Skip to main content

வன்கொடுமை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட மாணவி... திருப்பத்தூரில் அதிர்ச்சி! 

Published on 09/08/2022 | Edited on 09/08/2022

 

shocked in Tirupathur!

 

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்துள்ளது செல்லரபட்டி ஊராட்சி. இப்பகுதியில் வசித்து வந்த விவேகானந்தன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்ததில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த கந்திலி காவல்துறையினர் அப்பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். அப்பெண்ணின் காலில் அணிந்திருந்த காலணியைத் தடயமாக வைத்து அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

 

விசாரணையின் முடிவில் அவர் செல்லரப்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகள் அமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று தெரியவந்தது. அரசு தேர்வுகளுக்கு முயன்று வந்த அமலா அதற்கான பயிற்சி வகுப்புகளுக்காக சென்று வந்த நிலையில், கடந்த ஜூன் 22ஆம் தேதி திடீரென காணாமல் போயுள்ளார். அமலா ஏற்கனவே ஒரு இளைஞரை காதலித்து வந்ததால் அவருடன் சென்றிருக்கலாம் என நினைத்த பெற்றோர்கள் தேடாமல் இருந்துள்ளனர். ஆனால் 23ஆம் தேதி அன்று அவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டது தெரிய வந்ததும் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


 

shocked in Tirupathur!

 

இந்த சம்பவத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அமலாவின் செல்போனை வேறு ஒரு நபர் உபயோகித்து வந்ததை கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து செல்லரப்பட்டி சேர்ந்த மகேந்திரனை பிடித்து போலீசார் விசாரித்ததில் இந்த சம்பவத்தின் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது.  அமலாவின் வீடும் மகேந்திரனின் வீடும் அருகருகே உள்ள நிலையில், அமலாவிற்கும் மகேந்திரனுக்கும் சிறு வயதிலிருந்தே அடிக்கடி சண்டை நிகழ்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் மகேந்திரன் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதால் தர்ம அடி கொடுத்து ஊரை விட்டு விரட்டி அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆறு வருடங்களாக மகேந்திரன் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

 

ஆறு வருடங்களுக்குப் பிறகு திருப்பத்தூர் வந்த மகேந்திரன் டெலிவரி பாய் வேலைக்கு சேர்ந்துள்ளான். ஆனாலும் அமலாவை ஒருதலையாகக் காதலித்து வந்த மகேந்திரனுக்கு, அமலா வேறு ஒரு நபரை காதலித்து வந்த செய்தி தெரிய வந்தது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொலை சம்பவம் நடந்த அன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு பயிற்சி மையத்திற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த அமலாவை மகேந்திரன் வழி மறித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அமலா மகேந்திரனின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணை கடுமையாகத் தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மகேந்திரன், கொலை செய்து கை கால்களைத் துப்பட்டாவில் கட்டி கிணற்றில் வீசியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.