Skip to main content

"தமிழில் திட்டுவதை விரும்பி ஏற்றுக்கொண்ட முருகன்" - அருணகிரிநாதர் பாடல் குறித்து விளக்கும் நாஞ்சில் சம்பத்

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

Nanjil Sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தமிழ்க்கடவுள் முருகன் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

"குன்றுதோறும் இருந்து ஆட்சி செய்யும் முருகன் தமிழர்களின் வழிபடு கடவுளாக இருக்கிறான். அப்பனுக்கு உபதேசம் செய்தவன், சூரனை சம்ஹாரம் செய்தவன், கேட்டதை கொடுப்பவன் என்று பல சிறப்புகள் முருகனுக்கு உண்டு. வயிற்று வலியால் அவதிப்பட்ட பகழிக்கூத்தருக்கு அருள் செய்ததால் அவர் தந்த திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் பெரிதும் பேசப்படுகிற நூல். முருகன் மனசு வைத்தால் வயிற்று வலியால் அவதிப்படுகிறவனையும் வாழவைப்பான், வாய் பேச முடியாதவர்களையும் பேச வைப்பான், மரத்தின் உச்சியில் இருப்பவனையும் நிலவின் உச்சியில் கொண்டு வைப்பான் என்ற நம்பிக்கை காலங்காலமாக தழிழர்கள் மத்தியில் இருக்கிறது. தைப்பூசத்தன்று பழனிக்கும் திருச்செந்தூருக்கும் அலையலையாய் பக்தர்கள் வருகிறார்கள். முருகன் மீது மட்டும் ஏன் இப்படியொரு நம்பிக்கை?

 

முருகனை வைத்து தமிழ்நாட்டின் அரசியல்கூட கடந்த காலத்தில் சுழன்றது. சங்ககாலத்தில் இருந்தே தமிழர்களின் இறைவழிபாட்டில் தவறாமல் முருகன் இடம்பெற்றுள்ளான். அதற்குச் சான்று, பரிபாடலிலும் சங்க இலக்கியங்களிலும் பல பாடல்கள் முருகனைப் பற்றி உள்ளன. அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில், "மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதாரை யுமங்கு வாழவைப்போன்" என்று முருகனைக் குறிப்பிடுகிறார். வள்ளி அழுத்தப்பட்ட குறவர் குலத்தைச் சார்ந்தவர். குறவர் குல வள்ளியை காதலித்து, அவளை திருமணமும் செய்துகொண்டான் முருகன். அந்தப் பாடலில், தமிழில் திட்டினால் அதை ஏற்றுக்கொண்டு அவரையும் முருகன் வாழவைப்பான் என்று அருணகிரிநாதர் கூறுகிறார்.

 

தமிழ் மீது அந்த அளவிற்கு காதல் கொண்டிருந்த முருகன், தமிழிலேயே தன்னை ஆராதிக்க வேண்டும், தமிழிலேயே தன்னை பாட வேண்டும், தமிழிலேயே தன்னை திட்ட வேண்டும் என்று விரும்பினான். முருகனை பற்றி பாடும்போது உறவு முறையையும் அருணகிரிநாதர் சுட்டுகிறார். உமையாள் பயந்த இலஞ்சியம் என்றும் மாயோன் மருகன் என்றும் முருகனுக்கு உறவுமுறைச் சொல்லி அவனிடத்தில் செல்வதற்காக அருணகிரிநாதர் ஆற்றுப்படுத்துவதை படிக்க படிக்க தமிழும் பக்தியும் நெஞ்சிலே வந்து குடிகொள்கிறது."

 

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.