோடு, எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். திருமண சுப காரியங்களில் தடைகள்விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச்சென்ற ôல் நற்பலனை அடையலாம். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைப்பளு இருக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெறமுடியும்.

எண் : 5, 6, 7, 8.

அதிர்ஷ்டம் அளிப்பவை

நிறம் : வெள்ளை, பச்சை.

கிழமை : வெள்ளி, புதன்.

திசை : தென்கிழக்கு. கல் : வைரம். தெய்வம் : லட்சுமி.

பரிகாரம்

துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால், சர்ப்ப சாந்தி செய்வது, ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழுநோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைக்குட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது. கேதுவுக்குப் பரிகாரமாகத் தினமும் விநாயகரை வழிபடுவது, "ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ' என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது, செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது. சனி 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டமச்சனி நடைபெறுவதால், அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீலநிற சங்குப் பூக்கள் மற்றும் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வது, நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், அடுப்பு போன்றவற்றையும், குடை, செருப்பு, நீல மலர்கள் ஆகியவற்றையும் ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது.

விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

அதிக புத்திக்கூர்மையும், சமூகப் பற்றும் கொண்ட விருச்சிக ராசி வாசகர்களே! உங்கள் ராசிக்கு இதுநாள்வரை 8, 2-ல் சஞ்சரித்த ராகு, கேது, தற்போது திருக்கணிப்படி ஏற்படும் பெயர்ச்சிக்குப் பிறகு, 23-9-2020 முதல் 12-4-2022 வரை கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால், கணவன்& மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். விட்டுக்கொடுத்து நடப்பது சிறப்பு. அதிலும் குறிப்பாக, புதுமண தம்பதிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. திடீரெண்டு உணர்ச்சிவசப்படும் நிலை ஏற்படும் என்பதால், உங்கள் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு, குடும்பத்தில் பெரியவர்களிடம் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது, வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அவர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அலர்ஜி பிரச்சினை, மனைவிக்கு உடல் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால், எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலையை சர்ப்ப கிரகங்கள் ஏற்படுத்தினாலும், ஒரு ராசியில் நீண்டநாட்கள் சஞ்சரிக்கும் கிரகமான சனி உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதால், பணவரவு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு, தொழிலை அபிவிருத்தி செய்யும் யோகம் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எளிதில் அடையவேண்டிய இலக்கை அடைந்துவிடுவீர்கள். கூட்டாளிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம் என்பதால், அவர்களைக் கலந்து ஆலோசித்து எந்த முடிவுகளையும் எடுப்பது மிகவும் சிறப்பு. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை மேன்மைபடுத்திக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் தகுதிக்கு ஏற்ற உயர்வுகளைப் பெறுவார்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உயரதிகாரிகளிடம் பேச்சில் நிதானத் தைக் கடைப்பிடிப்பது, உடன்பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அலைச் சல்கள் அதிகரித்தாலும் அதன்மூலம் அனுகூலங்கள் உண்டாகும். இக்காலங்களில் குரு சஞ்சாரம் எப்படி இருக்கிறது எனப் பார்த்தால், குரு 20-11-2020 முடிய உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சாரம் செய்வது மட்டும்தான் சாதகமான அமைப்பு. அதன்பின்பு குரு 3 மற்றும் 4-ல் சஞ்சராம் செய்வதால், பணவரவு உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை பிறருக்கு கடனாகக் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமின் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம் என்பதால், கடினமாக முயற்சித்தால்தான் ஒரு சிறுசெயலையும் செய்துமுடிக்கமுடியும். பிள்ளைகள்மூலம் சுபச் செலவுகள், மனக்கவலை உண்டாகும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்

உடல்நிலை சாதகமாக இருக்கும். சோர்வுகள் விலகி நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். என்றாலும், முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. மனைவி, பிள்ளைகளுக்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்புகள் ஏற்படும் என்பதால், அவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பயணங்களில் கவனம் தேவை. தேவையற்ற குழப்பங்களால் மன நிம்மதி குறையும்.

குடும்பம், பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது சிறப்பு. பணவரவு சிறப்பாக இருப்பதால் குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டால் அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகம்

வேலை அதிகமாக இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு உங்களது நெருக்கடிகளை க்குறைக்கும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுந்த வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு மனைவி, பிள்ளைகளைவிட்டு வெளியிடங்களில் தங்கநேரிடும். உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானம் தேவை.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக அதிக நேரம் உழைக்கவேண்டி இருக்கும். நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். நிறைய போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி ஏற்றம் அடை வீர்கள் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். அரசு உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதாரநிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். பணவிஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமின் கொடுப்பது போன்றவற்றில் கவனமாக செயல்படுவது நல்லது. வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

அரசியல்

பணவரவு சிறப்பாக இருக்கும். உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும் காலமாக இருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய வீண்செலவுகளைச் செய்யவேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்வீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது, மேடைப் பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது உடன்பழகுபவர்களிடமும் எச்சரிக்கையுடன் இருப்பது, பத்திரிகையாளர்களைப் பகைத்துக் கொள்ளாதிருப்பது உத்தமம்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். பட்டபாட்டிற்கான பலனைப் பெறுவீர்கள். அரசு மானிய உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். சந்தையில் விளைபொருளுக்கு ஏற்ற விலை கிடைக்கும். பொருளாதாரரீதியான மேன்மைகள் ஏற்படும். என்றாலும், நெருங்கியவர்களை அனுசரித்துச்சென்றால் எதையும் சமாளித்து விடமுடியும்.

