Skip to main content

லண்டலில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம்..! டெல்லி வழக்கறிஞர் ராம்சங்கர், இ.கம்யூ டி. ராஜா பங்கேற்பு..!

Published on 17/05/2021 | Edited on 18/05/2021

 

Mullivaikkal Memorial Day Meeting on behalf of Delhi Tamil Lawyers Association ..!
                                                     கோப்புப் படம் 

 

டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கூட்டம் வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில் வருடா வருடம் மே மாதம் 18ஆம் தேதி நடைபெறும். இந்த இரங்கல் கூட்டத்தில் எப்போதும் வழக்கறிஞர் ராம்சங்கர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி ராஜா ஆகியோர் கலந்துகொள்வர். ஆனால், தற்போது இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாகப் பரவிவருவதால், இந்த முறை இக்கூட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, லண்டனில் உள்ள பிரித்தானியத் தமிழர் பேரவை சார்பாக இங்கிலாந்து எம்.பி க்கள் பங்கேற்போடு நடைபெறும் நிகழ்வில் வழக்கறிஞர் ராம்சங்கர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி ராஜா ஆகியோர் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், கரோனா பரவல் காரணமாக இருவரும் இதில் கலந்துகொள்ளவில்லை. அதனால், அவர்கள் இவ்விரங்கல் கூட்டத்திற்கு தங்களது இரங்கலை ஒலி வடிவில் அனுப்பியுள்ளனர். 

 

Mullivaikkal Memorial Day Meeting on behalf of Delhi Tamil Lawyers Association ..!

 

இதில் இரங்கல் தெரிவித்திருக்கும் வழக்கறிஞர் ராம்சங்கர், “உலகம் இந்த மே மாதத்தை, உலக தொழிலாளர்கள் தினம் (மே,1), உலக பத்திரிகை சுதந்திர தினம்  (மே,3), உலக விளையாட்டு தினம்  (மே,7) , உலக செஞ்சிலுவை  தினம்  (மே,8) , உலக தாய்மார்கள் தினம்  (மே,10), உலக செவிலியர்கள் தினம்  (மே,12) உலக ஆயுதப் படைகள்  தினம் (மே, 16) உலக தகவல்தொடர்பு தினம் (மே, 17) எனக் கொண்டாடுகிறது. ஆனால் நாம் இலங்கையில் நமது மக்கள் கொன்று குவிக்கப்பட்ட மே 18-யை  மெல்ல மெல்ல மறந்து வருகிறோம்.  உலகம் முழுவதும் நம் தமிழ் மக்கள், குறிப்பாகத்  தமிழக  அரசியல் கட்சிகள் இதை மறப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. 

 

ஐக்கிய நாடுகள் சபை, உலக மனித உரிமைகள் ஆணையம் உட்பட பல்வேறு நாடுகள் இந்த தமிழ் இனப் படுகொலைக்குக் காரணமான இலங்கை அரசும் அதன் பொறுப்பாளர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் உலகளாவிய போர்க் குற்றச் சட்டங்களின் படி  தண்டனை தரவேண்டும்  என்பது உலகின் பெரும்பாலான நாடுகள் தொடர்ந்து 11 ஆண்டுகளாக வலியுறுத்துகிறது.  ஆனால் 11 ஆண்டுகள் கடந்தபின்னும் இன்று வரை நீதி கிடைக்கவில்லை என்பதே உண்மை மற்றும் வேதனை. 

 

இந்த இனப் படுகொலைக்கு இந்திய ராணுவத்தின் மறைமுக பங்கு உள்ளதைக் குறித்து விசாரிக்க வேண்டும் என்று நான் இந்திய உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன் அதன் மீதான எனது மனுவை இன்னும் விசாரித்து வருகிறது இந்திய அரசாங்கம். என்  மனுவை இந்தியப் பிரதம அலுவலகம் உள்துறை அமைச்சகத்திற்கு  அனுப்பியது , உள்துறை அமைச்சகம் ராணுவ  அமைச்சகத்திற்கு அனுப்பியது. இப்படியே மாறி  மாறி 2015 முதல் கடித போக்குவரத்து மட்டுமே நடந்துகொண்டு உள்ளது என்பது வேதனை.

 

தமிழ் மக்களே  நாம் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிறோம். அதுவும் நல்ல நிலையில் அனைத்து துறையிலும் கால்பதித்து அதிகார மையத்தில் உள்ள தமிழர்களும் உள்ளோம். எனவே லட்சக் கணக்கில் கொல்லப்பட்ட அப்பாவி  தமிழ் மக்கள் நம் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதை மனதில் கொண்டு அவர்கள் ஆன்ம சாந்தி  அடைய  நாம் ஒன்று இணைந்து நீதிக்காகக் குரல் கொடுக்க வேண்டும். அடுத்த முள்ளி வாய்க்கால் தினத்தைத் துக்க நாளாக அனுசரிக்காமல் அதற்கு காரணமானவர்களைத் தண்டிக்கவும் தமிழர்களின் கனவு தேசம் மெய்ப்படவும் இறைவனைப்  பிரார்த்திப்போம்” என்று தெரிவித்துள்ளார். 

 

இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி ராஜா வெளியிட்டுள்ள செய்தியில், "என் இதயத்தில் மிகப்பெரிய வலியுடன் இந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் உங்களுடன் பேசுகிறேன். ஒரு இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக, இந்த பிரச்சனை குறித்து நான் பல முறை குரல்கொடுத்துள்ளேன், அதன்மூலம் இலங்கைத் தமிழர்கள் சந்தித்த கொடுமைகள் குறித்த உண்மையின் பக்கம் இந்திய மக்களின் கவனத்தையும், இந்திய நாடாளுமன்றத்தின் கவனத்தையும் திருப்பியுள்ளேன். இலங்கையின் அண்டை நாடாக, போர்க் காலத்தில் அங்குள்ள மக்களுக்கு என்ன கொடுமைகள் நடக்கின்றன, நடந்தன என்பதை இந்தியா அறியச்செய்தோம். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மிகமோசமான ஒரு சம்பவமாக இது இருந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

 

Mullivaikkal Memorial Day Meeting on behalf of Delhi Tamil Lawyers Association ..!

 

இன்றும் கூட ஆயிரக்கணக்கான தமிழ் பெண்கள் தங்களது கணவருக்கோ, தந்தைக்கோ அல்லது தனது சகோதரருக்கோ என்ன நேர்ந்தது என்பதைக் கூட தெரிந்துகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டனர். தமிழ மக்களின் நலன்களை இலங்கை ராணுவம் அபகரித்துக்கொண்டது. இன்றளவும் கூட தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் வன்முறையைக் கட்டவிழ்த்துக்கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட ஜஃப்னா பல்கலைக்கழகத்திலிருந்த நினைவிடம், முள்ளிவாய்க்கால் நினைவிடம் சேதப்படுத்தப்பட்டன. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. சமத்துவமோ, அடிப்படை உரிமைகளோ அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இலங்கைத் தமிழர்கள் குறித்த பிரச்சனையை அனைவரிடமும் கொண்டுசேர்த்த கட்சிகளில் கம்யூனிஸ்ட்  கட்சியும் மிக முக்கியமானது. அது இனியும் தொடரும். உண்மை நிச்சயம் வெல்லும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர்.