Skip to main content

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

 

Powerful earthquake in the Philippines

 

துருக்கி மற்றும் சிரியாவில் அண்மையில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அடுத்தடுத்து ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இரு நாடுகளிலும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சரிந்ததால் குடியிருப்புகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நிலநடுக்கப் பாதிப்பில் துருக்கி, சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதுவரை மொத்த உயிரிழப்பு 40 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

இதனையடுத்து நேற்று நியூசிலாந்தின் வெலிங்டன்னில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். ஏற்கனவே நியூசிலாந்தில் கேப்ரியல் புயலால் வெள்ளம் ஏற்பட்டு கடும் சேதத்தை சந்தித்து வரும் நிலையில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களை கடும் கவலைக்குள் ஆழ்த்தியுள்ளது. 

 

இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்துள்ளனர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !