Skip to main content

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் உறைந்த மக்கள்

Published on 25/03/2025 | Edited on 25/03/2025
Powerful earthquake; people frozen in fear

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்த சம்பவம் நியூசிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தின் மேற்கு பகுதியில் இந்திய நேரப்படி காலை 7:13 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தற்பொழுது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வெளியே ஓடிவந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

சார்ந்த செய்திகள்