Skip to main content

வெள்ளைக்கார மருத்துவர்களையே மிரளவைத்த பாம்பன் சுவாமிக்கும் முருகனுக்கும் இடையேயான  உறவு 

Published on 27/04/2022 | Edited on 27/04/2022

 

nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பாம்பன் சுவாமிகள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு,

 

அருளாளர்கள் அமைதி கொண்டுள்ள இடங்களுக்குச் சென்றால் நெஞ்சத்தில் நிம்மதி கூடுகட்டிவிடுகிறது; நிழலில் உட்காருவது மாதிரியான சுகம் கிடைக்கிறது. அருளாளர்கள் அடக்கமாகி இருக்கும் அடக்கத்தளத்தில் சென்று நின்றால் மனம் அமைதிக்காடாகி விடுகிறது. எவ்வளவு சாதித்தாலும், சம்பாதித்தாலும் ஒருவனுக்கு தேவைப்படுவது அமைதிதான். அந்த அமைதி எங்கு கிடைக்கும்?

 

திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் நினைவிடத்தில் வந்து பல பெரிய பிரமுகர்கள் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார்கள். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே இருக்கும் ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனையான எம்.எம்.சி. மருத்துவமனையில் பாம்பன் சுவாமிகள் படம் உள்ளது. அந்த மருத்துவமனையில் எதற்கு பாம்பன் சுவாமிகள் படம் இருக்கிறது என்று யோசித்திருக்கிறேன். 

 

சண்முகக்கவசம் பாடிய அருளாளர், கந்தசஷ்டி கவசத்தை தினமும் ஓதுகிறவர், திருப்புகழை தினமும் பாடி, இதைப்போன்ற படைப்புகளை நானும் உமக்கு தரவேண்டும் முருகா என்று முருகனிடம் யாசகம் கேட்டுக்கொண்டு அதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாமல் வாழ்ந்தவர் பாம்பன் சுவாமிகள். 73 வயதான பாம்பன் சுவாமிகள் சராசரி மனிதரைப்போல தலைநகர் சென்னையில் தம்புசெட்டி தெருவில் நடந்து சென்றுகொண்டிருக்கிறார். ஒரு குதிரை வண்டி அவர் காலில் ஏறி கால் முடமாகிவிடுகிறது. அவரை நேசிக்கும் நபர்கள் அவரைத் தூக்கிகொண்டுவந்து சென்னை பொதுமருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். அப்போது அங்கு வெள்ளைக்காரர்கள் மருத்துவர்களாக இருந்தனர். பாம்பன் சுவாமிகள் காலைப் பார்த்த வெள்ளைக்கார மருத்துவர்கள், இவர் முடத்தை நீக்குவது கடினம், வயதும் அதிகரித்துவிட்டதால் இவரைக் காப்பற்ற முடியும் என எங்களுக்கு நம்பிக்கையில்லை எனச் சொல்லிவிட்டார்கள். ஆனால், பாம்பன் சுவாமியின் அடியார்கள் அவரைச் சுற்றி நின்றுகொண்டு அவர் படைத்த சண்முகக்கவசத்தை திரும்பத்திரும்ப படித்தார்கள். 

 

நாட்கள் சென்று கொண்டிருந்தது. ஒருநாள், பாம்பன் சுவாமிகளின் கண்களுக்கு மயில் வாகனத்தில் முருகன் பறந்துவருவது தெரிகிறது. கண் மூடி திறப்பதற்குள் மயிலையும் காணவில்லை; முருகனையும் காணவில்லை. அதிசயம் என்னவென்றால் முடமான அவர் காலில் இருந்த வலியையும் காணவில்லை. 

 

இவரைக் காப்பாற்ற முடியும் என எங்களுக்கு நம்பிக்கையில்லை என டாக்டர்களால் கைவிடப்பட்ட பாம்பன் சுவாமிகள், சண்முகக்கவசம் பாடி காப்பாற்றப்படுகிறார். இலையில் இருக்கும் பனித்துளி சூரிய ஒளிபட்டால் விலகுவதுபோல மயில் வாகனத்தில் முருகன் வருவது கண்ணிற்கு தெரிந்ததும் அவர் காலில் இருந்த முடம் விலகியது. சராசரி மனிதரைப்போல எழுந்து நடக்க ஆரம்பித்த பாம்பன் சுவாமிகளைப் பார்த்த மருத்துவர்கள் என்ன அதிசயம் நடந்தது என வியந்தார்கள். 

 

சண்முகக்கவசம் பாடினால் எல்லா வலிகளும் பறந்துபோகும் என்பதற்கு சான்றாக இன்றைக்கும் பாம்பன் சுவாமிகள் நினைவிடத்திற்கு சென்று பக்தர்கள் அமைதியைத் தேடுகிறார்கள். முருகனை கொண்டாடுவதைப் போல அவரது அடியார்களையும் கொண்டாடும் தமிழ்நாட்டில் பக்தி செழித்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.  

 

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.