கலைஞர்கள்

தகுந்த கதாபாத்திரங்கள் கிடைத்து சமுதாயத்தில் நல்ல நிலையை அடைவீர்கள். போட்டி, பொறாமை அதிகமாக இருந்தாலும் எதையும் சமாளிக்கும் பலம் உங்களிடம் இருக்கும். பணவரவு சிறப்பாக அமையும். வரவேண்டிய பணத்தொகை கிடைத்து கடன் குறையும். அதிக அலைச்சலால் சுகபோக வாழ்க்கையில் சிறிது பாதிப்புண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

பெண்கள்

உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன்களைக் குறைக்கமுடியும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் காலம் என்பதால், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், கைகால் மூட்டுகளில் வலி போன்றவை தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மாணவ- மாணவியர்

கல்வியில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண் பெற்று நல்ல பெயர் எடுப்பீர்கள். உடல்நிலை மந்தமாக இருக்கும் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லும் என்பதால் கவனம் தேவை. பெரிய மனிதர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-9-2020 முதல் 26-1-2021 வரை

ஜென்ம ராசியில் கேது கேட்டை நட்சத்திரத்திலும், ராகு 7-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால், நீங்கள் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது, கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது சிறப்பு. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி வலுவாக சஞ்சரிப்பது சகலவிதத்திலும் வெற்றிகளைக் குவிக்கும் சிறப்பான அமைப்பாகும். பணவரவுகளில் தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் நல்ல அனுகூலமான பலன்களை அடையமுடியும். தொழில் வளர்ச்சிக்கான நவீன பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சி அடையும் நிலை உண்டாகும். வாகனங்களில் செல்கிறபோது நிதானத்துடன் இருப்பது நல்லது. முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் அலைச்சலைக் குறைத்துக்கொள்ளலாம்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-1-2021 முதல் 1-6-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 7-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், ஜென்ம ராசியில் கேது கேட்டை நட்சத்திரத்திலும், குரு 3-ல் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். சில நெருக்கடிகள் இருந்தாலும் சனி 3-ல் சஞ்சாரம் செய்வதால் தாராள தனவரவு உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சகோதர சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது உத்தமம். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து லாபம் அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும் என்றாலும், வேலை அதிகரிக்கும். பணியில் மேலதிகாரிகளை அனுசரித்துச்செல்வதன்மூலம் நிம்மதியுடன் செயல்படமுடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதிகளைக் கொடுக்காமல் இருப்பதும், பெரிய தொகை ஈடுபடுத்தாமலிருப்பதும் நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 2-6-2021 முதல் 5-10-2021 வரை

ஜென்ம ராசியில் கேது அனுஷ நட்சத்திரத்திலும், ராகு 7-ல் ரோகிணி நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால், குடும்பத்தில் வீண்பிரச்சினைகள், வாக்குவாதங்கள் உண்டாகும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமான பலனைப் பெறமுடியும். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். அசையும், அசையா சொத்துகள்வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். சனி 3-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும், இக்காலத்தில் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடையமுடியும். தொழிலாளர்களை அனுசரித்துச்செல்வதன்மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். கடன் சற்றே குறையும். தேவையில்லாத அலைச்சல் இருக்கும். தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் ஆதரவைப்பெற கடினமாக உழைக்கவேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 6-10-2021 முதல் 8-2-2022 வரை

ஜென்ம ராசியில் கேது அனுஷ நட்சத்திரத்திலும், ராகு 7-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், சனி உங்கள் ராசிக்கு 3-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கக்கூடிய இனிய சூழ்நிலை ஏற்படும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. மற்றவர்களிடம் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுபகாரியங்கள் கைகூட இடையூறு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு இருந்தாலும் உங்களது அன்றாட செயல்களில் சிறப்பாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மை ஏற்படும். கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால், எதிலும் அவர்களைக் கலந்தாலோசித்து செயல்படுவது நல்லது. வெளியூர்ப் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று கல்வியில் உயர்வடைவார்கள்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 9-2-2022 முதல் 12-4-2022 வரை

ஜென்ம ராசியில் கேது விசாக நட்சத்திரத்திலும், ராகு 7-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால், கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக்குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால், சிறுசிறு பாதிப்புகளை எதிர்கொள்ளமுடியும். உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால், வளமான வாழ்வை அடையமுடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். புதிய இடம், பொருள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமை குறையும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்துப் பணிகளையும் சிறப்பாகச் செய்துமுடிக்க முடியும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். ஆன்மிகம், தெய்வீகக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவதோடு, பள்ளி, கல்லூரிக்கும் பெருமை சேர்ப்பார்கள்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 1, 2, 3, 9.

நிறம் : ஆழ்சிவப்பு, மஞ்சள்.

கிழமை : செவ்வாய், வியாழன்.

திசை : தெற்கு.

கல் : பவளம்.

தெய்வம் : முருகன்.

பரிகாரம்

விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-லும் சஞ்சாரம் செய்வதால், விநாயகரை வழிபடுவது, செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது. ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழுநோயாளிகளுக்கு தானம் கொடுப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைக்குட்டை போன்ற வற்றைப் பயன்படுத்துவது நல்லது. குரு பகவான் உங்கள் ராசிக்கு 20-11-2020 முதல் சாதகமின்றி சஞ்சரிப்பதால், வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு, தட்சிணாமூர்த்திக்குக் கொண்டைக்கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் பமேற்றி வழிபடவும்.

 

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

சுயநலமின்றி, பிரதிபலன் எதிர்பாராமல் பிறருக்கு உதவி செய்யக்கூடிய ஆற்றல் கொண்ட தனுசு ராசி வாசகர்களே! சர்ப்ப கிரகங்களான கேது- ராகு உங்கள் ராசிக்கு 1, 7-ல் சஞ்சரிப்பதால் பல இன்னல்களை சந்தித்துவரும் உங்களுக்கு, திருக்கணிதப் பஞ்சாங்கப்படி தற்போது ஏற்படவுள்ள ராகு- கேது மாற்றத்திற்குப் பிறகு, 23-9-2020 முதல் 12-4-2022 வரை ராகு ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டிற்கும் கேது 12-ஆம் வீட்டிற்கும் செல்கின்றனர். இதனால், உங்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றங்கள் உறுதியாக ஏற்படும். குடும்பத்தில் பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருப்பவர்களுக்கு குடும்பத்துடன் இணையும் நிலை உண்டாகும். உற்றார்- உறவினர்களிடம் இருக்கும் மனக் கசப்புகள் விலகி சுமுக நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சனி 2-ல் சஞ்சரிப்பதால் ஏழரைச்சனியில் பாதச்சனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு. பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. நெருங்கியவர்களிடம் பேசும்போது நிதானமாக இருப்பது, உங்கள் குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது. பணவரவு சிறப்பாக அமைந்து குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். என்றாலும், ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கப்பெற்று சுபகாரியங்கள் கைகூடும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம், கார், பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தும்போது கவனத்துடன் இருந்தால் சாதகப்பலனை அடையமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் படிப்படியான வளர்ச்சியை அடையமுடியும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்க்கும் உயர்வினை அடையலாம். தற்போது உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் ராசியாதிபதி குரு பகவான் 20-11-2020 முதல் 6-4-2021 வரையும், அடுத்து 14-9-2021 முதல் 20-11-2021 வரையும் உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்க உள்ளதால், பொருளாதாரரீதியான மேன்மைகளை அடையும் வாய்ப்பு, கடன் படிப்படியாகக் குறையும் நிலை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு அமையும். குரு (அதிசாரமாக கும்ப ராசியில்) 6-4-2021 முதல் 14-9-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-4-2022 வரை உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்க உள்ளதால், இக்காலத்தில் பொருளாதாரரீதியாக தேக்கங்கள் ஏற்படும் என்பதால், பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் மிகச்சிறப்பாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய ஆற்றல் உண்டாகும். அலைச்சல், டென்ஷன் குறையும். குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்து வரும் மருத்துவச் செலவுகள் மறையும். நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும். அனைவரும் சுபிட்சமாக இருப்பதால் மனநிம்மதி உண்டாகும்.

