Skip to main content

'ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும்' -ஜோ பைடன் வேண்டுகோள்

Published on 04/11/2020 | Edited on 04/11/2020

 

US ELECTION 2020 TRUMP VS JOE BIDEN

 

 

அமெரிக்க  அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மற்றொரு புறம் தேர்தல் முடிவுகளும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.

 

அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

 

அமெரிக்காவில் நியூயார்க், வெர்மான்ட், மாசசூசட்ஸ், நியூஜெர்சி, கனக்டிகட், டெலவர், மேரிலேண்ட், கோலரோடா, இல்லினாய்ஸ், நியூமெக்ஸிகோ, கலிபோர்னியா, வாஷிங்டன் உள்ளிட்ட மாநிலங்களில் ஜோ பைடன்  வெற்றி பெற்றுள்ளார்.

 

US ELECTION 2020 TRUMP VS JOE BIDEN

 

அதேபோல் இண்டியானா, டென்னஸி, தெற்கு கரோலினா, புளோரிடா, டெக்சாஸ் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களை ட்ரம்ப் கைப்பற்றியுள்ளார்.

 

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 வாக்குகளில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் 238 வாக்குகளும், குடியரசு கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் 213 வாக்குகளும் பெற்றுள்ளன. பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகள் 270 ஆகும்.

 

US ELECTION 2020 TRUMP VS JOE BIDEN

 

இதனிடையே நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜோ பைடன், "அமெரிக்க அதிபர் தேர்தலில் நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. முழு முடிவுகள் வரும் வரை தமது கட்சி ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டுகோள்" விடுத்துள்ளார்.

 

இந்த நிலையில் அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் ஜோ பைடன் கட்சியினர் சதி செய்ய முயற்சிக்கின்றனர். வாக்குப்பதிவு முடிந்துவிட்டதால் இனி ஓட்டு போட்டு எதிர்க்கட்சியினரால் வெற்றி பெற முடியாது. மிகப்பெரிய வெற்றி வரப்போவதாகவும் இன்றிரவு அறிக்கை வெளியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

US ELECTION 2020 TRUMP VS JOE BIDEN

 

ட்ரம்பின் ட்விட்டர் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள ட்விட்டர் நிறுவனம், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை தவறாக வழிநடத்தும் வகையில் ட்ரம்பின் கருத்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

 

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் முழுவதும் இன்றிரவுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

அத்துமீறிய அதிமுக, பாஜக - காவல்துறை வழக்குப் பதிவு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 Violating AIADMK, BJP- Police case registered

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று திமுக, அதிமுக, பாஜகவினர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த இடங்களில் மோதிக்கொண்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், நேற்று நீலகிரியில் அதிமுக வேட்பாளர்களும் பாஜக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தை வழி முறைகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். அப்போது தேர்தல் நடைமுறையை மீறி பெருங்கூட்டத்துடன் வந்ததால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தல் நடத்தை வழிமுறைகளையும் மீறி பட்டாசு வெடித்தது; அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியது; காவல்துறையினரைப் பணி செய்ய விடாமல் தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக மற்றும் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.