Skip to main content

மழையில் கதவை தட்டியவருக்கு விதைத்த நெல்லை தோண்டியெடுத்து சமைத்துக்கொடுத்த நாயன்மார் - நாஞ்சில் சம்பத் பகிரும் தமிழ் வரலாறு

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

Nanjil Sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

காலங்காலமாக கட்டிக்காத்து வந்த பண்பாடு கண் முன்னாலே உடைந்து சிதறிக்கொண்டு இருக்கிறது. யாசிப்பவனுக்கு யாசகம் கொடுப்பதில் மகிழ்ச்சி அடையலாம். ஆனால், விளம்பரம் தேடக்கூடாது. அப்படியான மனிதர்களைத்தான் இன்றைக்கு பார்த்துக்கொண்டு இருக்கிறோம். கோவிலில் எரிந்து கொண்டிருக்கும் ட்யூப் லைட்டில் அதன் வெளிச்சத்தை அடைக்கக் கூடிய அளவிற்கு அதை வாங்கிக்கொடுத்தவரின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. சராசரி மனிதர்கள்கூட விளம்பரப்பிரியர்களாக மாறிவிட்ட சூழலில் இந்த நிலை நேற்றும் இருந்ததா என்று பார்த்தால், இல்லை.

 

சேதுபதி சீமையில் நெல்வயல், கழனி சூழ்ந்த திருத்தலம் இளையான்குடி. அந்த இளையான்குடியில் 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் இருந்தார். அனைத்து நாயன்மார்களுக்கும் தனித்தனி பெருமை இருக்கிறது. அந்த வகையில், இளையான்குடி மாறநாயனார் தமிழ்ப்பண்பாடான விருந்தோம்பலில் பேரும்புகழும் பெற்றவர். விருந்து சமைப்பதையும் விருந்தை அடியார்களுக்கு பரிமாறுவதையுமே தன் வாழ்க்கையாக கொண்டு வாழந்தவர் இளையான்குடி மாறநாயனார். விதைநெல்லை சமைத்துப்போடும் அளவிற்கு நெருக்கடியான தருணம் ஏற்பட்டபோதுகூட அதை மகிழ்ச்சியோடு செய்தார். 

 

ஒருநாள், மழை பொழிந்து கொண்டிருக்கும் நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது. கதவைத் திறந்து பார்த்தால் எனக்கு சோறு வேண்டும் என்று கேட்டு ஒரு சிவனடியார் நிற்கிறார். இளையான்குடி மாறநாயனார் தன் மனைவியிடம் சென்று விஷயத்தைக் கூறுகிறார். சமைப்பதற்கு வீட்டில் நெல் இல்லை. உடனே மனைவி, கழனிக்குச் செல்லுங்கள். நேற்றுதானே விதைத்தீர்கள் எப்படியும் இந்நேரம் முளைத்திருக்காது. விதைத்த நெல்லை எடுத்து வாருங்கள் என்கிறார். அந்தக் கொட்டும் மழையில் ஓடிச் சென்று இளையான்குடி மாறநாயனார் விதைத்த நெல்லை எடுத்துக்கொண்டு வருகிறார். அதை உலர்த்தி, அரிசியாக்கி சமைப்பதற்கு ஆயத்தமாகிறார் இளையான்குடி மாறநாயனாரின் மனைவி. 

 

சமைப்பதற்கு எல்லாம் தயாராகிவிட்டாலும்கூட, கொட்டும் மழையில் காய்ந்த விறகு கிடைக்கவில்லை. உடனே வீட்டின் கூரையில் இருந்த கட்டையை உருவி அதைச் சமைப்பதற்கு பயன்படுத்துகிறார். உணவு தேடி வந்தவருக்கு சமைக்க விதை நெல், அடுப்பெறிக்க கூரை விறகு என்று உடனடியாக ஏற்பாடு செய்து சமைத்துக்கொடுத்தார்கள் இளையான்குடி மாறநாயனாரும் அவரது மனைவியும். தமிழர்களின் விருந்தோம்பல் பண்பிற்கான உதாரணமாக வாழ்ந்தவர் இளையான்குடி மாறநாயனார். இதை பெரியபுராணத்தில் தெய்வச்சேக்கிழார் பதிவு செய்துள்ளார். 

 

சேக்கிழாரின் பெரியபுராணத்தை படிக்கிறபோது அதில் பக்தி மட்டும் இல்லை; தமிழர்களின் பண்பாடு, விருந்தோம்பல், ஈரம், வீரம் இருக்கிறது. இப்படியா நம்மவர்கள் வாழ்ந்தார்கள் என்று நினைக்கும்போது நமக்குள் பெருமை குடிகொள்கிறது. அன்றைக்கு கொடுப்பதை அறமாக கருதினார்கள். இப்படிப்பட்ட பண்பாட்டை உலக நாகரிகத்தில் எங்கேயும் பார்க்க முடியாது. தோண்டத் தோண்ட புதையல் கிடைப்பது மாதிரி, தோண்டத் தோண்ட தங்கக்கட்டி கிடைப்பது மாதிரி பெரிய புராணத்தை தோண்டத் தோண்ட தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றில் இப்படியான தித்திப்பான செய்திகள் எல்லாம் கிடைக்கின்றன.  

 

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.