குடும்பம், பொருளாதார நிலை

பணவரவு மிகச்சிறப்பாக இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் தேடிவரும். சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பேச்சில் நிதானத்துடன் இருப்பது, உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கக்கூடிய யோகம் அமையும். புத்திரவழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்தியோகம்

பணியில் திறமைக்கு ஏற்ற பாராட்டு கிடைக்கக் பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதிலும் திறம்பட செயல்படமுடியும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலையிருப்பதால் லாபம் பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளையும் வேலையாட்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள்மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில்ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகை ஈடுபடுத்தி நல்ல லாபம் பெறுவீர்கள். என்றாலும், கவனத்துடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன் யாவும் தடையின்றி வசூலாகும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். கடன் பிரச்சினை கள் குறையும்.

அரசியல்

பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவு பெருகுவதால், அவர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவு பெருகும். என்றாலும், கவனத்துடன் பேசுவது நல்லது. கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங் களையும் மேற்கொள்வீர்கள். பத்திரிகையாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச்சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலையும் கிட்டும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளைக் கையாண்டு பயிர் விளைச்சலைப் பெருக்குவீர்கள். அரசு உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். கடன்களும் படிப்படியாகக் குறையும். உற்றார்- உறவினர்களிடம் கவனத்துடன் இருப்பது நல்லது.

கலைஞர்கள்

மக்களின் ஆதரவும், ரசிகர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொண்டால் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடையமுடியும். வரவேண்டிய பணத்தொகையில் இழுபறிநிலை இருந்தாலும் வரவேண்டிய நேரத்தில் கைக்கு கிடைக்கும். படப்பிடிப்பிற்காகச் செல்லும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கார், பங்களா போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடிவரும். சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. பொன், பொருள் சேரும். தாய்வழி சொத்துகளால் அனுகூலப்பலன்களைப் பெறமுடியும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வீர்கள். நல்ல நட்புகளால் அனுகூலப்பலன் உண்டாகும். விளையாட்டுப்போட்டிகளில் பரிசுகளைப் பெறுவார்கள். மந்த நிலை, தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை போன்ற யாவும் விலகும்.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-9-2020 முதல் 26-1-2021 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 6-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 12-ல் கேட்டை நட்சத்திரத்திலும், 20-11-2020 முதல் ராசியாதிபதி குரு 2-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்புதமான அமைப்பு. பணவரவு சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் செயல்படுவதும், மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளை சுறுசுறுப்பாகச் செய்யமுடியும். கணவன்& மனைவி கருத்து வேறுபாடுகள் மறந்து அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். திருமண சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் லாபம் சிறப்பாக அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற வேலை கிட்டும். வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கமுடியும்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-1-2021 முதல் 1-6-2021 வரை

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு ரோகிணி நட்சத்திரத்திலும், 12-ல் கேது கேட்டை நட்சத்திரத்திலும், ராசியாதிபதி குரு 2-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு. பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவு சிறப்பாக இருந்து நெருக்கடிகள் எல்லாம் குறையும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடிவரும். பொன், பொருள் சேரும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். உங்கள் ராசிக்கு சனி 2-ல் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதற்குமுன் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைப்பதால் லாபம் பெருகும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பணியில் நிம்மதியிருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப் பெண்கள் கிடைக்கும்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 2-6-2021 முதல் 5-10-2021 வரை

ஜென்ம ராசிக்கு 6-ல் ராகு ரோகிணி நட்சத்திரத்திலும், 12-ல் கேது அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால், எதிலும் எதிர்நீச்சல் போட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் சனி சஞ்சரிப்பதால்- உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொழில் , வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால், கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாதிருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் தாமதமாகக் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதைக்ப் பயன்படுத்திக்கொள்வது உத்தமம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 6-10-2021 முதல் 8-2-2022 வரை

உங்கள் ராசிக்கு ராகு 6-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 12-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால், எடுக்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு அனுகூலங்களை அடையமுடியும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி சஞ்சரிப்பதால், நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படவேண்டிய காலமாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுக்கவேண்டியிருக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். உற்றார்- உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால், அனைவரிடமும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் ஏற்படும். உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் குரு 20-11-2021 முதல் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால், பண வரவில் நெருக்கடிகள் நிலவினாலும், எதிர்பாராத உதவிகள்மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எதிலும் சிக்கன மாக செயல்படுவது நல்லது. பூர்வீக சொத்துகளால் பிரச்சினைகளை சந்திக்கநேரிடும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது நல்லது. வேலையாட்கள் ஆதரவாக செயல்படுவதால் தொழில், வியாபாரத்தில் அடையவேண்டிய இலக்கை அடைந்துவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை அதிகமாக இருக்கும் என்றாலும், நல்ல வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற அதிக பாடுபட வேண்டியிருக்கும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 9-2-2022 முதல் 12-4-2022 வரை

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சூரியன் நட்சத்திரத்திலும், 12-ல் கேது குரு நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால், எதிர்பார்த்த பணவரவுகள் தக்கசமயத்தில் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 3-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. திடீர் செலவுகளை எதிர்கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களிடம் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால், பேச்சைக் குறைப்பதும், மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதமானாலும், குரு 7-ஆம் வீட்டைப் பார்ப்பதால் அனுகூலமான பலன்கள் கிட்டும். தொழில்ரீதியாக நெருக்கடிகள் நிலவினாலும், எதையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து, தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன்மூலம் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவதன்மூலம் திறம்பட செயல்படமுடியும்.

