Skip to main content

இவர் திட்டுவதே ஆசிர்வாதம் - மூக்குபொடி சாமியாரை சிலாகிக்கும் பக்தர்கள்

Published on 11/02/2018 | Edited on 12/02/2018


 

சித்தர்களும், ஞானிகளும் வாழ்ந்த பூமி திருவண்ணாமலை. அண்ணாமலையார் கோயிலால் திருவண்ணாமலை புகழ்பெற்று விளங்குகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், அதில் அரசியல், திரைத்துறை, தொழில்துறை, நீதித்துறை பிரபலங்கள் உட்பட அரசுத்துறை உயர் அதிகாரிகள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வது தற்போது சாதாரண நிகழ்வாகிவிட்டது. இந்நிலையில் மக்கள் கவனத்தை பெரிதும் கவராத சாமியார்களை பிரபலமானவர்கள் சந்திப்பது திருவண்ணாமலை மக்களை பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. 
 

அப்படி சமீபகால பரபரப்பு ஆச்சர்யத்துக்கு மக்களை உள்ளாக்கியவர் மூக்குபொடி சாமியார். 20 வருடங்களுக்கு முன்பு, ஏதாவது ஒரு கடை முன் போய் உட்கார்ந்தால் ஏய் தூர போய்யா சத்தம் போட்டே கடைக்காரர்களால் துரத்திவிடப்பட்டவர். அதற்கு காரணம், இவர் போய் அமரும்மிடம் வளர்பிறை போல் வளராமல் தேய்பிறையாகிவிடும் என்ற தகவல் உலாவியல் கடைக்காரர்கள் இவரை கண்டாலே துரத்திவிடுவார்கள். இதனால் கால்வாய் ஓரம் தான் படுத்துக்கிடப்பார். ஆட்டோக்காரர்கள் யாராவது மூக்குபெடி வாங்கி இவரை நோக்கி வீசுவார்கள். அவரேயே இன்று தேடித்தேடி வந்து சந்திக்கிறார்கள் பிரபலமானவர்கள். தனது வியாபார தலத்துக்கு வரமாட்டாரா என ஏங்கி தவிக்கிறார்கள் வியாபாரிகளும். பணம், பொருள் என எதுக்கொட்டி தர சிலர் முன் வந்தாலும் வாய் திறந்து பேசமறுக்கிறார், அவர் முன் வைக்கும் பணத்தையே பெரும்பாலும் தொடுவதுக்கூட கிடையாது. 
 

mooku podi


ஆசி என்பது, அவரே வாய் திறந்து ஒன்றிரண்டு வார்த்தை சொல்வார் அல்லது கைதடியால் ஒரு அடிவிழ வேண்டும், இல்லையென்றால் இங்கு பதிவிட முடியாத ஒரு வார்த்தையால் திட்டுவார். அப்படி ஒருவருக்கு நடந்துவிட்டால் அவர் வாழ்க்கையில் முன்னேறிவிடுவார் என்கிறார்கள் அவரை தினம் தினம் வந்து சந்திக்கும் பக்தர்கள்.
 

அவருக்கென நிலையான ஒருயிடம் கிடையாது. ஆனால், பெரும்பான்மை நேரத்தை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரேயுள்ள பூபதி டீ கடை தான் அவரது வசிப்பிடம். அங்குள்ள பெஞ்ச்சில் படுத்துக்கிடப்பார். நாம் சென்று சந்தித்த அன்று மதியம் 12 மணியளவில் அப்படித்தன் வயிற்றில் பெரிய மூட்டையோடு படுத்துக்கொண்டு இருந்தார். அவர் அங்கு இருப்பார் என்பதை தெரிந்துக்கொண்டு பல பக்தர்கள் வந்தபடியே இருக்கிறார்கள். அவரை தொந்தரவு செய்யாமல் அவர் அருகில் மூக்குபொடி பாக்கெட்டை வைத்துவிட்டு அவரை வணங்கிவிட்டு செல்கிறார்கள்.
 

