Skip to main content

"நன்றி தெரிவிக்க ஒரு கோடி ரூபாயில் வெளிநாட்டு சுற்றுலா" - பணியாளர்களை திக்குமுக்காட செய்த நிறுவனம்!

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

GREAT BRITAIN

 

கிரேட் பிரிட்டனின் ஒரு பகுதியான வேல்ஸ் நாட்டின் கார்டிஃப் நகரில் அமைந்துள்ள யால்க் என்ற ஆட்சேர்ப்பு நிறுவனம், தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் 55 ஆட்சேர்ப்பு அதிகாரிகள், அவர்களது குழு உறுப்பினர்கள் என அனைவரையும் நான்கு நாட்கள் வெளிநாட்டு சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்துள்ளது.

 

கடந்த மாதம் தங்களது நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தவர்கள், இம்மாதத்தில் தங்களது நிறுவனத்தில் பணிக்கு சேரப்போகிறவர்களையும் இந்த வெளிநாட்டு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்போவதாகவும் கூறியுள்ள அந்த நிறுவனம் இந்த சுற்றுலாவிற்காக 100,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ஒரு கோடி) செலவு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

 

ஸ்பெயினின் கேனரி தீவுகளில் மிகவும் பெரியதான டெனெரிஃப் தீவுகளுக்கு இந்த சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் யால்க் நிறுவனம், கடந்த 2020 ஆம் ஆண்டு கரோனா பரவலின்போது கடினமான நேரத்தை சந்தித்ததையும், அதேநேரத்தில் 2021 மிகவும் லாபகரமான ஆண்டாக அமைந்ததையும் சுட்டிக்காட்டி, கடந்த இரண்டு வருடங்களாக கடினமாக பணியாற்றிய பணியாளர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

யால்க் நிறுவனத்தின் இந்த முடிவு, அதன் பணியாளர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலையேறச் சென்ற இளைஞர் உயிரிழப்பு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
A youth who went to Velliangiri mountain was lose their live

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

இந்நிலையில் வேலூரைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்ற இளைஞர் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலையில் ஏறியுள்ளனர். அப்பொழுது அதிகாலை ஐந்து மணிக்கு ஆறாவது மலையை அடைந்து நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, பனிப்பொழிவு ஏற்பட்டது. திடீரென தமிழ்ச்செல்வன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி நிலையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. வெள்ளியங்கிரி மலை ஏற சென்ற இளைஞர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
King Charles of England has cancer

இங்கிலாந்து மன்னர் 3 ஆம் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து மன்னர் 3 ஆம் சார்லஸுக்கு (வயது 73) புற்றுநோய் இருப்பது இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், நேற்று முதல் அவருக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை தொடங்கப்பட்டு இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது. புரோஸ்டேட் (prostate) என்ற சிகிச்சைக்கு சென்றபோது புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் புரோஸ்டேட் வகை புற்றுநோய் பாதிப்பு இல்லை எனவும் மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.