எண் : 1, 2, 3, 9.

அதிர்ஷ்டம் அளிப்பவை

நிறம் : மஞ்சள், பச்சை.

கிழமை : வியாழன், திங்கள். கல் : புஷ்பராகம்.

திசை : வடகிழக்கு.

தெய்வம் : தட்சிணாமூர்த்தி.

பரிகாரம்

தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 12-ல் சஞ்சரிப்பதால், தினமும் விநாயகரை வழிபடுவது, "ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ' என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது, செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை, போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது, சர்ப்ப சாந்தி செய்வது, விநாயகரை வழிபடுவது நல்லது. ஏழரைச்சனியில் பாதச்சனி நடைபெறுவதால் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் பமேற்றுவது நல்லது. திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் வேங்கடாசலபதியை வழிபடுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீலநிற சங்குப் பூக்கள் மற்றும் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, கருப்பு நிற ஆடை அணிவது நல்லது.

மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ந ண் பர் களி டமும் விú ராதி களி டமும் சகஜ மாகப் பழகக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி உங்கள் ராசிக்கு இதுநாள்வரை 6, 12-ல் சஞ்சரித்த ராகு- கேது தற்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஏற்படவுள்ள இடபெயர்ச்சிக்குப் பிறகு, 23-9-2020 முதல் 12-4-2022 வரை ராகு ஜென்ம ராசிக்கு 5-ஆம் வீட்டிலும், கேது லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதால், நீங்கள் வாழ்வில் எதிர்நீச்சல் போடவேண்டி இருக்கும். கேது 11-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால், எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப்பெறுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்துவிடமுடியும். பணவரவு ஏற்ற- இறக்கமாகவே இருக்கும். செலவுகளைக் குறைத்துக்கொண்டால் மட்டுமே வீண்விரயங்களைத் தவிர்க்கமுடியும். ராகு 5-ல் இருப்பதால் வயிறு பாதிப்பு, உற்றார்- உறவினர்கள் பகை, பூர்வீக சொத்துரீதியான பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் பிள்ளைகளால் நிம்மதிக்குறைவு ஏற்படலாம். உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சனியின் ராசியில் பிறந்த உங்களுக்கு, சனி திருக்கணிப்படி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால், ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெறுவதால், நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. எதிலும் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே இருப்பதைத் தக்கவைத்துக்கொள்ளமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலைப்பளு இருக்கும். உழைப்பிற்கான பலனை அடைய இடையூறு ஏற்படும். குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும் என்பதால், கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உண்டாகும். வம்பு, வழக்குகளில் இழுபறிநிலையே நீடிக்கும். பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். உங்களுக்கு கடன் அதிகரிக்கலாம் என்பதால், பொதுவாக உங்கள் பெயரில் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. அப்படி வாங்கவேண்டும் என்ற கட்டாய சூழ்நிலை ஏற்பட்டால் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்குவது நல்லது. இக்காலத்தில் தனகாரகன் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ல் அதிசாரமாக (கும்ப ராசியில்) 6-4-2021 முதல் 14-9-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-4-2022 வரை சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு. பணவரவில் முன்னேற்றம் ஏற்படும். கடன் யாவும் படிப்படியாகக் குறை யும். குடும்பத்தில் தடைபட்டுக்கொண்டிருக்கும் சுபகாரியங்கள் யாவும் தடைவிலகி கைகூடும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடிவரும். கொடுக்கல்- வாங்கலில் நெருக்கடிகள் குறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவால், தொழிலில் பிரச்சினைகள் குறைந்து லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள், ஊதிய உயர்வுகள் கிடைக்கும். எதிலும் திறம்பட செயல்படக்கூடிய ஆற்றல் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும், அன்றாடப் பணிகளைத் திறம்படச் செய்துமுடிக்கமுடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகள் ஏற்படும். புத்திரவழியில் கவலைதரும் சம்பவங்கள் நடைபெறும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும் என்பதால், எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது, மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவினாலும், விர முயற்சிக்குப் பின்பு நல்லது நடக்கும். உற்றார்- உறவினர்களிடம் பேசும்போது கவனத்துடன் இருப்பது நல்லது. புரிந்துகொள்ளாமல் பிரிந்துசென்ற வர்களும் ஒன்றுசேருவார்கள். பணவரவு ஏற்ற- இறக்கமாக இருக்கும் என்பதால், எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. பூர்வீக சொத்துகள்ரீதியாக சிறிது மன நிம்மதிக்குறைவு ஏற்படும்,

உத்தியோகம்

பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும் என்றாலும், உங்களது உடல்நிலை ஒத்துழைக்காது. எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். பொருளாதாரரீதியாக தேக்க நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் வேலைப்பளு குறையும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதைத் தற்போது பயன்படுத்திக்கொண்டால் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடையமுடியும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும், உங்களது உழைப்பு அதிகமாக இருக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் சில பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள்மூலம் அனுகூலம் ஏற்படும். பயணங்களையும் அடிக்கடி மேற்கொள்வீர்கள். போட்டி, பொறாமையால் மனநிம்மதி குறையும். நவீன கருவிகள் வாங்குவதற்காக கடன் வாங்க நேரிடும். அதிக முதலீடு விஷயத்தில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்பதால், கொடுக்கல்- வாங்கலில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகை ஈடுபடுத்தும்போது கவனத்துடன் செயல்பட்டால் லாபம் காணமுடியும். பிறருக்கு முன்ஜாமின் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்ற விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வம்பு, வழக்குகளில் இழுபறிநிலை நீடித்தாலும் ர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அரசியல்

மேலிடத்தில் உள்ளவர்களின் ஆதரவைப்பெற சிறிது போராட்டங் களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். என்றாலும் பெயர், புகழுக்கு பங்கம் ஏற்படாது. மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால், எடுக்கும் காரியங்களைத் திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடைப்பேச்சுகளில் நிதானமுடன் நடந்துகொள்வது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விவசாயிகள்