இதுப்பற்றி அவரது நீண்ட கால பக்தர் பாக்ஸர் சுரேஷ் நம்மிடம், சாமியோட ஒத்தை வார்த்தைக்காக இங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்துயிருக்கிறார்கள். ஆனால், அந்த ஒத்தை வார்த்தை ஆசி பெரும்பாலானவர்களுக்கு கிடைப்பதில்லை. நீங்கள் என்ன நினைத்துக்கொண்டு அவரை சந்திக்க வந்துள்ளீர்கள் என்பதை அவர் அறிந்துயிருப்பார். அது நடக்கும் என்றால் ஒற்றை கையை லேசாக தூக்கி ஆசிர்வதிப்பார், இல்லையேல் அமைதியாக இருப்பார். சில நேரங்களில் அடிக்கவும் செய்வார் அல்லது ஓரிரூ வார்த்தை கூறுவார். அதை அனைவரும் திட்டுகிறார் என நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில் அது திட்டுவதில்லை. அவர் ஒருவரை அடிக்கிறார், திட்டுகிறார் என்றால் பாவங்கள், கஸ்டங்களை போக்குகிறார் என்று அர்த்தம் என்றவர், இவரிடம், டி.டி.வி, இளையராஜா, நடிகர் சந்தானம் போன்றவங்க வந்துயிருக்காங்க என்கிறார் பாக்ஸர் சுரேஷ்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கல்லேரி துரையோ, 2012ல் இருந்து எனக்கு அவர் அறிமுகம். ஓஹோவென இருந்தேன், சில கெட்ட பழக்கங்களும் இருந்தன. இதனால் நொடிந்துப்போய் இருந்தபோது தான் இவரை பார்க்க வந்தேன். எதுவும் சொல்லமாட்டார், ஒருமுறை வண்டிய எடுப்போலாம் என்றார். அவர் வண்டியில் பின்னால் உட்காரவைத்துக்கொண்டு மலை சுற்றினேன். அப்போதுயெல்லாம் முதுகில் பளார், பளார் என அடித்துக்கொண்டே வருவார். மாதத்தில் 2 அல்லது 3 முறை சுற்றியிருக்கிறோம். ஒரு சில முறை ஒரே நேரத்தில் 3, 4 ரவுண்ட் கிரிவலம் வரவைப்பார். அப்பக்கூட எனக்கு ஏதாவது நல்லது நடக்க வழி செய்யேயான்னு கேட்பன், அப்படி எப்பயெல்லாம் கேட்கறனோ அப்பயெல்லாம் வண்டிய எடு கிரிவலம் போகலாம்ன்னு சொல்வார், வண்டியில உட்கார்ந்துக்கிட்டு என்னை முதுகுல அடிச்சிக்கிட்டே வருவார். அதன்பின் கெட்ட பழக்கங்களில் இருந்து வெளியே வந்தேன். ஒருமுறை நீ கார் வாங்கப்போறன்னார். தொழில் நஷ்டத்தல எல்லாம் இழந்துட்டு இப்பத்தான் தொழில் செய்ய தொடங்கியிருக்கன் இப்பப்போய் கார் வாங்கப்போறன்னு கிண்டல் பண்றியேய்யான்னு அவர்க்கிட்டயே சொன்னன். அவரும் சிரிச்சிட்டு விட்டுட்டார். அடுத்த இரண்டாவது நாள், என்னோட நண்பர் அவரோட புதுக்காரை 50 ஆயிரத்துக்கு குறைச்சி வித்தார். பேங்க் தவணையை என்னை கட்டிக்கச்சொன்னார். வெறும் பத்தாயிரம் தந்து காரை வாங்கனன். அப்பத்தான் அவரோட மகிமை புரிஞ்சது.
 

