Skip to main content

1700 கோடி ரூபாய்க்கு உலைவைத்த ஞாபக மறதி... விதியின் சதியில் சிக்கிய இளைஞர்...

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

stefan thomas lost his password for 7002 bitcoins wallet

 

தனது பாஸ்வேர்ட்களை சேமித்து வைத்திருக்கும் ஹார்ட் டிஸ்க்கின் பாஸ்வேர்ட் மறந்துபோனதால், தனது பிட்காயின் கணக்கில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபாயை பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்துவருகிறார் இளைஞர் ஒருவர். 

 

ஜெர்மனியைச் சேர்ந்த புரோகிராமர் ஸ்டீபன் தாமஸ். சான் பிரான்சிஸ்கோவில் வசித்துவரும் இவர் பிட்காயின்களில் முதலீடு செய்பவர் ஆவார். பல ஆண்டுகளுக்கு முன்னர் பிட்காயின்களின் மதிப்பு அவ்வளவாக அதிகமாக இல்லாத காலத்தில், இவருக்கு ஒரு போட்டியில் 7002 பிட்காயின்கள் பரிசாக கிடைத்துள்ளன. அந்த பிட்காயின்கள் அடங்கிய டிஜிட்டல் வாலெட்டின் பாஸ்வேர்டை, அயர்ன் கீ என அழைக்கப்படும் ஒருவகை ஹார்ட் டிஸ்க்கில் தாமஸ் சேமித்து வைத்துள்ளார். அதேபோல அந்த அயர்ன் கீயின் பாஸ்வேர்டை ஒரு காகிதத்தில் எழுதிவைத்துள்ளார். இந்நிலையில், தற்போது அவர் வைத்திருந்த பிட்காயின்களின் மதிப்பு ஏகத்திற்கு உயர்ந்ததால், அவற்றைப் பரிவர்த்தனை செய்து பணம் ஈட்ட அவர் நினைத்துள்ளார். அவர் வைத்திருக்கும் பிட்காயின்களின் இன்றைய மதிப்பு சுமார் 1715 கோடி ரூபாய் ஆகும். 

 

ஆனால், இந்த பிட்காயின்கள் அடங்கிய டிஜிட்டல் வாலெட்டின் பாஸ்வேர்டை சேமித்து வைத்திருந்த அயர்ன் கீயின் பாஸ்வேர்டை அவர் மறந்துவிட்டார். அவர் அதனை எழுதிவைத்திருந்த காகிதமும் தொலைந்துவிட்டது. இதனால், என்ன செய்வதென்று தெரியாத அவர், இதுவரை எட்டு முறை அந்த அயர்ன் கீயின் பாஸ்வேர்டை போட்டு பார்த்துள்ளார். ஆனால், அவை அனைத்துமே தவறானது என வந்துள்ளது. அயர்ன் கீயின் பாஸ்வேர்டை பத்து முறை தவறாக போட்டால், அதில் உள்ள தகவல்களை மீண்டும் பெற முடியாது. இந்த நிலையில், இன்னும் இரண்டு முறை மட்டுமே பாஸ்வேர்டை போட்டு அயர்ன் கீயை திறக்க முடியும் என்ற சூழலில், அவ்வாறு அதனை திறந்தால் மட்டுமே தனது பிட்காயின்கள் அடங்கிய டிஜிட்டல் வாலெட்டினை திறக்கமுடியும் என்று நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் அந்த இளைஞர். 

 

எட்டு முறை தவறான பாஸ்வேர்டை போட்டுள்ள, தாமஸ் இன்னும் இரண்டு முறைக்குள் தனது பாஸ்வேர்டை கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள தாமஸ், "நான் படுக்கையில் படுத்துக்கொண்டு பாஸ்வேர்டை பற்றி யோசிப்பேன். பின்னர் நான் சில புதிய உத்திகளுடன் கணினிக்குச் செல்வேன். ஆனால், அது வேலை செய்யாது, நான் மீண்டும் யோசிக்க ஆரம்பிப்பேன்" என நம்பிக்கை தெரிவிக்கிறார். பாஸ்வேர்டை மறந்ததால் சுமார் 1700 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின்களைப் பரிவர்த்தனை செய்யமுடியாமல் தவிக்கும் இந்த இளைஞரின் கதை இணையத்தில் பலரையும் அனுதாபப்பட வைத்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது தாக்குதல்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
America announced action against Iran to incident on Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராகக் கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியிடப்படும்” என்று கூறினார்.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்; களமிறங்கிய அமெரிக்கா!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
America sided with Israel against Iran

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

America sided with Israel against Iran

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.