உழைப்பு அதிகமாக இருந்தாலும் பயிர்விளைச்சல் சுமாராக இருக்கும். முதலீட்டை எடுத்துவிடமுடியும். வேலையாட்களை அனுசரித்துச் சென்றால் அவர்களது ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். அரசு உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். பூர்வீக சொத்துகள் விஷயத்தில் பங்காளிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம் என்பதால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

கலைஞர்கள்

கிடைத்த வாய்ப்புகளைக் கைநழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பணவரவு ஏற்ற- இறக்கமாக இருக்கும். சுக வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சி உண்டாக்கும். பெரிய தொகையை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படவும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும், அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்படமுடியும். கணவர்- மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களில் தடைவிலகி கைகூடும். புத்திரவழியில் மனசஞ்சலங்கள் தோன்றி மறை யும். பணவரவு தக்க நேரத்தில் கிடைப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு, உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

மாணவ- மாணவியர்

கல்வியில் சிறுசிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். விளையாட்டுப் போட்டிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். நல்ல நட்புகளால் பல நன்மைகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பலன் கிடைக்கும்.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-9-2020 முதல் 26-1-2021 வரை

உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு. என்றாலும் உங்கள் ராசிக்கு 5-ல் ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 11-ல் கேட்டை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால், பணவரவு ஓரளவுக்கு கிடைத்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக்குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும், அசையா சொத்துகள் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். நவீன பொருட்களை வாங்குவீர்கள். பங்காளிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குரு சாதகமற்று சஞ்சரிப்பதால், கொடுக்கல்& வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது முன்னெச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றமுடியும். தொழில்ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். என்றாலும் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், தேவையற்ற அலைச்சல் ஏற்படும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம்பெறும் ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்றுப் பெற்றோர், ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-1-2021 முதல் 1-6-2021 வரை

உங்கள் ராசியில் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு. என்றாலும் ராகு 5-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 11-ல் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றிகிட்டும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு அதிசாரமாக 6-4-2021 முதல் தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்க உள்ளதால், குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் உண்டாகும். கிடைக்கவேண்டிய வாய்ப்புகளும் கிட்டும். வெளியூர், தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் அமையும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலையே இருக்கும். வீடு, வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கடன் படிப்படியாகக் குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை பிறருக்கு கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 2-6-2021 முதல் 5-10-2021 வரை

ஜென்ம ராசியில் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், ராகு 5-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 11-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால், எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக் கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அவர்கள்மூலம் அனுகூலப்பலனை அடையமுடியும். குரு வக்ர கதியில் சஞ்சரிக்க இருப்பதால், பணவரவு ஏற்ற- இறக்கமாகத்தான் இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப்பெற்று குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். திருமண சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகளை சந்திக்கவேண்டியிருக்கும். புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும், அசையா சொத்துகளால் வீண்செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரரீதியாக ஓரளவுக்கு மேன்மைகளை அடையமுடியும். பெரிய முதலீடுகளைக்கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தைத் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோ கஸ்தர் களுக் குப் பணியில் நிம்மதியிருக்கும். என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது உத்தமம். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்க்கவும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 6-10-2021 முதல் 8-2-2022 வரை

உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெற்றாலும், ராகு 5-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 11-ல் அனுஷ நட்சத் திரத்திலும் சஞ்சரிப்பதால், நெருக்கடிகள் குறைந்து ஏற்றங்கள் ஏற்படும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு 20-11-2021 முதல் தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகும். எந்தவொரு முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உடல் ஆரோக்கியப் பிரச் சினைகள் படிப்படியாகக் குறையும். சோர்வு, மந்த நிலை விலகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர் களும் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். என்றாலும் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அசையும், அசையா சொத்துகளை வாங்கும் எண்ணம் ஈடேறக்கூடிய வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலப்பலன் பெறமுடியும் என்றாலும், பெரிய தொகை பிறருக்கு கடனாகக் கொடுக்கும்போது கவனமுடன் செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமை மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படு வார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப்பளு ஏற்பட்டாலும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப் பெண்களைப் பெற்றுப் பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 9-2-2022 முதல் 12-4-2022 வரை

உங்கள் ராசிக்கு 5-ல் ராகு கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 11-ல் விசாக நட்சத்திரத்திலும், குரு 2-ல் சஞ்சாரம் செய்வதாலும் உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன் சற்றே குறையும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் அலைச்சல் ஏற்பட்டாலும், அதன்மூலம் சாதகப்பலன் கிடைக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறிது மந்த நிலை இருந்தாலும், எதையும் சமாளிக்கும் பலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பிரச்சினை கள் விலகும். பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தமுடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொதுநலக் காரியங்களுக்காக செலவுசெய்யும் வாய்ப்பும், ஆன்மிகம், தெய்வீகக் காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெறமுடியும். உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். வேலையாட்களின் ஆதரவு திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 5, 6, 8.

கிழமை : சனி, புதன்.

திசை : மேற்கு.

நிறம் : நீலம், பச்சை.

கல் : நீலக்கல். தெய்வம் : விநாயகர்.

பரிகாரம்

மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு 5-ல் சஞ்சாரம் செய்வதால், ராகுவுக்குப் பரிகாரமாக ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்கள், மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைக்குட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவது, "ஓம் ப்ரம் ப்ரீம் ப் ரௌம் சஹ ராஹவே நமஹ' என்ற பீஜமந்திரத்தைக் கூறிவருவது நல்லது. ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெறுவதால் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் பமேற்றுவது நல்லது. சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீலநிற சங்குப் பூக்கள் மற்றும் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, கருப்புநிற ஆடை அணிவது நல்லது.

கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உயர்ந்த பண்பும், நிறைந்த பொறுமையும், எல் லாரி டத்தி லும் அ ன் பா கப் பழகக்கூடி ய தன்மையும் கொண்ட கும்ப ராசி வாசகர்களே! திருக்கணிதப் பஞ்சாங்கப்படி தற்போது ஏற்படவுள்ள ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு, 23-9-2020 முதல் 12-4-2022 வரை ராகு ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டிலும், கேது ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதும், ராசியாதிபதி சனி 12-ல் சஞ்சரித்து உங்களுக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடைபெறுவதும் சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. பொருளாதார நிலை சாதகமாக இருந்தாலும் இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுக்கவேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்வர்களால் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது, விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது-. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பு அனுகூலப் பலன் ஏற்படும். ஆடம்பர செலவு களைக் குறைத்துக்கொள்வது நல்லது. அசையும், அசையா சொத்துகளால் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தும்போது கவனம் தேவை. ஆன்மிகம், தெய்வீகக் தரிசனங்களுக்காகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால், கையில் இருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது. கூட்டாளிகளையும், வேலையாட் களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது, முடிந்தவரை கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியற்றநிலை ஏற்படும். வேலைபளு இருப்பதால் உடல்நிலை சோர்வடையும். எடுக்கும் பணிகளைத் திறம்பட செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். எதிலும் எதிர்நீச்சல்போட்டே முன்னேறவேண்டி இருக்கும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பயணங்களைத் தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதன்மூலம் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடையமுடியும். தற்போது லாப ஸ்தானமான 11-ல் குரு சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும், 20-11-2020 முதல் குரு 12-லும், அதன்பின் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்க இருப்பதால், கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது. திருமண முயற்சியில் இடையூறு இருக்கும் என்றா லும், குரு ஜென்ம ராசியில் அதிசாரமாக (கும்ப ராசியில்) 6-4-2021 முதல் 14-9-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-4-2022 வரை சஞ்சரிப்பதன்மூலம் தனது 7-ஆம் பார்வையாக 7-ஆம் வீட்டைப் பார்க்கும் காலத்தில் சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றி யபடியே இருக்கும் என்பதால், உடற்பயிற்சி செய்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது உத்தமம். மனக்குழப் பங்களால் நிம்மதிக்குறைவு உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது ஆறுதலைத் தரும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும் என்பதால் எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை

கணவன்- மனைவி ஒற்றுமை சுமாராகத்தான் இருக்கும் விட்டுக்கொடுத்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவு ஏற்ற- இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைப்பது உத்தமம். குடும்ப விஷயங்களைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் நற்பலன் கிடைக்கும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். பொருளாதாரநிலை ஏற்ற- இறக்கமாக இருக்கும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்ள முடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்துடன் இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்வது உத்தமம்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் சுமாராக நடைபெறும். நல்ல வாய்ப்புகள் தேடிவரும். என்றாலும் நீங்கள் அதிகநேரம் உழைக்கவேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்யும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் எதிர்பார்க்கும் லாபம் ஓரளவுக்கு கிட்டும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

பணவரவில் நெருக்கடிகள் உண்டாகக்கூடிய காலம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாமல் போகும். பண விஷயத்தில் பிறருக்கு முன்ஜாமின் கொடுப்பதால் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள நேரிடும். வம்பு, வழக்குகள் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபம் அடையமுடியும்.

அரசியல்

மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். என்றாலும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இடையூறுகள் உண்டாவதால், அவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். மேடைப்பேச்சுகளில் கவன முடன் இருப்பது, பத்திரிகை நண்பர்களைப் பகைத்துக்கொள்ளாமல் இருப்பது உத்தமம். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுசெய்ய நேரிடும்-. என்றாலும் பணவரவுகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உடன்பழகுபவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

விவசாயிகள்

பயி ர் வி ளை ச் ச ல் சிறப் பா க இருந் த ô லும், ச ந்û த யி ல் விளைபொருளுக்கு ஏற்ற விலை கிடைக்க சிரமம் ஏற்படும். காய், கனி, பூ போன்றவற்றாலும், கால்நடைகளாலும் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். சில இடங்களில் நீர்வரத்துக் குறைவதால் தொடர்ந்து பயிரிட முடியாத நிலை ஏற்படும். புதிய பூமி, மனை, வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. அரசு மானிய உதவிகள் கிடைக்கத் தாமதம் ஏற்படும். பொருளாதார நிலை- ஏற்ற இறக்கமாக இருக்கும்.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் தேடிவரும். என்றாலும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணத்தொகையில் இழுபறிநிலை இருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் உண்டாகும். சுகபோக வாழ்வை அனுபவிக்க இடையூறு ஏற்படும். இசைத்துறைகளில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றங்கள் உண்டாகும்.