mooku podi 2


அவர் திடீர்ன்னு வா திருச்செந்தூர் போகலாம்ன்னு சொன்னார். சாமி, நான், நண்பர் ஒருத்தர் மூணு பேர் கார்ல போனோம். திருச்செந்நூர் போனதும் கடல்ல குளின்னு சொன்னார். சொன்னதும் போய் குளிச்சன், பின்னாடியே வந்தர் அவரும் குளிச்சிட்டு நிர்வாணாமா மணல்ல வந்து உட்கார்ந்தவர், எங்களை கோயிலுக்குள்ள போய் வா சொன்னவர், அவர் வரமாட்டேன்னிட்டார். கோயிலுக்குள்ள போய் வரும்போது பார்த்தா அவரை சுத்தி கூட்டம். இவரைப்பத்தி தெரியாம ஆசி வழங்குங்கன்னு சொன்னவங்கள விரட்டினார். அப்பறம் இவரைப்பத்தி சொல்லி தொந்தரவு பண்ணாதிங்கன்னு அனுப்பிவச்சிட்டு அழைச்சிக்கிட்டு வந்தன். இப்படி வேதாரண்யம், ராமேஸ்வரம், பெங்களூரு போகலாம்ன்னு சொல்லியிருக்கார் அழைச்சிக்கிட்டு போயிருக்கன் என்றார் துரை.
 

பூர்வீகம் சின்னசேலம் அருகிலுள்ள கிழக்கு ராஜாபாளையம் என்கிற கிராமத்தை சேர்ந்த ஆறுமுககவுண்டர் மகன் மொட்டையக்கவுண்டர். திருமணமாகி 5 வயதில் பிள்ளை இருந்தபோது, திடீரென அவரது மனைவி உடல் நலம்மில்லாமல் இறந்ததால் அதில் விரக்தியுற்று 5 வயது குழந்தையான மகனை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அண்ணாமலையரை தேடிவந்தவர் அதன்பின் வீட்டுக்கு செல்லவில்லை. இன்று அவர் மகன் திருமணமாகி பிள்ளை பெற்றுள்ளார். எதற்கும் சென்றதில்லை, மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் வந்து மாதம் ஒருமுறை சந்தித்துவிட்டு செல்கின்றனர். நாம் அவரை சந்திப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு மூக்குபொடி சாமியாரை சந்தித்த அவரது மகன், வயதானக்காலத்தில் இங்கே ஏன் இருக்கறிங்க வீட்டுக்கு வந்துடுங்க என அழைத்தார், வரமாட்டான், இதுதான் என் வீடுன்னு சைகையாலயே சொல்லி அனுப்பிட்டார் என்றார் அவருக்கு தினமும் உணவு பறிமாறும் ஹோட்டல் சப்ளையரும், அவரது பக்தருமான சிவலிங்கம். தொடர்ந்து அவரே, சொந்த கிராமத்துக்கு அருகில் உள்ள வீரபத்திரசாமியின் பக்தர் அவர் என்றார். அங்கு நடேசசாஸ்திரி ஜீவசமாதி, அவரோட சொந்த ஊருக்கு அருகில் உள்ளது அங்க அப்பப்ப போய்ட்டு வருவார் என்றார். காலையில் 2 இட்லி, மதியம் ஒரு பிடி சாதம், சாயந்தரம் 2 இட்லி அவ்வளவு தான் அவரோட சாப்பாடு. அதலயே நிறைய எறும்பு, ஈ க்கு புட்டு புட்டு போட்டுடுவார் என்றார். 
 

மேஸ்திரி சங்கர், என் இரண்டு மகன்களுக்கு ஒரே நேரத்தில் டெங்கு, அதை காப்பாற்றி தந்தவர் சாமி தான் என அவர் புகழை பேசினார். 
 

இப்படி மூக்குபொடி சாமியாரின் புகழ்பாடும் பக்தர்கள் அதிகரிக்க அதிகரிக்க அவரை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கியுள்ளன.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.