Skip to main content

செப். 11 - அமெரிக்காவின் கருப்பு தினம்!

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

sep 11th usa block days newyork building incident

 

கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அன்று அமெரிக்காவின் நேரப்படி காலை 08.46 மணிக்கு நியூயார்க் நகரின் அடையாளமான வர்த்தக மைய கட்டடத்தின் வடக்கு மைய கோபுரம் மீது விமானம் ஒன்று மோதியது. என்ன நடக்கிறதென்று தெரியாமல் அமெரிக்கர்கள் நிலைகுலைந்து போயினர். மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அடுத்த 17 நிமிடங்களில் மற்றொரு விமானம் உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தின் மீது மோதியது. கட்டடம் தீப் பற்றி எரிந்தது.

 

இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன் மீது ஒரு விமானம் மோதியது. அமெரிக்கா மட்டுமல்ல உலகமே இந்தக் காட்சிகளைக் கண்டு உறைந்து போனது. இந்த தாக்குதல்களில் சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர். உலக வல்லரசின் கருப்பு தினமாக இது அமைந்தது. 

 

ஒசாமா பின் லேடன் தலைமையிலான அல்-கெய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டு இந்த தாக்குதலை அரங்கேற்றியது பின்னர் தெரியவந்தது. 19 பயங்கரவாதிகள் குழுக்களாகப் பிரிந்து, விமான நிலையங்களில் பாதுகாப்பு வளையங்களை மீறி விமானங்களுக்குள் நுழைந்து நடுவானில் அவற்றைக் கடத்தி இந்த தாக்குதலை நேர்த்தியாகத் திட்டமிட்டு அரங்கேற்றியது கண்டறியப்பட்டது.

 

இந்த தாக்குதலுக்கு காரணமானவார்கள் வேட்டையாடப்படுவார்கள் என்று சூளுரைத்த அமெரிக்க அரசு, பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்ற முழக்கத்துடன் களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் மண்ணில் கால்பதிக்க இது முக்கிய காரணம். அதுமட்டுமல்ல, 2001ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இந்த 20 ஆண்டு கால சர்வதேச அரசியலைத் தீர்மானித்ததும், இந்த தாக்குதல்தான். தலிபான்களிடம் ஒசாமா பின் லேடன் தஞ்சம் புகுந்த நிலையில், அவரை ஒப்படைக்க தலிபான்கள் மறுத்ததால், ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஒழித்துக் கட்டியது அமெரிக்கா. 

 

10 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஒசாமா பின் லேடன் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டு, அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார். ஆனால் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் எண்ணம் நிறைவேறவில்லை. ஏனெனில், ஆப்கானிஸ்தானை மீண்டும் தலிபான்களிடமே ஒப்படைத்திருக்கிறது அமெரிக்கா. உலக அரசியலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்கே திரும்பியிருக்கிறது. 

 

அமெரிக்காவின் வர்த்தக மையத்தின் மீதான தாக்குதல் நடந்து 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (11.09.2021) அனுசரிக்கப்பட்டுவருகிறது. பொதுமக்கள் பலரும் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

50 ஆண்டுகால பழமையான கட்டடம் இடிக்கும்போது நடந்த விபரீதம்!

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

The tragedy that happened when the 50-year-old building was demolished!

 

சென்னை கொருக்குப்பேட்டையில் 50 ஆண்டுகால பழமையான கட்டடத்தை இடிக்கும்போது தளம் இடிந்து தொழிலாளர் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னையைச் சேர்ந்தவர் பலராமன். இவர் கொருக்குப்பேட்டையில் மீனாம்பாள் நகரில் உள்ள 50 ஆண்டுகால பழமையான சிதிலமடைந்த வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த வீடு வாங்கிய பலராமன் இரண்டு ஆண்டு காலம் ஆகியும் அங்கு புதிய வீடு கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, அந்த பழமையான வீடு இடியும் தருவாயும் இருந்ததால் அச்சத்தில் இருந்த அப்பகுதி மக்கள் சென்னை மாநகராட்சிக்கு புகார் அளித்தனர்.

 

அந்த புகாரின் பேரில் சென்னை மாநகராட்சி, அந்த வீட்டை 15 நாட்களுக்குள் இடிக்க வேண்டும் என்று பலராமனுக்கு உத்தரவிட்டது. இதனால், பலராமன் திருவண்ணாமலையைச் சேர்ந்த 3 தொழிலாளர்களை அழைத்து கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதில் 2 தொழிலாளர்கள் கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது தளம் இடிந்து அந்த கட்டடத்தில் சிக்கினர். இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

 

தகவல் அறிந்து அங்கு வந்த மீட்புத்துறையினர், இடிபாடுகளில் சிக்கிய இருவரையும் மீட்டனர். இதில் சின்னதம்பி (55) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு இடிபாடுகளில் சிக்கிய மற்றொரு தொழிலாளியான சுரேஷ் என்பவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அங்கு வேலை செய்து கொண்டிருந்த மேஸ்திரி ஒருவர் தலைமறைவாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து ஆர்.கே.நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

Next Story

தந்தையின் மரணம்... நியூயார்க் போலீஸில் சாதித்துக் காட்டிய இந்திய வம்சாவளி பெண்

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

new york police pratima bhullar maldonado oppited captain 

 

நியூயார்க் காவல்துறையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த பிரதிமா புல்லர் மால்டோனாடோ என்பவர் தனது ஒன்பது வயது வரையில் இந்தியாவில் வளர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு தான் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து வசித்து வருகிறார். டாக்சி டிரைவராக இருந்த இவரது தந்தை கடந்த 2006 ஆம் ஆண்டு காலமான நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக நியூயார்க் காவல்துறையில் காவலராக இணைந்த பிரதிமா அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள குயின்ஸ் நகரில் உள்ள சவுத் ரிச்மண்ட் ஹில்லில் என்ற இடத்தில் 102வது போலீஸ் வளாகத்தை நடத்தி வருகிறார்.

 

மேலும் தனது கடின உழைப்பால் காவல் துறையில் அடுத்தடுத்து பதவி உயர்வுகளைப் பெற்ற பிரதிமாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நியூயார்க் காவல்துறையில் கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன்மூலம் நியூயார்க் காவல்துறையில் மிக உயர்ந்த பதவியை பெற்ற இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையுடன், நியூயார்க் காவல்துறையில் மிக உயர்ந்த பதவியை பெறும் தெற்காசிய பெண் என்ற பெருமையையும் பிரதிமா பெற்றுள்ளார். பிரதிமாவிற்கு நான்கு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல்வேறு தரப்பில் இருந்தும் பிரதிமாவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.