பெண்கள்

உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் மற்ற பிரச்சினைகளை தைரியத்துடன் எதிர்கொள்ள முடியும். புத்திரவழியில் சில மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். உறவினர் களை அனுசரித்துச்செல்வதன்மூலம் ஓரளவுக்கு ஆதாயப்பலனை அடையமுடியும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் மந்த நிலை உண்டாகும். முழுஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புகளால் பிரச்சினைகளுக்கு ஆளாகநேரிடும் என்பதால், நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகுவது உத்தமம். கல்விரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் இடையூறுகள் ஏற்படும். வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனம் தேவை. ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-9-2020 முதல் 26-1-2021 வரை உங்கள் ராசிக்கு ராகு 4-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 10-ல் கேது கேட்டை நட்சத்திரத்திலும் ,ராசியாதிபதி சனி 12-லும் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல், எதிர்பார்த்த பணவரவு கிடைக்கத் தû டகள் ஏற் படும். இருப் பû த அ னு பவி க் க இû டயூறு, மன நிம்மதிக் குறைவு ஏற்படும். நெருங்கியவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடப்பது நற்பலûத் தரும். உங்கள் ராசிக்கு 11-ல் சஞ்சரிக்கும் குரு 20-11-2020 முதல் 12-ல் சஞ்சரிக்க இருப்பதால், பண விஷயத்தில் சிக்கனத் துடன் இருப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற- இறக்கமாக இருந்தாலும், எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிக்கமுடியும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் நற்பலன்களைப் பெறமுடியும். பூர்வீக சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் உண்டாகக்கூடும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் பிரச்சினை கள் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உயரதிகாரிகளின் ஆதரவுகளைப்பெற சற்று பாடுபடவேண்டியிருக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கடன் சற்றே குறையும். மாணவர்கள் கல்வியில் முழுமுயற்சியுடன் ஈடுபடுவது உத்தமம்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-1-2021 முதல் 1-6-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 4-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 10-ல் கேட்டை நட்சத்திரத்திலும், ராசியாதிபதி சனி 12-ல் குரு சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதாலும், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், அலைச்சல், டென்ஷன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்வீர்கள். பணவரவு சுமாராக இருந்தாலும் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமைவதில் தடை, தாமதங்களுக்குப் பிறகு அனுகூலப்பலன் கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார்- உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் சிறப்பாக இருப்பதால், எதையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளைப் பெறமுடியும் என்றாலும், உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொள்வது உத்தமம். தொழில், வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்றாலும், எந்த செயலிலும் அதிக அக்கறை எடுத்தால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 2-6-2021 முதல் 5-10-2021 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 4-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 10-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால், எதையும் சமாளித்து ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். சனி, குரு வக்ர கதியில் சஞ்சரிப் பதால், எடுக்கும் முயற்சிகளில் தடைகள்விலகி முன்னேற்றங்கள் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும், அகலக்கால் வைக்காமல் பொறுமையுடன் செயல்பட்டால் அனுகூலங் களை அடையலாம். திருமண சுபகாரிய முயற்சிகள் சில தடை களுக்குப்பின் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி னாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார்- உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆன்மிகம், தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் உயர்வுகள் இருக்கும். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனைப் பெறமுடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்த்து கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 6-10-2021 முதல் 8-2-2022 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 4-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 10-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சாரம் செய்வதால், பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும். என்றாலும், ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதிக அலைச்சல், சுகவாழ்வு பாதிப்பு, இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். சனி 12-ல் சஞ்சரித்து ஏழரைச்சனி நடப்பதால் நீ ங்கள் எதிலும் கோபப்படாமல் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக்குறை வுகள் உண்டாகும். என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. தேவையின்றி பிறர்விஷயத்தில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. 20-11-2021 முதல் குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதன்மூலம் 7-ஆம் வீட்டைப் பார்க்கும் என்பதால், திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது, கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்துச்செல்வதன்மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுகளைப் பெறுவார்கள். மாணவர்கள் விளையாட்டுப்போட்டிகளில் ஈடுபடும்போது கவன முடன் இருப்பது நல்லது.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 9-2-2022 முதல் 12-4-2022 வரை

ராகு உங்கள் ராசிக்கு 4&ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 10-ல் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், ஏழரைச்சனியில் விரயச்சனி நடப்பதாலும், எந்தச் செயல் செய்வதென்றாலும் கவன த்துடன் செய்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலும் அலைச்சல் அதிகப்படியாக இருக்கும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரித்து 5, 7, 9-ஆம் ஸ்தானங்களைப் பார்ப்பதால் பொருளாதார நிலை ஏற்ற- இறக்கமாக இருந்தாலும், எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்துவிடமுடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் எதையும் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, விட்டுக்கொடுத்து நடந்துகொள்வதன்மூலம் சில முன்னேற்றங்களை அடையமுடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர்செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்கவேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய ஆற்றலால் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதன்மூலம் முன்னே ற்றம் அடையலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதைத் தள்ளிவைப்பது சிறப்பு. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்துக்கொண்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 5, 6, 7, 8.

கிழமை : வெள்ளி, சனி.

திசை : மேற்கு.

நிறம் : வெள்ளை, நீலம். கல் : நீலக்கல்.

தெய்வம் : ஐயப்பன்.

பரிகாரம்

கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு 4-லும், கேது 10-லும் சஞ்சரிப்பதால், ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச் சம்பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைக்குட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவது, "ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ' என்ற பீஜமந்திரத்தைக் கூறிவருவது நல்லது. முடிந்தவரை விநாயகரை வழிபடுவது, "ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ' என்ற பீஜமந்திரத்தைக் கூறிவருவது, செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை போன்றவற்றை தானம் தருவது நல்லது. ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் பமேற்றுவது நல்லது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீலநிற சங்குப் பூக்கள் மற்றும் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, கருப்பு நிற ஆடை அணிவது நல்லது. குரு 20-11-2021 முதல் சாதகமின்றி சஞ்சரிப்பதால், குருவுக்குப் பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு, தட்சிணாமூர்த்திக்குக் கொண்டைக்கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் பமேற்றி வழிபடவும். அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது நல்லது.

மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

எப்பொழுதும் கலகலப்பாகப் பேசி மற்ற வர்களைக் கவரக்கூடிய ஆற்றல்கொண்ட மீன ராசி வாசகர்களே! உங்கள் ராசிக்கு 4, 10-ல் சஞ்சரிக்கும் ராகு- கேது, திருக்கணிதப்படி தற்போது ஏற்படும் இடப்பெயர்ச்சிக்குப் பிறகு, 23-9-2020 முதல் 12-4-2022 வரை ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் ராகுவும், 9-ஆம் வீட்டில் கேதுவும் சஞ்சாரம் செய்வது மிகவும் அற்புதமான அமைப்பாகும். ஒரு ராசியில் நீண்டநாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி, உங்கள் ராசிக்கு தற்போது லாப ஸ்தானமான 11-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால், நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறி சகலவிதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். உங்களுக்கு அலைச்சல் குறைந்து மன நிம்மதி ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் நலமாக இருப்பார்கள். உற்றார்- உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். பணவரவு மிகச்சிறப்பாக இருந்து குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன் எல்லாம் படிப்படியாகக் குறையும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடைவதால் பல பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வம்பு, வழக்குகள் யாவும் முடிவுக்கு வரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ளமுடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள்மூலம் லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறைந்து உயர்வுகளும் நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அனுகூலமான பலன் கிடைக்கும். சிலர் நீண்டநாட்களாக எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைவார்கள். உங்கள் ராசியாதிபதி குரு (மகர ராசியில்) 20-11-2020 முதல் 6-4-2021 வரையும், 14-9-2021 முதல் 20-11-2021 வரையும் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும் உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கும் அமைப்பாகும் என்பதால், இக்காலத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். சிலருக்கு சொந்த வீடு, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துரீதியான சிக்கல்கள் எல்லாம் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் மிகவும் அற்புதமாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். மனைவி, பிள்ளைகள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். சுபநிகழ்ச்சிகள் குடும்பத்தில் கைகூடுவதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்டநாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும் பத்தி ல் மகிழ்ச்சியும் சுபி ட்சமும் நி றை ந்திருக் கும். தி ருமணமா காதவர்களுக் கு நல்ல வரன் கி டைக் கப்ù பறும். சுபகாரியங்கள் தடபுடலமாக நடைபெறும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். பொன், பொருள் சேரும். சிலருக்கு பூமி, மனை வாங்கும் யோகம் உண்டு. புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். கடன் யாவும் குறையும்.

