Skip to main content

இரண்டு நிமிடம் 'கட்' அடித்த பணியாளர்! - மூன்று மாத சம்பளத்தைக் குறைத்த ஜப்பான்!

Published on 17/03/2021 | Edited on 17/03/2021

 

JAPAN

 

ஜப்பானில் புனபாஷி நகர கல்வி வாரியத்தின் அதிகாரிகள் சிலர், தங்கள் அலுவலகத்தை விட்டு, பணிநேரத்தை விட சற்று முன்னதாகக் கிளம்பியுள்ளனர். முன்னதாக என்றால் ஒரு மணிநேரமோ, இரண்டு மணிநேரமோ முன்னதாக அல்ல. வெறும் இரண்டு நிமிடம் முன்னதாகக் கிளம்பிச் சென்றுள்ளனர். இதுபோல் அலுவலகத்தை விட்டு முன்னதாகக் கிளம்பிச் செல்லும் சம்பவங்கள் மே 2019 மற்றும் ஜனவரி 2021 இடையே 316 முறை நடந்துள்ளது.

 

மேலும் அவ்வாறு கிளம்பிச் செல்பவர்கள், சற்று முன்னதாகக் கிளம்பிச் செல்வதற்காக தங்களது அட்டைகளில் தவறான நேரத்தைக் குறித்துள்ளனர். இதற்கு 59 வயதான மூத்த அதிகாரி உதவி செய்துள்ளார். இதனைக் கண்டுபிடித்த கல்வி வாரிய நிர்வாகம், இரண்டு நிமிடங்கள் முன்னதாகக் கிளம்பிய பெண்ணுக்கு 10-ல் ஒரு பங்கு சம்பளத்தை மூன்று மாதங்களுக்குப் பிடித்தம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த தண்டனைக்கு ஆளான பெண், 5.17 மணிக்கு வரும் பேருந்தில் பயணம் மேற்கொள்ள, அலுவலக நேரமான 5.15-க்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பு அலுவலகத்திலிருந்து கிளம்பியுள்ளார்.

 

அந்தப் பெண்ணைத் தவிர்த்து, இரண்டு மூத்த அதிகாரிகளுக்கு எழுத்துப் பூர்வமான எச்சரிக்கையும், நான்கு பேருக்கு நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானில் நடந்த இந்தச் சம்பவம், தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Powerful earthquake in Japan

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. சுமார் 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கின. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி  இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  படுகாயம் அடைந்த 800க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் முன்னெச்சரிக்கையாக இந்தோனேசியா மற்றூம் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகின. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளொகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. 

Next Story

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Powerful earthquake in Taiwan; Tsunami warning in Japan

தைவானில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கி உள்ளன. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

அதே சமயம் தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.