Skip to main content

கொலை செய்யப்பட்ட பிரபல நடிகை... சகோதரனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்...

Published on 27/09/2019 | Edited on 27/09/2019

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தின் போது இந்தியாவில் பிரபலமானவர் பாகிஸ்தான் நடிகை மற்றும் மாடலான குவான்டீல் பலூச்.

 

pakistani actress case verdict

 

 

அந்த போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக அவர் பதிவிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, அவரை இணைய பிரபலமாகியது. மேலும், போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அப்ரிடி என்ன சொன்னாலும் அதை நான் செய்வேன் எனவும் அந்த வீடியோவில் குவான்டீல் பலூச் அறிவித்திருந்தார். அவரின் இந்த வீடியோவுக்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்த சூழலில், 2016 ஜூலை 15 அன்று அவர், அவரது வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு குடும்ப கவுரவத்தை சீர்குலைத்ததால் கழுத்தை நெறித்து, அவரை கொன்று விட்டதாக குவான்டீல் பலூச்சின் சகோதரர் முஹம்மது வாசிம் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், குவான்டீல் பலூச்சின் சகோதரர் முஹம்மது வாசிமுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

டி-20 உலகக்கோப்பை; அபார வெற்றி பெற்ற இந்திய அணி!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
indian team amazing win in T-20 World Cup

டி20 உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நேற்று முன்தினம் (27.06.2024) இரவு கயானாவில் நடைபெற்றது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 171 ரன்களை சேர்த்தது. 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக இங்கிலாந்து அணி 16 ஓவர்கள் 4 பந்துகளில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான 2வது அரையிறுதிப்போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. 

இந்த நிலையில், இன்று (29-06-24) நடைபெறும் டி-20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியோடு மோதும் இந்தியா அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, 5 பந்துகளில் 2 பவுண்டரிகள் அடித்து 9 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் ஹோலி, 59 பந்துகளில் 2 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடித்து 76 ரன்கள் எடுத்து அவுட்டாகி மைதானத்தை விட்டு வெளியேறினார். அக்ஸர் படேல் 47 ரன்கள் எடுத்தும், சிவம் துபே 27 ரன்கள் எடுத்தும் அவுட்டானார்கள். இறுதியாக இந்தியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

இந்திய அணிக்கு எதிராக பந்து வீசிய தென்னாப்பிரிக்கா அணியின் மகாராஜ் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர். மேலும், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.  

இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது. அதில், குயின்டன் டி காக் 31 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்சர்கள் எடுத்து 39 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹென்ரிச் கிளாசென் 27 பந்துகளில் 2 சிக்சர்கள் 5 பவுண்டரிகள் அடித்து 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 21 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்சர்கள் அடித்து 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியாக 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தனர். இதன் மூலம், டி-20 உலகக்கோப்பை 2024 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது. மேலும், டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது. 

Next Story

தொடங்கியது டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
The T-20 World Cup final has begun!

டி20 உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நேற்று முன்தினம் (27.06.2024) இரவு கயானாவில் நடைபெற்றது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 171 ரன்களை சேர்த்தது. 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக இங்கிலாந்து அணி 16 ஓவர்கள் 4 பந்துகளில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான 2வது அரையிறுதிப்போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. 

இந்த நிலையில், இன்று (29-06-24) நடைபெறும் டி-20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியோடு மோதும் இந்தியா அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த இறுதிப்போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், துபே, பாண்ட்யா, ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் அக்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். 

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் கிர்க்கெட் தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இரு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடுவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.