சீனாவில் பரவியுள்ள கொரானா வைரஸ் உலக நாடுகளையே பீதியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. மருத்துவ பல்கலைக் கழகம்
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
உள்ள வுஹான் நகரில் இருந்தே இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் அந்த நகரில் இருந்து யாரும் வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.
யார் தும்மினாலும் உடனடியாக தூக்கிச் சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் வைரஸ் பரவலையும் உயிர் இழப்புகளையும் தடுக்க முடியாமல் சீனா தவித்து வருகிறது. இதைப் பார்த்து உலக நாடுகளும் தங்கள் நாட்டவர்களை பத்திரமாக மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் மாஸ்க் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து 14 நாட்களுக்குள் வெளியேறி எங்கே சென்றாலும் அவர்களை மருத்துவப் பரிசோதனைக்காக தேடிப் பிடிக்கின்றனர்.
சீனாவுக்கு அருகில் உள்ள மக்காவ் தீவில் சூதாட்டத்திற்காக வரும் சீனர்களின் எண்ணிக்கை குறையவில்லை. அப்படி வருபவர்களை சோதித்து இதுவரை 6 பேருக்கு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் கடந்த 14 நாட்களில் சீனாவில் இருந்து மக்காவ் தீவுக்கு வந்தவர்களின் பட்டியலை எடுத்து வீடு, விடுகளில் அவர்களை தேடு வருகின்றனர்.
இந்த நிலையில் தான் மக்காவ் - சீனா எல்லைக் கேட் பகுதியை தான்டி சீனா வில் உள்ள ஸூஹாய் என்ற நகரில் பொருட்கள் வாங்க காலை முதல் இரவு 12 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் 27 ந் தேதி முதல் இரவு 10 மணிக்கு பிறகு அனுமதி ரத்து செய்யப்படுகிறது. வைரஸ் மேலும் பரவத் தொடங்கியதால் இப்படி ஒவ்வொரெு நகரமாக மூடப்பட்டு வருகிறது.