Published on 25/01/2022 | Edited on 25/01/2022

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, நிதானத்தை இழந்து நிருபரைத் திட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த விதிகளில் திருத்தும் கொண்டு வருவது தொடர்பான செய்தியாளர்கள் கூட்டம் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அப்போது, ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்திருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களைத் திட்டும் வகையில் முணுமுணுத்தார். எனினும், அவரின் பேச்சு அங்கிருந்த மைக்ரோபோனிலும், காணொளியிலும் பதிவானதால், கூடியிருந்த சக செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.