உத்தியோகம்

பணியில் உயரதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியினைத் தரும். திற மைக்கு ஏற்ற பாராட்டுகளும் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங் களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். எடுக்கும் பணிகளைத் திறம் பட செய்துமுடிக்க முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கு ஏற்ற வேலை அமையும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிழ்ச்சி உண்டாகும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் சிறப்பான நிலை உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். அரசு உதவிகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தி பெருகும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயமானப் பலன்களைப் பெறுவீர்கள். போட்டி, பொறாமை மறையும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை மிகவும் முன்னேற்றகரமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையினை அடையமுடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். வம்பு, வழக்குகள் முடிவுக்கு வரும்.

அரசியல்

பெயரும் புகழும் உயரக்கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பணவரவு தாராளமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடிவரும். பத்திரிகையாளர்கள் மற்றும் உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச்சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கு ஏற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள தனவரவு உண்டாகும். நீர்வரத்து தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளைக் கையாண்டு அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி, நிலம், மனை போன்ற வற்றை வாங்கும் யோகம் உண்டு. காய், கனி விளைச்சல் சிறப்பாக இருக்கும். கால்நடைகளால் நல்ல லாபம் கிடைக்கும். கடன் சுமைகள் குறையும்.

கலைஞர்கள்

புதிய வாய்ப்புகள் தேடிவரும். புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கைக்கு வராமல் தடைபட்டுக் கொண்டிருந்த பணத்தொகையும் தடையின்றி வந்துசேரும். சுகவாழ்விற்குப் பஞ்சம் ஏற்படாது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். இசைத்துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். பயணங்களால் அனுகூலப்பலன்கள் அமையும். கடன்களும் குறையும்.

பெண்கள்

உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் தேடிவரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பணவரவு தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துகளால் லாபம் கிட்டும். புத்திரவழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

மாணவ- மாணவியர்

நல்ல மதிப்பெண்களைப் பெற்றுப் பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறமுடியும். கல்விக்காக வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். விளையாட்டுப்போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுகளையும் தட்டிச்செல்வீர்கள். அரசு உதவிகள் கிடைக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் நற்பலன்கள் ஏற்படும். ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-9-2020 முதல் 26-1-2021 வரை உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், 9-ல் கேது கேட்டை நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கும் இக்காலத்தில், சனி லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 20-11-2020 முதல் குரு 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். நல்ல வரன் தேடிவரும். புத்திரவழியில் பூரிப்பு ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்துவிடமுடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் குறையும். கணவன்- மனைவி பிரச்சினை கள் விலகி ஒற்றுமை ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து/கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-1-2021 முதல் 1-6-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 3-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 9-ல் கேட்டை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது மட்டுமின்றி, சனி 11-ல் சஞ்சரிப்பதும், 6-4-2021 முடிய குரு 11-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால், பணவரவு சிறப்பாக இருக்கும். புதிய நவீன பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை உண்டாகும். திருமணம்போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்கமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதால் லாபம் அதிகரிக்கும். வெளியூர் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். பல பொதுநலக் காரியங்களுக்காக செலவுசெய்யும் வாய்ப்பும், ஆன்மிகம், தெய்வீகக் காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுகளைப் பெறுவார்கள். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்குத் திறமைக்கேற்ற வேலை கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுப் பள்ளி, கல்லூரிக்குப் பெருமை சேர்ப்பார்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 2-6-2021 முதல் 5-10-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 3-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 9-ல் அனுஷ நட்சத்திரத்திலும், சனி 11-ல் சஞ்சரிப்பதாலும், நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். தாராள தன வரவு உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திரவழியில் மகிழ்ச்சி இருக்கும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. குரு அதிசாரமாக 12-ல் சஞ்சரிப்பதால், எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் வெற்றிபெறமுடியும். கடன் பிரச்சினைகள் சற்றே குறை யும். ஆன்மிகம், தெய்வீகக் காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 6-10-2021 முதல் 8-2-2022 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 3-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 9-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால், நீங்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்றிவிடமுடியும். சனி 11-ல் சஞ்சரிப்பதால் எந்தவிதப் பிரச்சினைகளையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பேச்சில் நிதானத் தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலைநாட்டமுடியும். பண வரவு சிறப்பாக இருக்கும் என்றாலும், 20-11-2021 முதல் குரு 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. சிலருக்கு வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பு உண்டாகும் என்றாலும், அதன்மூலம் கடன் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடையமுடியும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறும் வாய்ப்பு உண்டாகும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 9-2-2022 முதல் 12-4-2022 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 3-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 9-ல் விசாக நட்சத்திரத்திலும், 11-ல் சனி சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்குப் பரிபூரண வெற்றி கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகளால் நல்லது நடக்கும். குரு 12-ல் சஞ்சரிப்பதால் திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பண வரவு தாராளமாக இருக்கும் என்றாலும், எதிர்பாராத வீண்செலவுகளும் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தாமல், கொடுத்த கடன்களை வசூலிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் லாபம் பெருகும். வேலையாட்களால் அனுகூலப்பலன் ஏற்படும். அரசுக் கடன் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடப்பது உத்தமம். உத்தியோகத்தில் வேலைப்பளு குறைந்து நிம்மதியுடன் பணிபுரியமுடியும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்வது உத்தமம். மாணவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 1, 2 ,3 ,9.

கிழமை : வியாழன், ஞாயிறு.

திசை : வடகிழக்கு.

நிறம் : மஞ்சள், சிவப்பு. கல்: புஷ்பராகம்.

தெய்வம்: தட்சிணாமூர்த்தி.

பரிகாரம்

மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் ராசிய திபதி மட்டுமின்றி, சில நாட்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு, தட்சிணாமூர்த்திக்குக் கொண்டைக்கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் பமேற்றி வழிபடவும். 5 முக ருத்ராட்சம் அணிவதும். குரு எந்திரம் வைத்து வழிபடுவதும் நல்லது. அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்யவும்.