Skip to main content

வன்கொடுமை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட மாணவி... திருப்பத்தூரில் அதிர்ச்சி! 

Published on 09/08/2022 | Edited on 09/08/2022

 

shocked in Tirupathur!

 

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்துள்ளது செல்லரபட்டி ஊராட்சி. இப்பகுதியில் வசித்து வந்த விவேகானந்தன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்ததில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த கந்திலி காவல்துறையினர் அப்பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். அப்பெண்ணின் காலில் அணிந்திருந்த காலணியைத் தடயமாக வைத்து அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

 

விசாரணையின் முடிவில் அவர் செல்லரப்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகள் அமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று தெரியவந்தது. அரசு தேர்வுகளுக்கு முயன்று வந்த அமலா அதற்கான பயிற்சி வகுப்புகளுக்காக சென்று வந்த நிலையில், கடந்த ஜூன் 22ஆம் தேதி திடீரென காணாமல் போயுள்ளார். அமலா ஏற்கனவே ஒரு இளைஞரை காதலித்து வந்ததால் அவருடன் சென்றிருக்கலாம் என நினைத்த பெற்றோர்கள் தேடாமல் இருந்துள்ளனர். ஆனால் 23ஆம் தேதி அன்று அவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டது தெரிய வந்ததும் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


 

shocked in Tirupathur!

 

இந்த சம்பவத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அமலாவின் செல்போனை வேறு ஒரு நபர் உபயோகித்து வந்ததை கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து செல்லரப்பட்டி சேர்ந்த மகேந்திரனை பிடித்து போலீசார் விசாரித்ததில் இந்த சம்பவத்தின் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது.  அமலாவின் வீடும் மகேந்திரனின் வீடும் அருகருகே உள்ள நிலையில், அமலாவிற்கும் மகேந்திரனுக்கும் சிறு வயதிலிருந்தே அடிக்கடி சண்டை நிகழ்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் மகேந்திரன் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதால் தர்ம அடி கொடுத்து ஊரை விட்டு விரட்டி அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆறு வருடங்களாக மகேந்திரன் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

 

ஆறு வருடங்களுக்குப் பிறகு திருப்பத்தூர் வந்த மகேந்திரன் டெலிவரி பாய் வேலைக்கு சேர்ந்துள்ளான். ஆனாலும் அமலாவை ஒருதலையாகக் காதலித்து வந்த மகேந்திரனுக்கு, அமலா வேறு ஒரு நபரை காதலித்து வந்த செய்தி தெரிய வந்தது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொலை சம்பவம் நடந்த அன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு பயிற்சி மையத்திற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த அமலாவை மகேந்திரன் வழி மறித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அமலா மகேந்திரனின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணை கடுமையாகத் தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மகேந்திரன், கொலை செய்து கை கால்களைத் துப்பட்டாவில் கட்டி கிணற்றில் வீசியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.